FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, April 13, 2019

சைகை மொழிக்கான புதிய செயலி அறிமுகம் செய்தது, 'எல் அண்டு டி'

11.04.2019
சென்னை : காது கேளாதோரின் சைகை மொழிக்கான புதிய செயலியை, 'எல் அண்டு டி' நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.கட்டுமான துறையில் முன்னிலை வகிக்கும், 'லார்சன் அண்டு டூப்ரோ' நிறுவனம், சமுதாய சேவை பிரிவில், பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காது கேளாதோர் அறக்கட்டளையுடன் இணைந்து, காது கேளாதோர், மற்றவர்களுடன் சகஜமாக சைகை மொழியில் கலந்துரையாட வசதியாக, செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் அறிமுக விழா, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, எல் அண்டு டி வளாகத்தில் நடந்தது.
சைகை மொழி செயலி குறித்து, எல் அண்டு டி நிறுவனத்தின், சமுதாய சேவை பிரிவு மூத்த மேலாளர், ராஜசேகர்பாண்டியன், காது கேளாதோர் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, ரம்யா மெரியால் ஆகியோர் கூறியதாவது:உலகில், காது கேளாதோர் எண்ணிக்கை அதிகம் உடைய நாடு இந்தியா. இதில், மிகக் குறைந்த சதவீதத்தினருக்கு மட்டுமே, சைகை மொழி, உள்ளூர் மொழி ஆகியவை இணைந்த, இரு மொழிக் கல்வி கிடைக்கிறது.இந்த செயலி வழியாக வாய் பேசாதோர், காது கேளாதோர் மற்றும், பொதுமக்களும் சைகை மொழியை மிக எளிதாக கற்கலாம்.
இதற்காக, தற்போது புழக்கத்தில் உள்ள, 5,000 சைகைகள், ஆங்கில சொற்றொடர்கள், வீடியோக்கள், வரைபடங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.இந்த செயலியை, மற்றவர்கள் கற்பதன் வாயிலாக, மாற்று திறன் கொண்டவர்களுடன் சகஜமாக சைகை மொழியில் பேச முடியும். இந்த செயலியில் தொடர்ந்து, பல வார்த்தைகள் பதிவேற்றம் செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட காதுகேளாதோர் பள்ளிகளிலும், இந்தியாவில் உள்ள, 600க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளிலும் இந்த செயலிக்கான, 'பென் டிரைவ்'வை, இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். கூகுளில் சென்று, 'DEF-ISL' என, 'டைப்' செய்து, செயலியை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment