FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, April 13, 2019

சைகை மொழிக்கான புதிய செயலி அறிமுகம் செய்தது, 'எல் அண்டு டி'

11.04.2019
சென்னை : காது கேளாதோரின் சைகை மொழிக்கான புதிய செயலியை, 'எல் அண்டு டி' நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.கட்டுமான துறையில் முன்னிலை வகிக்கும், 'லார்சன் அண்டு டூப்ரோ' நிறுவனம், சமுதாய சேவை பிரிவில், பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காது கேளாதோர் அறக்கட்டளையுடன் இணைந்து, காது கேளாதோர், மற்றவர்களுடன் சகஜமாக சைகை மொழியில் கலந்துரையாட வசதியாக, செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் அறிமுக விழா, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, எல் அண்டு டி வளாகத்தில் நடந்தது.
சைகை மொழி செயலி குறித்து, எல் அண்டு டி நிறுவனத்தின், சமுதாய சேவை பிரிவு மூத்த மேலாளர், ராஜசேகர்பாண்டியன், காது கேளாதோர் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, ரம்யா மெரியால் ஆகியோர் கூறியதாவது:உலகில், காது கேளாதோர் எண்ணிக்கை அதிகம் உடைய நாடு இந்தியா. இதில், மிகக் குறைந்த சதவீதத்தினருக்கு மட்டுமே, சைகை மொழி, உள்ளூர் மொழி ஆகியவை இணைந்த, இரு மொழிக் கல்வி கிடைக்கிறது.இந்த செயலி வழியாக வாய் பேசாதோர், காது கேளாதோர் மற்றும், பொதுமக்களும் சைகை மொழியை மிக எளிதாக கற்கலாம்.
இதற்காக, தற்போது புழக்கத்தில் உள்ள, 5,000 சைகைகள், ஆங்கில சொற்றொடர்கள், வீடியோக்கள், வரைபடங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.இந்த செயலியை, மற்றவர்கள் கற்பதன் வாயிலாக, மாற்று திறன் கொண்டவர்களுடன் சகஜமாக சைகை மொழியில் பேச முடியும். இந்த செயலியில் தொடர்ந்து, பல வார்த்தைகள் பதிவேற்றம் செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட காதுகேளாதோர் பள்ளிகளிலும், இந்தியாவில் உள்ள, 600க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளிலும் இந்த செயலிக்கான, 'பென் டிரைவ்'வை, இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். கூகுளில் சென்று, 'DEF-ISL' என, 'டைப்' செய்து, செயலியை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment