FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, April 13, 2019

சைகை மொழிக்கான புதிய செயலி அறிமுகம் செய்தது, 'எல் அண்டு டி'

11.04.2019
சென்னை : காது கேளாதோரின் சைகை மொழிக்கான புதிய செயலியை, 'எல் அண்டு டி' நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.கட்டுமான துறையில் முன்னிலை வகிக்கும், 'லார்சன் அண்டு டூப்ரோ' நிறுவனம், சமுதாய சேவை பிரிவில், பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காது கேளாதோர் அறக்கட்டளையுடன் இணைந்து, காது கேளாதோர், மற்றவர்களுடன் சகஜமாக சைகை மொழியில் கலந்துரையாட வசதியாக, செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் அறிமுக விழா, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, எல் அண்டு டி வளாகத்தில் நடந்தது.
சைகை மொழி செயலி குறித்து, எல் அண்டு டி நிறுவனத்தின், சமுதாய சேவை பிரிவு மூத்த மேலாளர், ராஜசேகர்பாண்டியன், காது கேளாதோர் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, ரம்யா மெரியால் ஆகியோர் கூறியதாவது:உலகில், காது கேளாதோர் எண்ணிக்கை அதிகம் உடைய நாடு இந்தியா. இதில், மிகக் குறைந்த சதவீதத்தினருக்கு மட்டுமே, சைகை மொழி, உள்ளூர் மொழி ஆகியவை இணைந்த, இரு மொழிக் கல்வி கிடைக்கிறது.இந்த செயலி வழியாக வாய் பேசாதோர், காது கேளாதோர் மற்றும், பொதுமக்களும் சைகை மொழியை மிக எளிதாக கற்கலாம்.
இதற்காக, தற்போது புழக்கத்தில் உள்ள, 5,000 சைகைகள், ஆங்கில சொற்றொடர்கள், வீடியோக்கள், வரைபடங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.இந்த செயலியை, மற்றவர்கள் கற்பதன் வாயிலாக, மாற்று திறன் கொண்டவர்களுடன் சகஜமாக சைகை மொழியில் பேச முடியும். இந்த செயலியில் தொடர்ந்து, பல வார்த்தைகள் பதிவேற்றம் செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட காதுகேளாதோர் பள்ளிகளிலும், இந்தியாவில் உள்ள, 600க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளிலும் இந்த செயலிக்கான, 'பென் டிரைவ்'வை, இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். கூகுளில் சென்று, 'DEF-ISL' என, 'டைப்' செய்து, செயலியை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment