FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, April 13, 2019

சைகை மொழிக்கான புதிய செயலி அறிமுகம் செய்தது, 'எல் அண்டு டி'

11.04.2019
சென்னை : காது கேளாதோரின் சைகை மொழிக்கான புதிய செயலியை, 'எல் அண்டு டி' நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.கட்டுமான துறையில் முன்னிலை வகிக்கும், 'லார்சன் அண்டு டூப்ரோ' நிறுவனம், சமுதாய சேவை பிரிவில், பல்வேறு சமூக நல பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காது கேளாதோர் அறக்கட்டளையுடன் இணைந்து, காது கேளாதோர், மற்றவர்களுடன் சகஜமாக சைகை மொழியில் கலந்துரையாட வசதியாக, செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.இதன் அறிமுக விழா, சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள, எல் அண்டு டி வளாகத்தில் நடந்தது.
சைகை மொழி செயலி குறித்து, எல் அண்டு டி நிறுவனத்தின், சமுதாய சேவை பிரிவு மூத்த மேலாளர், ராஜசேகர்பாண்டியன், காது கேளாதோர் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி, ரம்யா மெரியால் ஆகியோர் கூறியதாவது:உலகில், காது கேளாதோர் எண்ணிக்கை அதிகம் உடைய நாடு இந்தியா. இதில், மிகக் குறைந்த சதவீதத்தினருக்கு மட்டுமே, சைகை மொழி, உள்ளூர் மொழி ஆகியவை இணைந்த, இரு மொழிக் கல்வி கிடைக்கிறது.இந்த செயலி வழியாக வாய் பேசாதோர், காது கேளாதோர் மற்றும், பொதுமக்களும் சைகை மொழியை மிக எளிதாக கற்கலாம்.
இதற்காக, தற்போது புழக்கத்தில் உள்ள, 5,000 சைகைகள், ஆங்கில சொற்றொடர்கள், வீடியோக்கள், வரைபடங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.இந்த செயலியை, மற்றவர்கள் கற்பதன் வாயிலாக, மாற்று திறன் கொண்டவர்களுடன் சகஜமாக சைகை மொழியில் பேச முடியும். இந்த செயலியில் தொடர்ந்து, பல வார்த்தைகள் பதிவேற்றம் செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட காதுகேளாதோர் பள்ளிகளிலும், இந்தியாவில் உள்ள, 600க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளிலும் இந்த செயலிக்கான, 'பென் டிரைவ்'வை, இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். கூகுளில் சென்று, 'DEF-ISL' என, 'டைப்' செய்து, செயலியை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment