FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, April 13, 2019

தைரியமாக வரலாம்!


உடுமலை : மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள ஓட்டுச்சாவடிகளில், செய்கை மொழி பெயர்ப்பாளர்கள் நியமித்தல் உட்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்காக தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.உடுமலை தொகுதியிலுள்ள, 293 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நிலை, 1,2,3 என 1,381 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மடத்துக்குளம் தொகுதி யிலுள்ள, 287 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,318 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. 

உடுமலை தொகுதிக்கு, ஜி.வி.ஜி., கல்லுாரியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கு, வித்யாசாகர் கல்லுாரியிலும் நடந்தது. அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், காங்கயம் தொகுதிகளை சேர்ந்தவர்கள், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் பங்கேற்றனர். பயிற்சியில், ஓட்டுச்சாவடிகளின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துதல், ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' இயந்திரங்களை கையாளுதல், ஓட்டுப்பதிவுக்கு முன்பும், பின்பும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கப்பட்டது. மண்டலம் வாரியாக அலுவலர்கள் பிரிக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' குறித்து மண்டல அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஓட்டுப்பதிவுக்காக, படிவம், 13 ஏ, 13 பி, 13 சி. ஆகிய படிவங்கள் வழங்கப்பட்டன. 

சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கான பேலட் பேப்பர்கள் கவரில் வைத்து வழங்கப்பட்டது.படிவம் வழங்கவும், சான்று அளிக்கவும் இரண்டு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், படிவத்தை பெற்று பதிவு செய்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டியில் போட்டனர். அதே போல், உடுமலை, மடத்துக்குளம் தொகுதி ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்ற தொகுதிகளுக்கு பணிக்கு சென்றுள்ளனர்.இந்த தேர்தலில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை எட்ட தேர்தல் கமிஷன் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.இதில், மாற்றுத்திறனாளிகள் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யவும் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டுச் சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், சாய்வு தளம் அமைக்கப்பட்டு, சக்கர நாற்காலிகள் மற்றும் ஓட்டுச் சாவடிகளுக்கு அழைத்து வர தனி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள ஓட்டுச் சாவடிகளில், செய்கை மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக, 93852 86604 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம். இதில், வாக்காளார் அடையாள அட்டை எண், தொகுதி, பெயர், பாகம் எண், ஓட்டுச்சாவடி உள்ளிட்ட தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம். தனியாக உருவாக்கப்பட்டுள்ள 'வாட்ஸ் அப்' குழு மூலமும் அறிந்து, மாற்றுத்திறனாளிகள் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும், என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment