FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, April 13, 2019

தைரியமாக வரலாம்!


உடுமலை : மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள ஓட்டுச்சாவடிகளில், செய்கை மொழி பெயர்ப்பாளர்கள் நியமித்தல் உட்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்காக தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.உடுமலை தொகுதியிலுள்ள, 293 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நிலை, 1,2,3 என 1,381 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மடத்துக்குளம் தொகுதி யிலுள்ள, 287 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,318 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. 

உடுமலை தொகுதிக்கு, ஜி.வி.ஜி., கல்லுாரியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கு, வித்யாசாகர் கல்லுாரியிலும் நடந்தது. அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், காங்கயம் தொகுதிகளை சேர்ந்தவர்கள், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் பங்கேற்றனர். பயிற்சியில், ஓட்டுச்சாவடிகளின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துதல், ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' இயந்திரங்களை கையாளுதல், ஓட்டுப்பதிவுக்கு முன்பும், பின்பும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கப்பட்டது. மண்டலம் வாரியாக அலுவலர்கள் பிரிக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' குறித்து மண்டல அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஓட்டுப்பதிவுக்காக, படிவம், 13 ஏ, 13 பி, 13 சி. ஆகிய படிவங்கள் வழங்கப்பட்டன. 

சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கான பேலட் பேப்பர்கள் கவரில் வைத்து வழங்கப்பட்டது.படிவம் வழங்கவும், சான்று அளிக்கவும் இரண்டு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், படிவத்தை பெற்று பதிவு செய்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டியில் போட்டனர். அதே போல், உடுமலை, மடத்துக்குளம் தொகுதி ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்ற தொகுதிகளுக்கு பணிக்கு சென்றுள்ளனர்.இந்த தேர்தலில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை எட்ட தேர்தல் கமிஷன் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.இதில், மாற்றுத்திறனாளிகள் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யவும் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டுச் சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், சாய்வு தளம் அமைக்கப்பட்டு, சக்கர நாற்காலிகள் மற்றும் ஓட்டுச் சாவடிகளுக்கு அழைத்து வர தனி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள ஓட்டுச் சாவடிகளில், செய்கை மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக, 93852 86604 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம். இதில், வாக்காளார் அடையாள அட்டை எண், தொகுதி, பெயர், பாகம் எண், ஓட்டுச்சாவடி உள்ளிட்ட தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம். தனியாக உருவாக்கப்பட்டுள்ள 'வாட்ஸ் அப்' குழு மூலமும் அறிந்து, மாற்றுத்திறனாளிகள் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும், என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment