FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, April 13, 2019

தைரியமாக வரலாம்!


உடுமலை : மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள ஓட்டுச்சாவடிகளில், செய்கை மொழி பெயர்ப்பாளர்கள் நியமித்தல் உட்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்காக தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.உடுமலை தொகுதியிலுள்ள, 293 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நிலை, 1,2,3 என 1,381 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மடத்துக்குளம் தொகுதி யிலுள்ள, 287 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,318 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. 

உடுமலை தொகுதிக்கு, ஜி.வி.ஜி., கல்லுாரியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கு, வித்யாசாகர் கல்லுாரியிலும் நடந்தது. அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், காங்கயம் தொகுதிகளை சேர்ந்தவர்கள், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் பங்கேற்றனர். பயிற்சியில், ஓட்டுச்சாவடிகளின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துதல், ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' இயந்திரங்களை கையாளுதல், ஓட்டுப்பதிவுக்கு முன்பும், பின்பும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கப்பட்டது. மண்டலம் வாரியாக அலுவலர்கள் பிரிக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' குறித்து மண்டல அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஓட்டுப்பதிவுக்காக, படிவம், 13 ஏ, 13 பி, 13 சி. ஆகிய படிவங்கள் வழங்கப்பட்டன. 

சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கான பேலட் பேப்பர்கள் கவரில் வைத்து வழங்கப்பட்டது.படிவம் வழங்கவும், சான்று அளிக்கவும் இரண்டு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், படிவத்தை பெற்று பதிவு செய்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டியில் போட்டனர். அதே போல், உடுமலை, மடத்துக்குளம் தொகுதி ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்ற தொகுதிகளுக்கு பணிக்கு சென்றுள்ளனர்.இந்த தேர்தலில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை எட்ட தேர்தல் கமிஷன் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.இதில், மாற்றுத்திறனாளிகள் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யவும் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டுச் சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், சாய்வு தளம் அமைக்கப்பட்டு, சக்கர நாற்காலிகள் மற்றும் ஓட்டுச் சாவடிகளுக்கு அழைத்து வர தனி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள ஓட்டுச் சாவடிகளில், செய்கை மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக, 93852 86604 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம். இதில், வாக்காளார் அடையாள அட்டை எண், தொகுதி, பெயர், பாகம் எண், ஓட்டுச்சாவடி உள்ளிட்ட தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம். தனியாக உருவாக்கப்பட்டுள்ள 'வாட்ஸ் அப்' குழு மூலமும் அறிந்து, மாற்றுத்திறனாளிகள் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும், என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment