FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, April 13, 2019

தைரியமாக வரலாம்!


உடுமலை : மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள ஓட்டுச்சாவடிகளில், செய்கை மொழி பெயர்ப்பாளர்கள் நியமித்தல் உட்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்காக தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.உடுமலை தொகுதியிலுள்ள, 293 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நிலை, 1,2,3 என 1,381 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மடத்துக்குளம் தொகுதி யிலுள்ள, 287 ஓட்டுச்சாவடிகளுக்கு, 1,318 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது. 

உடுமலை தொகுதிக்கு, ஜி.வி.ஜி., கல்லுாரியிலும், மடத்துக்குளம் தொகுதிக்கு, வித்யாசாகர் கல்லுாரியிலும் நடந்தது. அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு, தெற்கு, தாராபுரம், காங்கயம் தொகுதிகளை சேர்ந்தவர்கள், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்கள் பங்கேற்றனர். பயிற்சியில், ஓட்டுச்சாவடிகளின் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்துதல், ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' இயந்திரங்களை கையாளுதல், ஓட்டுப்பதிவுக்கு முன்பும், பின்பும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கப்பட்டது. மண்டலம் வாரியாக அலுவலர்கள் பிரிக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரம், 'விவிபேட்' குறித்து மண்டல அலுவலர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஓட்டுப்பதிவுக்காக, படிவம், 13 ஏ, 13 பி, 13 சி. ஆகிய படிவங்கள் வழங்கப்பட்டன. 

சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கான பேலட் பேப்பர்கள் கவரில் வைத்து வழங்கப்பட்டது.படிவம் வழங்கவும், சான்று அளிக்கவும் இரண்டு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டனர். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், படிவத்தை பெற்று பதிவு செய்து, அங்கு வைக்கப்பட்டிருந்த ஓட்டுப்பெட்டியில் போட்டனர். அதே போல், உடுமலை, மடத்துக்குளம் தொகுதி ஆசிரியர்கள், அலுவலர்கள், மற்ற தொகுதிகளுக்கு பணிக்கு சென்றுள்ளனர்.இந்த தேர்தலில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கை எட்ட தேர்தல் கமிஷன் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.இதில், மாற்றுத்திறனாளிகள் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்யவும் தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டுச் சாவடிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்ல, அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், சாய்வு தளம் அமைக்கப்பட்டு, சக்கர நாற்காலிகள் மற்றும் ஓட்டுச் சாவடிகளுக்கு அழைத்து வர தனி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள ஓட்டுச் சாவடிகளில், செய்கை மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக, 93852 86604 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்கள் பெற்றுக்கொள்ளலாம். இதில், வாக்காளார் அடையாள அட்டை எண், தொகுதி, பெயர், பாகம் எண், ஓட்டுச்சாவடி உள்ளிட்ட தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம். தனியாக உருவாக்கப்பட்டுள்ள 'வாட்ஸ் அப்' குழு மூலமும் அறிந்து, மாற்றுத்திறனாளிகள் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும், என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment