FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, April 20, 2019

"ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்" - 500-க்கு 428 மதிப்பெண் பெற்ற செவித்திறனற்ற மாணவி!

20.04.2019
பிளஸ் டூ தேர்வில் 500-க்கு 428 மதிப்பெண் பெற்று, படித்த பள்ளியில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் திலகவதி. தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சி, ஆனந்தம், பூரிப்பு என அத்தனை உணர்வுகளையும் மௌனம் என்ற ஒற்றை மொழியில் வெளிப்படுத்துகிறார். பிறவியிலேயே செவித்திறன் பாதிக்கப்பட்டு, அதனால் பேச்சுத்திறனையும் இழந்தவர் திலகவதி. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியில் உள்ள செவித்திறனில்லாதோர் பள்ளியில் படித்து, பிளல் டூ-வில் தேர்ச்சிபெற்றிருக்கிறார்.

பள்ளியின் முதல்வர், ஆசிரியர் என்று அனைவரும் திலகவதியைப் பாராட்டிக்கொண்டிருக்க அவரோ, தேர்வில் தோல்வியடைந்ததால் அழுதுகொண்டிருந்த சக மாணவியைப் பெரும்பாடுபட்டு தேற்றிக்கொண்டிருந்தார். மௌன மொழி பேசும் மடந்தையின் அம்மா கற்பகத்திடம் பேசினோம். "எங்களுக்கு சொந்த ஊரு சிவகங்கை. திலகவதிதான் எங்களுக்கு முதல் குழந்தை. அவளுக்கு இரண்டு வயசு இருக்கும்போது வீட்ல ஒருநாள் ஒரு டப்பா தவறி கீழ விழுந்துச்சு. எல்லாரும் என்ன சத்தம்னு பார்த்தாங்க. ஆனா திலகவதி மட்டும் திரும்பவே இல்ல.

அப்போதான் அவளுக்கு காது கேட்கலன்னு எங்களுக்குத் தெரிய வந்துச்சு. பல டாக்டர்களைப் பாத்தோம். 'அவளுக்கு மூளை செயல்திறன் நல்லா இருக்கு... காது கேட்கிறதுக்காக சிகிச்சை செய்தா, மூளைத்திறன்ல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கு. அதனால, காதுக்கு ட்ரீட்மென்ட் பாக்குறதவிட்டுட்டு குழந்தையைப் படிக்க வைங்க'ன்னு சொல்லிட்டாங்க. எங்க பகுதியில இதுபோல ஸ்கூல் இல்ல. அதுனால, என் பொண்ண படிக்கவைக்கணும்னு சென்னைக்கு வந்தோம்.

பத்தாவதுலயும் திலகவதிதான் ஸ்கூல் ஃபர்ஸ்ட். எப்பவும் துறுதுறுன்னு இருப்பா. எங்க சொந்தக்காரங்க எல்லாம் என் பொண்ணுக்கு காது கேட்கலையேன்னு வருத்தப்படுவாங்க. ஆனா, நாங்க ஒருநாளும் அப்படி நினைச்சதேயில்லை. அவகிட்ட இருக்கிற துறுதுறுப்பு அவ குறையை மறைச்சிரும்.

நான் என் அத்தை பையனைத்தான் கல்யாணம் செஞ்சிகிட்டேன். நெருங்கின சொந்தத்துல கல்யாணம் பண்ணிகிட்டதாலதான் குழந்தைக்கு காது கேட்காமப் போயிருச்சு. என் வீட்டுக்காரரு டிரைவரா வேல பாக்குறாரு. அவர் பத்தாவது வரை படிச்சிருக்காரு. நான் வீட்டு வேலை செய்றேன். நாங்க ரெண்டு பேரும் படிக்காததால, என் பிள்ளைய நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சி இந்த ஸ்கூல்ல சேர்த்தோம்.

படிக்கிறதுல ரொம்ப ஆர்வம். சிறு வயசுலயே காலையில நாலு மணிக்கு எழுந்து ஹோம் வொர்க் செய்வா, அது இப்போ வரைக்கும் தொடருது. டி.வி. பாத்தாகூட கையில பாடப்புத்தகம் இருக்கும். படிப்புல உள்ள ஆர்வம்தான் அவளுக்கு இவ்ளோ மார்க் வாங்கிக் கொடுத்திருக்கு. முதல் மார்க் வாங்கி எங்களையும் பெருமைப்படுத்திட்டா.

ஜெயலலிதா இறந்த சமயத்துல ஒருநாள் என்கிட்ட வந்து, 'எனக்கு ஜெயலலிதா போல வரணும்னு ஆசை'ன்னு சொன்னா. 'நாம இருக்கிற நிலையில அதெல்லாம் சாத்தியம் இல்ல'ன்னு சொன்னேன். அது அவளுக்கும் தெரியும். அதனால, நான் எந்தத் துறைக்குப் போனாலும் ஜெயலலிதா மாதிரி சாதிப்பேன்னு சொல்றா. வங்கி அதிகாரியா வரணும்னு இப்போ சொல்லிட்டு இருக்கா..."என்றார் கண்களில் சந்தோஷம் மின்ன.

No comments:

Post a Comment