FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Saturday, April 13, 2019

காது கேளாதவர்களுக்கு செய்கை மூலம் செய்தி

12.04.2019
தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் வாரம் ஒருமுறை தெரிவிக்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வாரம் ஒருமுறை பேட்டி அளித்து வருகிறார். இந்த செய்தி காது கேளாதவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று, மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று சென்னை சாந்தோம் சிஎஸ்ஐ காது கேளாதோர் பள்ளியில் உள்ள ஆசிரியர் சுரேஷ் தலைமை செயலகம் வந்து, தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி அளிக்கும்போது, காது கேளாதவர்களுக்கு புரியும் வகையில் கை செய்கை மூலம் விளக்கி கூறினார். இதன்மூலம் காது கேளாதவர்களும் தேர்தல் செய்தியை டிவியை பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது.

No comments:

Post a Comment