FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, April 13, 2019

காது கேளாதவர்களுக்கு செய்கை மூலம் செய்தி

12.04.2019
தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கைகளை பொதுமக்களுக்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் வாரம் ஒருமுறை தெரிவிக்க வேண்டும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வாரம் ஒருமுறை பேட்டி அளித்து வருகிறார். இந்த செய்தி காது கேளாதவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று, மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று சென்னை சாந்தோம் சிஎஸ்ஐ காது கேளாதோர் பள்ளியில் உள்ள ஆசிரியர் சுரேஷ் தலைமை செயலகம் வந்து, தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி அளிக்கும்போது, காது கேளாதவர்களுக்கு புரியும் வகையில் கை செய்கை மூலம் விளக்கி கூறினார். இதன்மூலம் காது கேளாதவர்களும் தேர்தல் செய்தியை டிவியை பார்த்து தெரிந்து கொள்ள முடிந்தது.

No comments:

Post a Comment