FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, September 28, 2025

"காது கேட்காத அம்மாவுக்கு மிஷின் வாங்கி கொடுத்தேன்" - புதுமைப் பெண் திட்டம் பற்றி மாணவி நெகிழ்ச்சி!



25.09.2025 
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' - கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக அரசின் திட்டங்கள் விளக்கப்பட்டதுடன், பயன்பெற்ற மாணவர்கள் நேரடியாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

அந்தவகையில் புதுமைப் பெண் திட்டத்திநால் பலனடந்தது பற்றி பேசிய ரம்யா என்ற மாணவி அரங்கில் அனைவரையும் நெகிழவைத்தார். "நான் நினைக்கிற எல்லாமே என் வாழ்க்கையில நடந்துட்டு இருக்கு. நான் தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி என்ற கிராமத்தில் இருந்து வரேன். நான் திருச்சி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கிறேன் என்னுடைய அப்பா ஒரு கூலி விவசாயி. அவங்களால என்ன உயர்கல்வி படிக்க வைக்க முடியல. அதனால 'வேணாமா படிக்காத' அப்படின்னு சொல்லி விட்டுட்டாங்க.

அந்த கேப்ல நான் கொஞ்சம் வேலை பார்த்துட்டு இருந்தேன். கொஞ்ச சேவிங்ஸ் பண்ணி வச்சிருந்தேன். எதுக்காவது யூஸ் ஆகும்னு. எங்க மேம் ஒரு நாள் போன் அடிச்சு, 'ஃபீஸ் தானே கட்டிக்கலாம். வந்து காலேஜ் ஜாயின் பண்ணி விடுங்க' அப்படின்னு சொல்லி என்னை படிக்க வைக்க சொன்னாங்க.

என்ன காலேஜ்ல சேர்த்து விட்டு எனக்கு பீஸ் கட்டினாங்க. மத்தபடி என்னோட எல்லா எஜூகேஷன் செலவும் இந்த திட்டம் மூலமாக தான் செய்றேன். எனக்கு என்ன தேவையோ அது எல்லாத்தையும் வாங்கிக்கிறேன். இதுக்கு ரொம்ப நன்றி.

இந்த திட்டம் எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ணியிருக்கு. லைஃப்ல எல்லாரும் சொல்லுவாங்க அப்பா அம்மாவை எந்த இடத்திலும் விடக்கூடாதுன்னு, நான் நிறைய இடத்துல என் அப்பா அம்மா கஷ்டப்படுவதை கண்ணில் பார்த்துட்டேன்.

எங்க அம்மாவுக்கு காது கேட்காது. அதனால எல்லாரும் இந்த நிலைமையில என்ன படிக்க வைக்கணுமான்னு பேசினாங்க. என் அம்மாவுக்கு நான் போன மாசம் ஒரு காது கேட்கிற மிஷின் வாங்கி கொடுத்தேன். அந்த மிஷின்னால இப்ப எங்க அம்மா கேட்டுட்டு இருக்காங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.

மாணவி சொல்ல சொல்ல தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மொழிபெயர்த்து அவரை நெகிழவைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

மேலும் பேசிய மாணவி, "இந்த ஒரு திட்டத்தினால, எனக்கு எங்க அம்மாவுக்கு மிஷின் வாங்கி கொடுக்க முடிஞ்சதை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. எல்லோரும் படி படின்னு சொல்றீங்க, கண்டிப்பா படிக்கிறேன். நான் படித்து இதே மாதிரி அம்மாவுக்கு கண்டிப்பா காது ஆபரேஷன் பண்ணுவேன். எங்க அப்பாவுக்கும் நிறைய உடல்நிலை பிரச்னைகள் இருக்கு. அதுக்கு நிறைய கடன் வாங்கி இருக்காங்க. நான் படிச்சு கண்டிப்பா எங்க அப்பா கடன் எல்லாத்தையும் அடைப்பேன்." என்றா

மேலும் தன் பெற்றோரை நோக்கி, "நான் உங்களை எப்போதும் விட்டிட மாட்டேன். நிறையபேர் என் அம்மாவை ஹர்ட் பண்ணினாங்க. அதனாலதான் அவங்களுக்கு மிஷின் வாங்கிக்கொடுக்கத் தோனினது. நான் படிச்சு அவங்களுக்கு ஆப்பரேஷன் செய்வேன். அப்பா வாங்கின கடனை அடைப்பேன்" என்றார்.



No comments:

Post a Comment