சிவகாசி பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக்கிழமை யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகாசி பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக்கிழமை யோகாசனப் பயிற்சி அளிக்கப்பட்டது.
சிவகாசியில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் மாற்றுத் திறனாளிகள் குழுவினர், சிவகாசி -வெம்பக்கோட்டைசாலையில் உள்ள பிரம்மகுமாரிகள் அமைப்பின் தியான மண்டபத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு பொறுப்பாளர்கள் சுதா, சுகன்யா ஆகியோர் யோகாசனம், பிராணாயாமம், தியானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர். பின்னர், மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேகமாக உள்ள யோகாசனப் பயிற்சிகள் குறித்து செயல்முறைப் பயிற்சி அளித்து, அவற்றை நாள்தோறும் பின்பற்ற வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment