FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, September 23, 2025

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு



21.09.2025
ஊட்டி; ஊட்டி காது கேளாதோர் மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கான, அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் சார்பில், 'நம்பிக்கையூட்டும் கணிதம் மற்றும் நவீன அறிவியல் ' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டியன் பியூலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

இயற்கை எல்லோரையும் வஞ்சிப்பது இல்லை. ஏதேனும் ஒன்றில் குறை இருந்தால், மற்றொன்றில் நிறை இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை, கூர்மையான ஒரு சிறப்பு கொடையை வழங்கியுள்ளது. இந்த அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு சிறப்பான கருவி தான் கணிதம். மாற்றுத்திறனாளி மாணவர்கள், இயற்கை வழங்கியள்ள கொடை எது என்பதை புரிந்து, வாழ்க்கையை மேற்படுத்திக் கொள்ளலாம்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், அவருடைய கழுத்துக்கு கீழ் முழுமையாக செயலற்றிருந்த நிலையிலும், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்தார். அவரை போல, பல மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருவதை காண முடிகிறது. பார்வையை முற்றிலும் இழந்த ஒருவர், அரசு பள்ளி தலைமை ஆசிரியராக சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மாணவர், இரண்டு முதுகலை பட்டங்களை பெற்று, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதனால், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைபாடுகளை நினைத்து சோர்வடைய தேவையில்லை.

நவீன அறிவியல் பல வகைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு துணையாக நிற்கிறது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட, ஒரு ஹெல்மெட் கண் பார்வையற்றவர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் எளிதாக நடமாட துணை புரிகிறது.

ஒரு சிறிய சிலிக்கான் சிப்ஸ், கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டு அவற்றை இயற்கையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எந்த வேலையை செய்வதற்கும் மனதால் நினைத்தாலும், செயற்கை அங்கங்கள் வேலை செய்யும்.

எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை வரமாக நினைத்து செயல்பட்டால், வாழ்க்கையில் சாதிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கணிதத்தில் சிறப்பான திறமை பெற்ற மாணவர் பிரேம்குமாருக்கு, ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு செய்கை மொழியில் விளக்கினார். ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment