FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, September 23, 2025

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு



21.09.2025
ஊட்டி; ஊட்டி காது கேளாதோர் மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கான, அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் சார்பில், 'நம்பிக்கையூட்டும் கணிதம் மற்றும் நவீன அறிவியல் ' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டியன் பியூலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

இயற்கை எல்லோரையும் வஞ்சிப்பது இல்லை. ஏதேனும் ஒன்றில் குறை இருந்தால், மற்றொன்றில் நிறை இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை, கூர்மையான ஒரு சிறப்பு கொடையை வழங்கியுள்ளது. இந்த அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு சிறப்பான கருவி தான் கணிதம். மாற்றுத்திறனாளி மாணவர்கள், இயற்கை வழங்கியள்ள கொடை எது என்பதை புரிந்து, வாழ்க்கையை மேற்படுத்திக் கொள்ளலாம்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், அவருடைய கழுத்துக்கு கீழ் முழுமையாக செயலற்றிருந்த நிலையிலும், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்தார். அவரை போல, பல மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருவதை காண முடிகிறது. பார்வையை முற்றிலும் இழந்த ஒருவர், அரசு பள்ளி தலைமை ஆசிரியராக சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மாணவர், இரண்டு முதுகலை பட்டங்களை பெற்று, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதனால், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைபாடுகளை நினைத்து சோர்வடைய தேவையில்லை.

நவீன அறிவியல் பல வகைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு துணையாக நிற்கிறது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட, ஒரு ஹெல்மெட் கண் பார்வையற்றவர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் எளிதாக நடமாட துணை புரிகிறது.

ஒரு சிறிய சிலிக்கான் சிப்ஸ், கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டு அவற்றை இயற்கையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எந்த வேலையை செய்வதற்கும் மனதால் நினைத்தாலும், செயற்கை அங்கங்கள் வேலை செய்யும்.

எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை வரமாக நினைத்து செயல்பட்டால், வாழ்க்கையில் சாதிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கணிதத்தில் சிறப்பான திறமை பெற்ற மாணவர் பிரேம்குமாருக்கு, ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு செய்கை மொழியில் விளக்கினார். ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment