FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, September 28, 2025

காணொளி: டெஃப் புக்வேவ் - 'இங்கு காது கேளாதோர் தயக்கமின்றி பேசலாம்'





23 செப்டெம்பர் 2025

காது கேளாதோரை ஒருங்கிணைக்கும் சங்கத்தின் செயல்பாடுகள், அனைவரையும் ஈர்த்துள்ளன. பெங்களூருவில்தான் 'டெஃப் புக்வேவ்' முதல் அமர்வை நடத்தியது.

2025 மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்தக் குழு, சமூக வலைத்தளங்களில் விரைவில் பிரபலமடைந்தது.

அவர்களின் அமர்வுகள் சைகை மொழியில் நடக்கின்றன, ஆனால் கேட்கும் திறன் உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பாளர்கள் கூட இருப்பார்கள்.

நாட்டின் கலாசார, வரலாற்று மற்றும் புவியியல் பன்முகத்தன்மை காரணமாக இந்திய சைகை மொழி மற்ற சைகை மொழிகளிலிருந்து வேறுபடுகிறது.

இது இந்தியாவில் காது கேளாதோர் கலாசாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

'டெஃப் புக்வேவ்' எப்படி செயல்படுகிறது?

- காது கேளாதோர் சமூகத்தின் உதவியுடன், பர்மீத்தின் குழுவினர் தேதியையும் இடத்தையும் தேர்வு செய்கிறார்கள்.

காது கேளாதவர்களுக்கும், கேட்கும் திறன் உள்ளவர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

பர்மீத் ஆங்கிலக் கதைகள் அல்லது கவிதைகளைக் கொண்ட புத்தகங்களைத் தேர்வு செய்கிறார்.

- இறுதியாக, அவர் பங்கேற்பாளர்களுடன் உரையாடல் மற்றும் விவாதங்களில் ஈடுபடுகிறார்.

சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட காது கேளாத மற்றும் கேட்கும் குறைபாடுடையவர்கள் உள்ளனர்.

நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் சைகை மொழி பற்றிய பரந்த அளவிலான அறிவு பற்றாக்குறை உள்ளது.

கேட்கும் திறன் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ளவும் உரையாடவும் மிகக் குறைவான தளங்களே உள்ளதாக காது கேளாதோர் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


No comments:

Post a Comment