FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, September 28, 2025

காணொளி: டெஃப் புக்வேவ் - 'இங்கு காது கேளாதோர் தயக்கமின்றி பேசலாம்'





23 செப்டெம்பர் 2025

காது கேளாதோரை ஒருங்கிணைக்கும் சங்கத்தின் செயல்பாடுகள், அனைவரையும் ஈர்த்துள்ளன. பெங்களூருவில்தான் 'டெஃப் புக்வேவ்' முதல் அமர்வை நடத்தியது.

2025 மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்தக் குழு, சமூக வலைத்தளங்களில் விரைவில் பிரபலமடைந்தது.

அவர்களின் அமர்வுகள் சைகை மொழியில் நடக்கின்றன, ஆனால் கேட்கும் திறன் உள்ளவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்ப்பாளர்கள் கூட இருப்பார்கள்.

நாட்டின் கலாசார, வரலாற்று மற்றும் புவியியல் பன்முகத்தன்மை காரணமாக இந்திய சைகை மொழி மற்ற சைகை மொழிகளிலிருந்து வேறுபடுகிறது.

இது இந்தியாவில் காது கேளாதோர் கலாசாரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

'டெஃப் புக்வேவ்' எப்படி செயல்படுகிறது?

- காது கேளாதோர் சமூகத்தின் உதவியுடன், பர்மீத்தின் குழுவினர் தேதியையும் இடத்தையும் தேர்வு செய்கிறார்கள்.

காது கேளாதவர்களுக்கும், கேட்கும் திறன் உள்ளவர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

பர்மீத் ஆங்கிலக் கதைகள் அல்லது கவிதைகளைக் கொண்ட புத்தகங்களைத் தேர்வு செய்கிறார்.

- இறுதியாக, அவர் பங்கேற்பாளர்களுடன் உரையாடல் மற்றும் விவாதங்களில் ஈடுபடுகிறார்.

சமீபத்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட காது கேளாத மற்றும் கேட்கும் குறைபாடுடையவர்கள் உள்ளனர்.

நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் சைகை மொழி பற்றிய பரந்த அளவிலான அறிவு பற்றாக்குறை உள்ளது.

கேட்கும் திறன் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ளவும் உரையாடவும் மிகக் குறைவான தளங்களே உள்ளதாக காது கேளாதோர் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு


No comments:

Post a Comment