FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, September 28, 2025

இன்று சைகை மொழி தினம்: குரலற்றவர்களின் மொழியாக மாறி தன்னையே அர்ப்பணித்த மாமனிதர்!



செப்டம்பர் 23 சர்வதேச சைகை மொழி தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நூபுர் பரத்வாஜின் அர்ப்பணிப்பு, காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்காக இருந்து வருகிறது.

ஜெய்பூர்: வாய் பேச முடியாத, காது கேளாத மனிதர்களின் சிரமங்கள் சொல்லிமாளாது, தினசரி அவர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்த ஒன்றாக இருக்கும். ஆனால், அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் தீக்குச்சியாக இருக்கிறார் நூபுர் பரத்வாஜ். யார் இவர்? இவருக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? அவர்கள் வாழ்க்கையில் நூபுர் பரத்வாஜ் ஏற்படுத்திய மாற்றம் என்ன என்பதை அறிய ஒரு தசாப்தம் பின்னோக்கி செல்ல வேண்டும்.

சட்டக்கல்லூரி மாணவியான நூபுர் பரத்வாஜ், தனது பள்ளி காலத்திலேயே காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளின் கஷ்டத்தை நேரில் பார்த்து அறிந்தவர். தனது 10வது வயதில் 5ஆம் வகுப்பு மாணவியாக பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவர், இத்தகைய குறைபாடுடன் இருந்த சக மாணவியுடன் நட்பில் இணைந்தார். நூபுர் பரத்வாஜ் சிறுவயதில் இருந்தே, அவருடைய அப்பா சைகை மொழியில் இத்தகைய குறைபாடு உள்ளவர்களோடு பேசியதை கவனித்ததாலோ என்னவோ, அவருக்கு தனது தோழி என்ன பேசுகிறாள் என்பதை ஓரளவு ஊகிக்க முடிந்தது.

பள்ளி பருவத்தில் சக தோழியுடன் பேசிய போது, அவர்களின் கஷ்டத்தை ஓரளவு புரிந்துகொண்ட அவர், கடந்த 8 ஆண்டுகளாக அவர்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற எண்ணத்தை தனது மனதில் ஏற்றிக்கொண்டார். அதற்காக, அவர்கள் பேசுவதை மொழிபெயர்க்க ஆரம்பித்த அவர், நாளடைவில் அவர்களின் சைகை மொழியை புரிந்துகொள்ளும் அளவுக்கு தேர்ச்சி பெற்றார்.

இதுதொடர்பாக பேசும் நூபுர் பரத்வாஜ், "காது கேளாத, வாய் பேச முடியாத முடியாக மக்களுக்காக இயங்க வேண்டும் என்ற எண்ணம், சிறு வயதில் இருந்தே என் மனதில் இருந்து வந்தது. அதற்கான வாய்ப்பும் உருவான நிலையில், அவர்களின் சைகை மொழியினை திறம்பட கற்றுக்கொண்டேன். எங்கே இத்தகைய குறைபாடு உடையவர்கள் இருந்தாலும், அவர்களுக்கு என்னாலான உதவிகளை செய்ய வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக்கொண்டேன். அவர்களுக்காக தொடர்ந்து இயங்க தொடங்கினேன். அதுதான் என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட திருப்புமுனையாக அமைந்தது" என்றார்.


நூபுரின் தந்தை மனோஜ் பரத்வாஜும் காது கேளாத வாய் பேச முடியாதவர்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இதன் ஒருபகுதியாக தனது மகள் நூபுர் பரத்வாஜ் பெயரிலேயே அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.

அப்பாவின் இந்த உணர்வு அர்ப்பணிப்பு குறித்து பேசிய நூபுர் பரத்வாஜ், "அப்பா எனக்கு காது கேளாத குழந்தைகளின் போராட்டங்கள், அவர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பாகுபாடு, சமூகம் அவர்களை புறக்கணிக்கும் விதம் குறித்து சிறுவயது முதலே எனக்கு எடுத்துக்கூறியுள்ளார். சிறுவயதில் இருந்தே அப்பாவின் மூலம் இந்த கஷ்டத்தை கேட்டதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படியேனும் உதவி செய்ய வேண்டும் எண்ணம் எனக்குள் தோன்றியது. அதை தற்போது என்னுடைய படிப்பு மூலம், அவர்களின் மொழியினை புரிந்தவள் என்ற அடிப்படையிலும் செய்து வருகிறேன்" என்றார்.

சட்ட படிப்பு மூலம் காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கு எப்படியான உதவியை செய்து வருகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரு சிறுமி ஒருவருக்கு உறவினர் ஒருவரால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார். அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பதை கூட சொல்லத் தெரியவில்லை. இதனால் இந்த குற்றம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை கூட போலீசாரால் பதிவு செய்ய முடியவில்லை. சம்பவம் தொடர்பாக நான் தலையிட்டதால், அந்த சிறுமி தனக்கு நேர்ந்ததை என்னிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அந்த சிறுமிக்கு சட்ட உதவிகள் கிடைத்து" என்றார்.

செப்டம்பர் 23 சர்வதேச சைகை மொழி தினமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில், நூபுர் பரத்வாஜ் போன்றோரின் அர்ப்பணிப்பு காது கேளாத, வாய் பேச முடியாதவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்காக இருந்து வருகிறது என்றால் அது மிகையல்ல.


No comments:

Post a Comment