FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, September 13, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு



13.09.2025 
பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், மாநில அரசுகளால் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான நல்வாழ்வு மையங்களை 'திறனை மேம்படுத்தும் திட்டம்' என்ற பெயரில் 8 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள் கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016-ஐ முறையாக அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையின்போது உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, வழக்கமாக ஒரு பணியிடத்துக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் கட்ஆஃப் மதிப்பெண்களைவிட அதிகமான மதிப்பெண்களைப் பெறும் தேர்வர்களுக்கு பொதுப்பிரிவின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்போது சம்பந்தப்பட்ட பிரிவில் ஓரிடம் காலியிடமாக கருதப்பட்டு அதற்கு இடஒதுக்கீட்டின்படி உரிய கட்ஆஃப் மதிப்பெண் பெற்ற நபருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

ஆனால் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த ஒருவர் அதிகமான கட்ஆஃப் மதிப்பெண்களை பெற்றால் அவருக்கு பொதுப்பிரிவில் வேலைவாய்ப்பு வழங்க மறுப்பதுடன் மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு இடஒதுக்கீட்டின்கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது. இது மிகவும் கண்டனத்துக்குரியது.

இந்த அணுகுமுறை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016, பிரிவு 34-இன்கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை முற்றிலுமாக பாதிக்கிறது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவது உறுதியாகியுள்ளது.

இந்த விவகாரத்துக்கு உடனடியாக தீர்வுகாண்பது அவசியம்.

வறுமை போன்ற சமூக காரணிகளால் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு பாதிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான இடஒதுக்கீட்டின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்ஆஃப் மதிப்பெண்களைவிட அதிகமான மதிப்பெண்கள் பெறும்பட்சத்தில் அவர்களுக்கு பொதுப்பிரிவில் வேலைவாய்ப்பை வழங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அக்டோபர் 14-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும்.

இதே நடைமுறை பதவிஉயர்விலும் பின்பற்றப்பட வேண்டும்.

நல்வாழ்வு மையம் கண்காணிப்பு: மாநில அரசுகளால் நடத்தப்படும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு மையங்களையும் பெங்களூரு, தில்லி சட்டப் பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 8 தேசி சட்டப் பல்கலைக்கழகங்களும் 'திறனை மேம்படுத்தும் திட்டம்' என்ற தலைப்பின்கீழ் கண்காணிக்க வேண்டும். அப்போது மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்,2016 முறையாக அமல்படுத்தப்படுகிா? என்பதை பல்கலைக்கழகங்கள்ஆய்வுசெய்ய வேண்டும்.

குறிப்பாக அந்த மையங்களில் மறுவாழ்வு, அணுகல், உள்கட்டமைப்பு, கல்வி, பாதுகாப்பு, பணியாளர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மீது தனிகவனம் செலுத்த வேண்டும்.

இந்தப் பணியை மேற்கொள்ளும் 8 பல்கலைக்கழகங்களுக்கு இடைக்கால நிதியாக ரூ.25 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பல்கலைக்கழகங்களின் கண்காணிப்புக் குழுக்களுக்களான செலவுகளை மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சமூக நீதி துறைகள் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் கண்காணிப்புக் குழுக்கள் தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்து 6 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை 2026, மார்ச் 13-ஆம் தேதிக்கு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.




No comments:

Post a Comment