FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, September 21, 2025

ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !



17.09.2025
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் அதற்கு உடல் குறை தடை இருக்கக்கூடாது என முத்தமிழறிஞர் கலைஞர் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களும் சலுகைகளும் செய்துள்ளார் அதன் ஒரு பகுதியாக கடந்த 2007ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருத்த போது செவிதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆசியவிலேயே முதன்முறையாக சென்னை மாநில கல்லூரியில் பி. காம் மற்றும் பி. சி. ஏ பாடப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது 300க்கு மேற்பட்ட மாற்றுதிறனாளி மாணவர்கள் இப்பாடப்பிரிவை எடுத்து படித்து வருகின்றனர். கடந்த 18 வருடங்களாக இந்த இரண்டு பாடபிரிவிலும் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஏராளமானோர் அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென்றே இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநில கல்லூரியில் 21 கோடி ரூபாய் செலவில் பிரத்யேக விடுதியை கடந்த ஆண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இப்படி தொடர்ச்சியாக அரசு கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக குறிப்பாக செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பாடப்பிரிவு மற்றும் தனி விடுதி என திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக திட்டங்கள் வகுத்து வரும் நிலையில் புதிய வரலாற்று சாதனையாக செயற்கை நுண்ணறிவு சர்வதேச பாட பிரிவும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே முதன் முறையாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சென்னை மாநில கல்லூரியில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு இணைந்து லிப் ரீடிங் மற்றும் சைன் லாங்குவேஜ் மூலம் ஏ.ஐ டூல்ஸ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

-கலைஞர் செய்தி 

No comments:

Post a Comment