FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, January 14, 2025

விருதுநகர்: மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்!



10.01.2025 விருதுநகர்: விருதுநகரில் காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

விருதுநகர் அருகே சூலக்கரையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காது கேளாத, வாய் பேச முடியாத சுமார் 50 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சிவகாமி சுந்தரி தலைமை வகித்தார்.

பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் ஒரே மாதிரியான புத்தாடைகள் அணிந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர். அதோடு, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் அனைவரும் உற்சாகமாக பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.


No comments:

Post a Comment