FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, January 14, 2025

விருதுநகர்: மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்!



10.01.2025 விருதுநகர்: விருதுநகரில் காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

விருதுநகர் அருகே சூலக்கரையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காது கேளாத, வாய் பேச முடியாத சுமார் 50 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சிவகாமி சுந்தரி தலைமை வகித்தார்.

பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் ஒரே மாதிரியான புத்தாடைகள் அணிந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர். அதோடு, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் அனைவரும் உற்சாகமாக பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.


No comments:

Post a Comment