FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, January 14, 2025

விருதுநகர்: மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்!



10.01.2025 விருதுநகர்: விருதுநகரில் காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

விருதுநகர் அருகே சூலக்கரையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காது கேளாத, வாய் பேச முடியாத சுமார் 50 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சிவகாமி சுந்தரி தலைமை வகித்தார்.

பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் ஒரே மாதிரியான புத்தாடைகள் அணிந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர். அதோடு, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் அனைவரும் உற்சாகமாக பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.


No comments:

Post a Comment