FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Tuesday, January 14, 2025

விருதுநகர்: மாற்றுத்திறனாளி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்!



10.01.2025 விருதுநகர்: விருதுநகரில் காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளி மாணவ, மாணவிகள் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.

விருதுநகர் அருகே சூலக்கரையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை காது கேளாத, வாய் பேச முடியாத சுமார் 50 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சிவகாமி சுந்தரி தலைமை வகித்தார்.

பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகள் ஒரே மாதிரியான புத்தாடைகள் அணிந்து பொங்கல் வைத்துக் கொண்டாடினர். அதோடு, மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகள் அனைவரும் உற்சாகமாக பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.


No comments:

Post a Comment