FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, May 30, 2014

வெய்யலுார் அரசு பள்ளி பொதுத் தேர்வில் 'சென்டம்': காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவி கவிதா 411 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம்

27.05.2014, சேத்தியாத்தோப்பு:
சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் அரசு பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 16 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி பாக்கியலட்சுமி 416 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளி மாணவி கவிதா 411 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ரூபம் 404 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை தலைமையாசிரியர் அன்பழகன், கல்வி வளர்ச்சிக்குழுத் தலைவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ராமதாஸ் ஆகியோர் பாராட்டினர்.

பார்வையற்றோருக்கு படியளக்கும் பாரதி யுவகேந்திரா- மதுரை மண்ணில் ஒரு மகத்தான சேவை

Thursday, May 29, 2014

நீச்சல் போட்டியில் கலக்கும் காது கேளாதவரான சினேகா

Want to help poor | கலெக்டராகி ஏழைகளுக்கு உதவி செய்யணும் Dinamalar

பிளஸ் 2 தேர்வில் 75 சதவீத மதிப்பெண் எடுத்தவரா நீங்கள்...? உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்

27.05.2014,
சவுகார்பேட்டையில் செயல்பட்டு வரும் கருணா இன்டர்னேஷனல் என்ற தொண்டு நிறுவனம் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களின் மேற்படிப்புக்கு உதவிதொகை வழங்க விண்ணப்பங்கள் பெற்று வருகிறது. இதற்கு விண்ணபிப்பவர்கள் நடந்து முடிந்த 12 வகுப்பு தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், அவர் களின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 4 லட்சத்துக்கு கீழ் இருத்தல் வேண்டும். இதில் 25 சதவீத உதவித்தொகை விதவைகளின் குழந்தை கள், மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: 98400 95050.

காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் 'ஆல் பெயில்!'

27.05.2014, ஊட்டி :
ஊட்டி அரசு காது கேளாதோர் பள்ளியில், ஆறு மாணவர்களுக்கு, 13 ஆசிரியர்கள் இருந்தும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 1975ல், அரசு காது கேளாதோர் ஆரம்பப்பள்ளி துவக்கப்பட்டது. கல்வி துறை கட்டுப்பாட்டில் இருந்த இப்பள்ளி, 2012 முதல், மாற்றுத்திறனாளிகள் நல துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி, 1996ல், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது; 130 குழந்தைகள் படித்தனர்; நடப்பாண்டு, 29 பேர் மட்டுமே உள்ளனர். சில ஆண்டுகளாக, இப்பள்ளி, 10ம் வகுப்பு பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று வந்த நிலையில், 2013 - 14 கல்வி ஆண்டில் தேர்வு எழுதிய, ஆறு மாணவ, மாணவியரும் தோல்வியடைந்துள்ளனர். இது, பெற்றோர் மற்றும் கல்வி துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sunday, May 25, 2014

அரசு காதுகேளாதோர் பள்ளியில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத பரிதாபம்

24.05.2014, ஊட்டி, :
ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே மாற்று திறனாளிகள் நலத்துறை கட்டுபாட்டில் உள்ள காதுகேளாதோருக்கான சிறப்பு அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1975ம் ஆண்டு கல்வித்துறை மூலம் குன்னூரில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 20 மாணவ, மாணவியருடன் காதுகேளாதோருக்கான அரசு தொடக்க பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து சமூக நலத்துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட இப்பள்ளி 1986ம் ஆண்டு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மாற்றப்பட்டது. இப்பள்ளி 6,7,8 என ஒவ்வொரு வகுப்புகளாக துவக்கப்பட்டன. பின்உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு விடுதியுடன் கூடிய பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு முதல் இப்பள்ளி தமிழக அரசின் மாற்று திறனாளிகள் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.

பள்ளி ஆரம்பிக்கப்பட்டது முதல் 1997 வரை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்தது. 1998ல் இருந்து அரசு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் 8க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் 6 மாணவ, மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதினார்கள். ஆனால், தேர்வு எழுதிய ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இச்சம்பவம் மாணவ, மாணவியர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்வில் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர்கள் முழுமையாக தேர்ச்சி பெறாததற்கு ஆசிரியர்களிடையே நிலவி வரும் பனிப்போரும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர்களை கண்டு கொள்ளாததால் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர்களிடையே உள்ள பனிப்போரால் மாணவ, மாணவியர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ‘அரசு காதுகேளாதோர் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 6 பேரும் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாததற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
- Dinakaran

No Teacher with Sign Interpretation in Deaf Schools - Poor Results - செய்கை மொழி தெரியாத ஆசிரியர்களால் காது கேளாதோர் கல்வி பாதிப்பு - முதலமைச்சர் தலையிட கோரிக்கை

  • 10th Std: Once again poor results in Deaf Schools
  • 100% failed in Ooty Deaf School
  • All Teachers working in these schools do not know sign language
  • Question arise how can they teach deaf children? Deaf Association raising this vital question?
  • Plea to appoint deaf graduates & postgraduates with suitable training
  • English is not taught to them upto 10th std, causing difficulties in higher studies like computer education
  • Demand to teach English from 6th Std without examination sytem
  • CM's intervention needed 


Saturday, May 24, 2014

காலால் தேர்வு எழுதி சாதனை படைத்த பத்தாம் வகுப்பு மாணவர்

24.05.2014,
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் காலால் எழுதி சாதனை படைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நேரு நினைவு சம்பூரணி அம்மாள் மாற்றுத்திறனாளி பள்ளியைச் சேர்ந்த மாணவர் மகேஷ்.

இவர் பிறவியிலேயே இரண்டு கைகளையும் இழந்தவர். ஆனால் தளராத மன உறுதியுடன் படித்த இவர் தனது கால்களையே கைகளாக கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.

இவர் தற்போது தமிழில் 53, ஆங்கிலத்தில் 51, அறிவியலில் 70, சமூக அறிவியலில் 70, கணிதத்தில் 52 என மதிப்பெண்களை பெற்று மொத்த மதிப்பெண்ணாக 282 மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்துள்ளார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி

23.05.2014, மதுரை :
மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு குடியிருப்பு பகுதியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென, ஒரே அரசு பள்ளி இயங்கி வருகிறது. போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இந்த ஆண்டுக்கு, 1 முதல் 8 ம் வகுப்பு வரை இங்கு சேர்த்துக் கொள்ளப்படுவர்.
அவர்களுக்கு உணவு, தங்குமிடம், பாடப்புத்தகங்கள், 4 செட் சீருடைகள், இயற்கை முறை தசைப் பயிற்சி இலவசம். விருப்பமுள்ள பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன், தலைமை ஆசிரியரை நேரில் சந்திக்கலாம். ஜூன் 9 முதல் வகுப்புகள் துவங்கும் என, கலெக்டர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Dinamalar

Friday, May 16, 2014

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை, தேவை உரிமைகள் - இலவசங்கள் அல்ல

எப்போதும் நேர்மறையான (positive) சொற்களும், பேச்சும் ஒருவருடைய மனத்தை உற்சாகப்படுத்தி, உற்சாகமுடன் செயல்பட வைக்கும். அந்த வகையில், உடல் உறுப்பு குறைபாடுடையோரை ஊனமுற்றோர் (handicaped) இயலாதவர்(disabled) என்பன போன்ற எதிர்மறையான (negative)  சொற்களால் அழைப்பதைத் தவிர்த்து, மாற்றுத்திறனாளிகள் என அழைக்க வேண்டும் என்று அவர்களுக்கான இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. அதை நாமும் வரவேற்கிறோம்.
இந்திய அளவில் 2 விழுக்காட்டினராகவும், தமிழ்நாட்டில் 18 இலட்சமாகவும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அரசிடமும், சமூகத்திடமும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான

மாற்றுத்திறனாளிகளும் மருத்துவச் சான்றிதழ்களும்...

கோவை மாவட்டம் அன்னனூர் ஒன்றியம் ‍பொத்தியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிறு விவசாயின் மகளான பானுசுந்தரி(24) என்ற கல்லூரி மாணவி 2/5/2012 அன்று என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உயர் கல்விக்கு மற்றும் வங்கித் தேர்வுகள் எழுதுவதற்காக மருத்துவக் குழுவின் மருத்துவச் சான்றிதழ் வேண்டும், இதனை எவ்வாறு பெறுவது என்று கேட்டார். அவரை நேரில் சந்தித்து, மருத்துவக் குழுவின் மருத்துவச் சான்றிதழ் நகல் ஒன்றையும், அதனை எப்படி விண்ணப்பித்துப் பெறுவது என்பதையும் விளக்கமாகக் கூறினேன்.
***
எத்தனை வகை மருத்துவச் சான்றிதழ்கள் . . .
இருபது ஆண்டுகளுக்கு முன் நான் திருநெல்வேலி சந்திப்பிள்ளையார் கோவில் முக்கு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எலும்பு

Monday, May 12, 2014

தஞ்சையில் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி




தஞ்சை மேம்பாலம் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 21 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை. ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்கள் தோல்வி அடைந்தததாகக் கூறப்படுகிறது.

இப்பள்ளியில் நர்சரி முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. இங்கு தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காது கேளாத மாணவ, மாணவிகள் 170 பேர் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 21 மாணவ, மாணவிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. போதுமான அளவுக்கு துறை ஆசிரியர்கள் இல்லாதது, முறையாக கண்காணிக்கப்படாதது, அடிப்படை வசதிகள் இல்லாது ஆகியவையே இதற்குக் காரணம் என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Saturday, May 10, 2014

Thursday, May 8, 2014

வெற்றிக்கான தடை மனம் அல்ல; பணம்

பயிற்சியின்போது (இடமிருந்து) குருநாதன், படைத்தலைவன், அந்தோனி, பயிற்சியாளர் ரஞ்சித். பூங்கொடி (உள்படம்).
07.05.2014
"தேசத்துக்காக விளையாடி என்ன பயனைப் பெற்றீர்கள். விளையாட்டை விடுத்து வேறு ஏதேனும் செய்யுங்கள்' என்று வீரர் ஒருவரிடம் சக மனிதர் கூறினால் வெற்றி வீரரை நாடு எப்படி பெறும். அந்த சூழலை மதுரையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர்களான எஸ்.குருநாதன், எம்.டி.பூங்கொடி, பி.படைத்தலைவன், கே.ஜே. அந்தோனி ஆகியோர் எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும், வெற்றி வேட்கை மட்டும் அவர்களிடம் இருந்து தணியவில்லை.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற பழமொழியை மனதின் ஆழத்தில் இவர்கள் பதிய வைத்துக் கொண்டார்கள். அதனால், துனீஷியாவில் அடுத்த

Monday, May 5, 2014

காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான, பி.காம்., மற்றும் பி.சி.ஏ.,


ஆசியாவிலேயே முதல் முறை! காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான, பி.காம்., மற்றும் பி.சி.ஏ.,வாய் பேச முடியாத, பட்டப் படிப்பை ஏற்படுத்திய, முகமது இப்ராஹிம்: நான், சென்னை மாநில கல்லூரியின், முதல்வராக பணியாற்றுகிறேன். வாய் பேச முடியாத, காது கேளாத மாணவர்களிடம் பேச்சு கொடுக்கும் வரை, அவர்களின் குறைபாடு வேறு யாருக்கும், வெளிப்படையாக தெரியாது. சாதாரண மாணவர்களைப் போலவே, அவர்களும் இருப்பர். மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளது போன்ற பட்டப் படிப்புகள், வாய் மற்றும் செவி திறன் குறைந்தவர்களுக்கு இல்லை. இதனால், ஆசியாவிலேயே முதல் முறையாக, வாய் மற்றும் செவி

நம்மால் முடியாதா?

கடந்த சில காலங்களாகவே மழையின் அளவு குறைந்து கொண்டே வருவதை நாம் கவனித்து வருகிறோம்.

இதனை இந்த உலகும் நன்கு உணர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து, குடிநீருக்காக மக்கள் அலைந்து திரியும் நிலைமையையும் நாம் கண்கூடாக கண்டு கொண்டு தான் இருக்கின்றோம்.

இதன் காரணமாக சுமார் 1,000 அடிக்கு மேல் ஆழ்துளை போட்டு, அதனில் கிடைக்கும் தண்ணீரில் சில இரசாயண கலவைகளை கலந்து இன்று ஒரு கேன் தண்ணீர்  சுமார் ரூ.20லிந்து அதிகபட்சமாக ரூ.100 வரைக்கும் விற்பனை செய்வதையும் நாம் பார்த்து

Saturday, May 3, 2014

TN Govt's "Spl Teacher Course" against law - seeks CM intervention

*   Special Teachers Course for Mentally Challenged run by state diff abled dept 
    not        recognised under Rehabilitation Council of India-RCI for many years.  This is against law
*   It is mandatory under RCI Act to get recognition of course as well the teaching 
    professional
*   About this unlawful training, mentally challenged rights activists has taken to 
    the     notice of the dept many years back itself.  
*   Though the state govt spending lacks of money every year, it goes vain
*   The special teahcers who have completed the course have not recognised even 
     by SSA-IED dept.  This course will not be eligible in any other state
*   Hence, TARATDAC demands CM's intervention & ask her to order to 
     investigate about this unlawful training course
*   Also demands not to run this course without RCI recognition

Supportive Documents:
1. Link about Balavihar Training School

2. First two Attachments:  RCI's stmt that this coursec has not recognised

3. 3rd Attachment:   Govt. Policy Note about spending money

4. Rlease PDF
5. Release Word

https://docs.google.com/file/d/0ByJObgdNFJarSmNFT0xicm5PRlFkb1pVbXJsUmY4WExpeC00/edit

https://docs.google.com/file/d/0ByJObgdNFJarWW5xbEZzMWlHWldxT2gxdWxoU0VjWE1jbFg0/edit

https://docs.google.com/file/d/0ByJObgdNFJarUlM0cDgxMkFlb2RQUjZCTWZHSHVmVDdhRTZ3/edit
 
https://docs.google.com/file/d/0ByJObgdNFJarTGtiWkRfNTRSM2NKZ0dYME5EaDNDLWVWZjZF/edit
 

சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்

03.05.2014
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டும் அதற்கு தேவையான பணம் இல்லாமல் மாற்றுத் திறனாளிகள் தவிக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டி கள் இந்த ஆண்டு சீனா மற்றும் துனிசியாவில் நடைபெறவுள்ளது. இதில் துனிசியாவில் நடக்கும் போட்டிகள் ஜூன் மாதம் 16ம் தேதி துவங்குகிறது. இந்தியா சார்பாக இந்த போட்டிகளில் கலந்துகொள்ள

Enjoy life!|வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்!

1990–ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு தமிழக அரசு அறிவிப்பு

 சென்னை, மே 3–
1990–ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

6 பேருக்கு அந்தஸ்து உயர்வு
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தில் 1990–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சேர்ந்த 6 பேருக்கு முதன்மைச் செயலாளராக அந்தஸ்தை உயர்த்தி உத்தரவிடப்படுகிறது.