FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Sunday, May 25, 2014

அரசு காதுகேளாதோர் பள்ளியில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத பரிதாபம்

24.05.2014, ஊட்டி, :
ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே மாற்று திறனாளிகள் நலத்துறை கட்டுபாட்டில் உள்ள காதுகேளாதோருக்கான சிறப்பு அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1975ம் ஆண்டு கல்வித்துறை மூலம் குன்னூரில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 20 மாணவ, மாணவியருடன் காதுகேளாதோருக்கான அரசு தொடக்க பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து சமூக நலத்துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட இப்பள்ளி 1986ம் ஆண்டு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மாற்றப்பட்டது. இப்பள்ளி 6,7,8 என ஒவ்வொரு வகுப்புகளாக துவக்கப்பட்டன. பின்உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு விடுதியுடன் கூடிய பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு முதல் இப்பள்ளி தமிழக அரசின் மாற்று திறனாளிகள் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.

பள்ளி ஆரம்பிக்கப்பட்டது முதல் 1997 வரை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்தது. 1998ல் இருந்து அரசு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் 8க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் 6 மாணவ, மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதினார்கள். ஆனால், தேர்வு எழுதிய ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இச்சம்பவம் மாணவ, மாணவியர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்வில் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர்கள் முழுமையாக தேர்ச்சி பெறாததற்கு ஆசிரியர்களிடையே நிலவி வரும் பனிப்போரும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர்களை கண்டு கொள்ளாததால் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர்களிடையே உள்ள பனிப்போரால் மாணவ, மாணவியர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ‘அரசு காதுகேளாதோர் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 6 பேரும் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாததற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
- Dinakaran

No comments:

Post a Comment