FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, May 25, 2014

அரசு காதுகேளாதோர் பள்ளியில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத பரிதாபம்

24.05.2014, ஊட்டி, :
ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே மாற்று திறனாளிகள் நலத்துறை கட்டுபாட்டில் உள்ள காதுகேளாதோருக்கான சிறப்பு அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1975ம் ஆண்டு கல்வித்துறை மூலம் குன்னூரில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 20 மாணவ, மாணவியருடன் காதுகேளாதோருக்கான அரசு தொடக்க பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து சமூக நலத்துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட இப்பள்ளி 1986ம் ஆண்டு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மாற்றப்பட்டது. இப்பள்ளி 6,7,8 என ஒவ்வொரு வகுப்புகளாக துவக்கப்பட்டன. பின்உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு விடுதியுடன் கூடிய பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு முதல் இப்பள்ளி தமிழக அரசின் மாற்று திறனாளிகள் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.

பள்ளி ஆரம்பிக்கப்பட்டது முதல் 1997 வரை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்தது. 1998ல் இருந்து அரசு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் 8க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் 6 மாணவ, மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதினார்கள். ஆனால், தேர்வு எழுதிய ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இச்சம்பவம் மாணவ, மாணவியர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்வில் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர்கள் முழுமையாக தேர்ச்சி பெறாததற்கு ஆசிரியர்களிடையே நிலவி வரும் பனிப்போரும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர்களை கண்டு கொள்ளாததால் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர்களிடையே உள்ள பனிப்போரால் மாணவ, மாணவியர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ‘அரசு காதுகேளாதோர் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 6 பேரும் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாததற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
- Dinakaran

No comments:

Post a Comment