FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, May 25, 2014

அரசு காதுகேளாதோர் பள்ளியில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத பரிதாபம்

24.05.2014, ஊட்டி, :
ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே மாற்று திறனாளிகள் நலத்துறை கட்டுபாட்டில் உள்ள காதுகேளாதோருக்கான சிறப்பு அரசு உயர்நிலைபள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1975ம் ஆண்டு கல்வித்துறை மூலம் குன்னூரில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 20 மாணவ, மாணவியருடன் காதுகேளாதோருக்கான அரசு தொடக்க பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து சமூக நலத்துறையின் கட்டுபாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட இப்பள்ளி 1986ம் ஆண்டு குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மாற்றப்பட்டது. இப்பள்ளி 6,7,8 என ஒவ்வொரு வகுப்புகளாக துவக்கப்பட்டன. பின்உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு விடுதியுடன் கூடிய பள்ளியாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு முதல் இப்பள்ளி தமிழக அரசின் மாற்று திறனாளிகள் கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.

பள்ளி ஆரம்பிக்கப்பட்டது முதல் 1997 வரை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்பட்டு வந்தது. 1998ல் இருந்து அரசு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது இப்பள்ளியில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் 8க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் இந்த கல்வியாண்டில் 6 மாணவ, மாணவியர்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதினார்கள். ஆனால், தேர்வு எழுதிய ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இச்சம்பவம் மாணவ, மாணவியர்கள் மட்டுமில்லாமல் பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற பொது தேர்வில் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு காதுகேளாதோர் பள்ளி மாணவ, மாணவியர்கள் முழுமையாக தேர்ச்சி பெறாததற்கு ஆசிரியர்களிடையே நிலவி வரும் பனிப்போரும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர்களை கண்டு கொள்ளாததால் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர்களிடையே உள்ள பனிப்போரால் மாணவ, மாணவியர்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், ‘அரசு காதுகேளாதோர் பள்ளியில் போதிய ஆசிரியர்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 6 பேரும் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாததற்கு காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்றார்.
- Dinakaran

No comments:

Post a Comment