FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, May 3, 2014

1990–ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு தமிழக அரசு அறிவிப்பு

 சென்னை, மே 3–
1990–ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

6 பேருக்கு அந்தஸ்து உயர்வு
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தில் 1990–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சேர்ந்த 6 பேருக்கு முதன்மைச் செயலாளராக அந்தஸ்தை உயர்த்தி உத்தரவிடப்படுகிறது.
அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நாயருக்கு, முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்படுகிறது.

பொதுப்பணித் துறை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கே.பணீந்தர ரெட்டி, அந்த துறையின் முதன்மைச் செயலாளர் என்ற அந்தஸ்தில் நியமிக்கப்படுகிறார். பொதுப்பணித் துறையின் செயலாளர் எம்.சாய்குமார், அந்தத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயலாளர் பி.சிவசங்கரன், அந்தத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மத்திய அரசுப் பணியான தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள டி.எஸ்.ஜவஹருக்கும் இந்த அந்தஸ்து வழங்கப்படுகிறது.

எம்.பி.நிர்மலா
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, அந்த துறையின் முதன்மைச் செயலாளராக அந்தஸ்து உயர்த்தப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரிகள் அந்தஸ்து
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்.லலிதா (சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்), பிரவீன் பி.நாயர் (ஓசூர் துணை கலெக்டர்), சங்கர்லால் குமாவத் (நாகர்கோயில் துணைக் கலெக்டர்), சுபோத் குமார் (திருக்கோவிலூர் துணைக் கலெக்டர்), அஜய் யாதவ் (கோவை வணிகவரிகள் இணை கமிஷனர்), ராஷ்மி சித்தார்த் சகாதே (பொள்ளாச்சி துணை கலெக்டர்) ஆகியோருக்கு கடந்த ஜனவரி 1–ந் தேதியில் இருந்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அந்தஸ்து வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதே பணியில் தொடருவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Thanks to

No comments:

Post a Comment