FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, May 3, 2014

1990–ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு தமிழக அரசு அறிவிப்பு

 சென்னை, மே 3–
1990–ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அந்தஸ்து உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

6 பேருக்கு அந்தஸ்து உயர்வு
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தில் 1990–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக சேர்ந்த 6 பேருக்கு முதன்மைச் செயலாளராக அந்தஸ்தை உயர்த்தி உத்தரவிடப்படுகிறது.
அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நாயருக்கு, முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்படுகிறது.

பொதுப்பணித் துறை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கே.பணீந்தர ரெட்டி, அந்த துறையின் முதன்மைச் செயலாளர் என்ற அந்தஸ்தில் நியமிக்கப்படுகிறார். பொதுப்பணித் துறையின் செயலாளர் எம்.சாய்குமார், அந்தத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயலாளர் பி.சிவசங்கரன், அந்தத் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மத்திய அரசுப் பணியான தலைமை கண்காணிப்பு அதிகாரியாக உள்ள டி.எஸ்.ஜவஹருக்கும் இந்த அந்தஸ்து வழங்கப்படுகிறது.

எம்.பி.நிர்மலா
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, அந்த துறையின் முதன்மைச் செயலாளராக அந்தஸ்து உயர்த்தப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரிகள் அந்தஸ்து
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆர்.லலிதா (சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்), பிரவீன் பி.நாயர் (ஓசூர் துணை கலெக்டர்), சங்கர்லால் குமாவத் (நாகர்கோயில் துணைக் கலெக்டர்), சுபோத் குமார் (திருக்கோவிலூர் துணைக் கலெக்டர்), அஜய் யாதவ் (கோவை வணிகவரிகள் இணை கமிஷனர்), ராஷ்மி சித்தார்த் சகாதே (பொள்ளாச்சி துணை கலெக்டர்) ஆகியோருக்கு கடந்த ஜனவரி 1–ந் தேதியில் இருந்து மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அந்தஸ்து வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதே பணியில் தொடருவார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Thanks to

No comments:

Post a Comment