FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, May 3, 2014

சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்

03.05.2014
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டும் அதற்கு தேவையான பணம் இல்லாமல் மாற்றுத் திறனாளிகள் தவிக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டி கள் இந்த ஆண்டு சீனா மற்றும் துனிசியாவில் நடைபெறவுள்ளது. இதில் துனிசியாவில் நடக்கும் போட்டிகள் ஜூன் மாதம் 16ம் தேதி துவங்குகிறது. இந்தியா சார்பாக இந்த போட்டிகளில் கலந்துகொள்ள
180 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த பத்து பேர் தேர்வு செய்யப்பட்டு ஏழு பேர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு போட்டியில் பங்கு பெறுவதற்கான நுழைவு கட்டணம், போக்குவரத்து, விசா தொகை, காப்பீட்டு தொகை ஆகியவை சேர்த்து ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் செலவாகிறது. ஆனால் அந்த அளவுக்கு பணம் இல்லாமல் வீரர்கள் பலர் தவிக்கின்றனர்.

குண்டு எறிதல் பிரிவில் தேசிய அளவில் இரண்டு முறை வெண்கலப் பதக்கங்களை வென்றதுடன் மாநில அளவில் 12 பதக்கங்களை வென்றுள்ள பூங்கொடி இதுபற்றி கூறுகையில், “நான் பெற்றோர் இல்லாமல் ஆதரவற்ற நிலையில் விடுதியில் வளர்ந்தேன். இதுவரை கலந்து கொண்ட எந்த போட்டியிலும் நான் தோற்றதில்லை.

தற்போது துனிசியாவில் நடக்கவுள்ள சர்வதேச போட்டியில் பங்குபெறுவதற்கு ரூ.1.40 லட்சம் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லை. போட்டியில் கலந்து கொண்டு வந்த பின்பு தமிழக அரசு விமானச் செலவுக்கான ரூ.30 ஆயிரத்தை மட்டும் கொடுக் கும். மற்ற செலவுகளை நாங் களே பார்த்துக்கொள்ள வேண்டி யுள்ளது.

நான் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்க்கும் ரேஷன் கடையில் மாதம் ரூ. 4 ஆயிரம் சம்பளம் கிடைக் கிறது.போலியோ பாதிக்கப் பட்ட கால்களுடன் தினமும் ஸ்பான்சர் களை தேடி வருகிறேன்” என்றார்.

கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்குபெற்று வரும் மதுரையைச் சேர்ந்த எம். காமாட்சிக்கும் இதே நிலைதான். இதுவரை தேசிய, மாநில அளவில் 26 முறை காமாட்சி பதக்கங்களை வென்றுள்ளார்.

அக்டோபர் மாதம் சீனாவில் நடைபெற உள்ள ஆசிய மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில் பங்குபெற இவர் தேர்வு செய்யப் பட்டுள்ளார். ஆனால் அதில் கலந்துகொள்ள தேவையான பணம் அவரிடம் இல்லை.

இதுபற்றி கூறும் அவர், “மதுரையில் உள்ள நரிமேடு பகுதியில் நான் வசித்து வருகிறேன். சர்வதேசப் போட்டி களில் பல முறை கலந்துகொண்டு உள்ளேன். அப்பா வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார். இப்போது சீனாவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத் துள்ளது. ஆனால் போட்டிக்குத் தேவையான ரூ. 1 லட்சம் கிடைப் பது கஷ்டமாக உள்ளது’' என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்சி வழங்கி வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாடு ஆணையத் தின் பயிற்சியாளர் ரஞ்சித் குமார் இதுபற்றி கூறுகையில் “சர்வதேசப் பேட்டிகளில் விளையாட்டு வீரர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் கலந்து கொள்வார்கள். அதற்கு அவர்கள்தான் தங்களுடைய செலவுகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற சர்வதேச விளையாட்டுகளில் வெற்றி பெற் றால் தான் பேரலிம்பிக்ஸ் எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும். பொதுவாக மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு உதவும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்” என்றார்.
Thanks to

No comments:

Post a Comment