FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Monday, May 5, 2014

காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான, பி.காம்., மற்றும் பி.சி.ஏ.,


ஆசியாவிலேயே முதல் முறை! காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான, பி.காம்., மற்றும் பி.சி.ஏ.,வாய் பேச முடியாத, பட்டப் படிப்பை ஏற்படுத்திய, முகமது இப்ராஹிம்: நான், சென்னை மாநில கல்லூரியின், முதல்வராக பணியாற்றுகிறேன். வாய் பேச முடியாத, காது கேளாத மாணவர்களிடம் பேச்சு கொடுக்கும் வரை, அவர்களின் குறைபாடு வேறு யாருக்கும், வெளிப்படையாக தெரியாது. சாதாரண மாணவர்களைப் போலவே, அவர்களும் இருப்பர். மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளது போன்ற பட்டப் படிப்புகள், வாய் மற்றும் செவி திறன் குறைந்தவர்களுக்கு இல்லை. இதனால், ஆசியாவிலேயே முதல் முறையாக, வாய் மற்றும் செவி
திறன் குறைந்தவர்களுக்கு, பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பாடப்பிரிவை, தமிழக அரசு உதவியுடன், 2007ல், மாநில கல்லூரியில் ஆரம்பித்தோம். பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரிடமிருந்து, அடையாள அட்டை பெற்றிருப்பவர், இப்பாட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறைவான இடங்களே உள்ளதால், அதிக மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்கிறோம். மூன்றாண்டுக்கான கல்வி கட்டணம், 1,265 மட்டுமே. அரசின் மானியம் மூலம், "ஹியரிங் எய்டு, ஸ்காலர்ஷிப்' போன்றவற்றை வழங்குகிறோம். "ஹாஸ்டல்' வசதியும் அருகில் உள்ளது. இவர்களுக்கு, சாதாரண மாணவர்களுக்கான பாடத்திட்டம் போன்றே இருந்தாலும், செய்முறை தேர்வை தவிர்த்து, மற்ற அனைத்தையும் எளிதாக்கியுள்ளோம். புரிந்து கொள்ளும் திறன் குறைவு என்பதால், முக பாவனை, உதடு அசைவு, சைகை மொழி மூலம், பாடங்களை பொறுமையாக நடத்துகிறோம். தனியார் வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் மூலம், கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துகிறோம். எங்களிடம் படித்த மாணவர்களில் பலர், பெரிய ஷாப்பிங் மால்களில் கம்ப்யூட்டர் பில்லிங் பிரிவிலும், கே.எப்.சி., ஸ்பென்சர் போன்ற நிறுவனங்களிலும் வேலை பார்க்கின்றனர். கல்லூரியில் படித்து கொண்டே, பகுதி நேரமாகவும் பணியாற்றலாம்.

No comments:

Post a Comment