FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, May 5, 2014

காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான, பி.காம்., மற்றும் பி.சி.ஏ.,


ஆசியாவிலேயே முதல் முறை! காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கான, பி.காம்., மற்றும் பி.சி.ஏ.,வாய் பேச முடியாத, பட்டப் படிப்பை ஏற்படுத்திய, முகமது இப்ராஹிம்: நான், சென்னை மாநில கல்லூரியின், முதல்வராக பணியாற்றுகிறேன். வாய் பேச முடியாத, காது கேளாத மாணவர்களிடம் பேச்சு கொடுக்கும் வரை, அவர்களின் குறைபாடு வேறு யாருக்கும், வெளிப்படையாக தெரியாது. சாதாரண மாணவர்களைப் போலவே, அவர்களும் இருப்பர். மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளது போன்ற பட்டப் படிப்புகள், வாய் மற்றும் செவி திறன் குறைந்தவர்களுக்கு இல்லை. இதனால், ஆசியாவிலேயே முதல் முறையாக, வாய் மற்றும் செவி
திறன் குறைந்தவர்களுக்கு, பி.காம்., மற்றும் பி.சி.ஏ., பாடப்பிரிவை, தமிழக அரசு உதவியுடன், 2007ல், மாநில கல்லூரியில் ஆரம்பித்தோம். பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊனமுற்றோருக்கான மாநில ஆணையரிடமிருந்து, அடையாள அட்டை பெற்றிருப்பவர், இப்பாட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். குறைவான இடங்களே உள்ளதால், அதிக மதிப்பெண் மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்கிறோம். மூன்றாண்டுக்கான கல்வி கட்டணம், 1,265 மட்டுமே. அரசின் மானியம் மூலம், "ஹியரிங் எய்டு, ஸ்காலர்ஷிப்' போன்றவற்றை வழங்குகிறோம். "ஹாஸ்டல்' வசதியும் அருகில் உள்ளது. இவர்களுக்கு, சாதாரண மாணவர்களுக்கான பாடத்திட்டம் போன்றே இருந்தாலும், செய்முறை தேர்வை தவிர்த்து, மற்ற அனைத்தையும் எளிதாக்கியுள்ளோம். புரிந்து கொள்ளும் திறன் குறைவு என்பதால், முக பாவனை, உதடு அசைவு, சைகை மொழி மூலம், பாடங்களை பொறுமையாக நடத்துகிறோம். தனியார் வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் மூலம், கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்பையும் ஏற்படுத்துகிறோம். எங்களிடம் படித்த மாணவர்களில் பலர், பெரிய ஷாப்பிங் மால்களில் கம்ப்யூட்டர் பில்லிங் பிரிவிலும், கே.எப்.சி., ஸ்பென்சர் போன்ற நிறுவனங்களிலும் வேலை பார்க்கின்றனர். கல்லூரியில் படித்து கொண்டே, பகுதி நேரமாகவும் பணியாற்றலாம்.

No comments:

Post a Comment