FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, May 12, 2014

தஞ்சையில் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி




தஞ்சை மேம்பாலம் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 21 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை. ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்கள் தோல்வி அடைந்தததாகக் கூறப்படுகிறது.

இப்பள்ளியில் நர்சரி முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. இங்கு தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காது கேளாத மாணவ, மாணவிகள் 170 பேர் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 21 மாணவ, மாணவிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. போதுமான அளவுக்கு துறை ஆசிரியர்கள் இல்லாதது, முறையாக கண்காணிக்கப்படாதது, அடிப்படை வசதிகள் இல்லாது ஆகியவையே இதற்குக் காரணம் என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment