FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, May 12, 2014

தஞ்சையில் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தோல்வி




தஞ்சை மேம்பாலம் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 21 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை. ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்கள் தோல்வி அடைந்தததாகக் கூறப்படுகிறது.

இப்பள்ளியில் நர்சரி முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. இங்கு தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காது கேளாத மாணவ, மாணவிகள் 170 பேர் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 21 மாணவ, மாணவிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. போதுமான அளவுக்கு துறை ஆசிரியர்கள் இல்லாதது, முறையாக கண்காணிக்கப்படாதது, அடிப்படை வசதிகள் இல்லாது ஆகியவையே இதற்குக் காரணம் என மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment