FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Thursday, May 29, 2014

காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் 'ஆல் பெயில்!'

27.05.2014, ஊட்டி :
ஊட்டி அரசு காது கேளாதோர் பள்ளியில், ஆறு மாணவர்களுக்கு, 13 ஆசிரியர்கள் இருந்தும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 1975ல், அரசு காது கேளாதோர் ஆரம்பப்பள்ளி துவக்கப்பட்டது. கல்வி துறை கட்டுப்பாட்டில் இருந்த இப்பள்ளி, 2012 முதல், மாற்றுத்திறனாளிகள் நல துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி, 1996ல், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது; 130 குழந்தைகள் படித்தனர்; நடப்பாண்டு, 29 பேர் மட்டுமே உள்ளனர். சில ஆண்டுகளாக, இப்பள்ளி, 10ம் வகுப்பு பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று வந்த நிலையில், 2013 - 14 கல்வி ஆண்டில் தேர்வு எழுதிய, ஆறு மாணவ, மாணவியரும் தோல்வியடைந்துள்ளனர். இது, பெற்றோர் மற்றும் கல்வி துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment