FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, May 29, 2014

காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் 'ஆல் பெயில்!'

27.05.2014, ஊட்டி :
ஊட்டி அரசு காது கேளாதோர் பள்ளியில், ஆறு மாணவர்களுக்கு, 13 ஆசிரியர்கள் இருந்தும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. நீலகிரி மாவட்டம், ஊட்டியில், 1975ல், அரசு காது கேளாதோர் ஆரம்பப்பள்ளி துவக்கப்பட்டது. கல்வி துறை கட்டுப்பாட்டில் இருந்த இப்பள்ளி, 2012 முதல், மாற்றுத்திறனாளிகள் நல துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி, 1996ல், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது; 130 குழந்தைகள் படித்தனர்; நடப்பாண்டு, 29 பேர் மட்டுமே உள்ளனர். சில ஆண்டுகளாக, இப்பள்ளி, 10ம் வகுப்பு பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்று வந்த நிலையில், 2013 - 14 கல்வி ஆண்டில் தேர்வு எழுதிய, ஆறு மாணவ, மாணவியரும் தோல்வியடைந்துள்ளனர். இது, பெற்றோர் மற்றும் கல்வி துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment