FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, May 24, 2014

காலால் தேர்வு எழுதி சாதனை படைத்த பத்தாம் வகுப்பு மாணவர்

24.05.2014,
நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் காலால் எழுதி சாதனை படைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நேரு நினைவு சம்பூரணி அம்மாள் மாற்றுத்திறனாளி பள்ளியைச் சேர்ந்த மாணவர் மகேஷ்.

இவர் பிறவியிலேயே இரண்டு கைகளையும் இழந்தவர். ஆனால் தளராத மன உறுதியுடன் படித்த இவர் தனது கால்களையே கைகளாக கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளார்.

இவர் தற்போது தமிழில் 53, ஆங்கிலத்தில் 51, அறிவியலில் 70, சமூக அறிவியலில் 70, கணிதத்தில் 52 என மதிப்பெண்களை பெற்று மொத்த மதிப்பெண்ணாக 282 மதிப்பெண்களுடன் தேர்ச்சியடைந்துள்ளார்.

No comments:

Post a Comment