FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, January 14, 2022

மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் 163 குழந்தைகளுக்கு செவித்திறன்

10.01.2022
மதுரை
பிறவியிலேயே செவித்திறனற்ற 163 குழந்தைகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் செவித் திறன் பெற்றனர்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரெத்தினவேலு கூறியதாவது:

பிறவியிலேயே செவித்திறன் இல்லாத 163 குழந்தைகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு மூலமாக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து செவித்திறன் கிடைக்கச் செய்துள்ளோம்.

குழந்தைகளுக்கு காது கேட் கும் கருவி, உரிய பயிற்று நர்கள் மூலமாகப் பேச்சுப் பயிற்சிகளை வழங்கி பேச்சுத் திறன்பெற வைத்துள்ளோம். இதன் மூலம் ரூ.10 கோடியே ’72 லட்சம் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 550படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் குறைபாடு உள்ளவர்களை மட்டும் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு தனியாக 100 படுக்கையுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கரோனா தடுப் பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் செவித் திறன் பெற்ற சிறுவர்கள் டீன் ரெத்தினவேலு மற்றும் மருத்துவர்கள் முன்னிலை யில் பாடல் பாடி அசத்தினர். அப் போது காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவு தலைவர் தினகரன் மற்றும் மருத்துவக் குழு வினர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment