FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, January 14, 2022

மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் 163 குழந்தைகளுக்கு செவித்திறன்

10.01.2022
மதுரை
பிறவியிலேயே செவித்திறனற்ற 163 குழந்தைகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் செவித் திறன் பெற்றனர்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரெத்தினவேலு கூறியதாவது:

பிறவியிலேயே செவித்திறன் இல்லாத 163 குழந்தைகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு மூலமாக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து செவித்திறன் கிடைக்கச் செய்துள்ளோம்.

குழந்தைகளுக்கு காது கேட் கும் கருவி, உரிய பயிற்று நர்கள் மூலமாகப் பேச்சுப் பயிற்சிகளை வழங்கி பேச்சுத் திறன்பெற வைத்துள்ளோம். இதன் மூலம் ரூ.10 கோடியே ’72 லட்சம் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 550படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் குறைபாடு உள்ளவர்களை மட்டும் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு தனியாக 100 படுக்கையுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கரோனா தடுப் பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் செவித் திறன் பெற்ற சிறுவர்கள் டீன் ரெத்தினவேலு மற்றும் மருத்துவர்கள் முன்னிலை யில் பாடல் பாடி அசத்தினர். அப் போது காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவு தலைவர் தினகரன் மற்றும் மருத்துவக் குழு வினர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment