FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, January 14, 2022

மதுரை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் 163 குழந்தைகளுக்கு செவித்திறன்

10.01.2022
மதுரை
பிறவியிலேயே செவித்திறனற்ற 163 குழந்தைகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் செவித் திறன் பெற்றனர்.

இதுகுறித்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் ரெத்தினவேலு கூறியதாவது:

பிறவியிலேயே செவித்திறன் இல்லாத 163 குழந்தைகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு மூலமாக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து செவித்திறன் கிடைக்கச் செய்துள்ளோம்.

குழந்தைகளுக்கு காது கேட் கும் கருவி, உரிய பயிற்று நர்கள் மூலமாகப் பேச்சுப் பயிற்சிகளை வழங்கி பேச்சுத் திறன்பெற வைத்துள்ளோம். இதன் மூலம் ரூ.10 கோடியே ’72 லட்சம் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 550படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் குறைபாடு உள்ளவர்களை மட்டும் மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு தனியாக 100 படுக்கையுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் கரோனா தடுப் பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் செவித் திறன் பெற்ற சிறுவர்கள் டீன் ரெத்தினவேலு மற்றும் மருத்துவர்கள் முன்னிலை யில் பாடல் பாடி அசத்தினர். அப் போது காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவு தலைவர் தினகரன் மற்றும் மருத்துவக் குழு வினர் உடன் இருந்தனர்.


No comments:

Post a Comment