FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, January 23, 2022

திட்டக்குடி அருகே கந்து வட்டி கும்பலுக்கு பயந்து போலீசில் தாய்- வாய் பேச முடியாத, காது கோளாத மகள் தஞ்சம்

14.01.2022 திட்டக்குடி:

திட்டக்குடி அருகே வசிஷ்டபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செங்கான். இவர் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி கொளஞ்சி (வயது 42) கூலி வேலை பார்த்து வருகிறார்.

இவர்களது மகன் சிலம்பரசன் (26), மோனிஷா (24), வாய் பேசாத மகள் நிவேதா (21) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் கொளஞ்சி புகார் மனு அளித்து உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நான் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணவேணி என்பவரிடம் குடும்ப செலவுக்கு கொளஞ்சி ரூ. 50 ஆயிரம் 3 வட்டி வீதம் பணம் வாங்கினேன். இந்த பணத்துக்கு முதல் தவணையாக ரூ. 45 ஆயிரம், 2-வது தவணையாக மகளிர் சுய உதவி குழு மூலம் பெற்ற 30 ஆயிரம், 3-வது தவணையாக தனது மகன் வேலை செய்த ரூ.15ஆயிரம், 4-வது தவணையாக வேப்பூரில் வசிக்கும் தனது மகள் மோனிஷா கணவர் மூலம் 10 ஆயிரம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ. ஒரு லட்சம் கொடுத்துள்ளேன்.

இந்நிலையில் கிருஷ்ணவேணி மேலும் பணம் கேட்டு மிரட்டுகிறார். இதற்கு பயந்து எனது மகனை இங்கே விட்டுவிட்டு எனது வாய் பேசாத மகளை அழைத்துக் கொண்டு கேரளாவுக்கு பிழைப்பு தேடி சென்று விட்டேன். தொடர்ந்து எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருகிறார்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

இது குறித்து திட்டக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




No comments:

Post a Comment