FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, January 23, 2022

திட்டக்குடி அருகே கந்து வட்டி கும்பலுக்கு பயந்து போலீசில் தாய்- வாய் பேச முடியாத, காது கோளாத மகள் தஞ்சம்

14.01.2022 திட்டக்குடி:

திட்டக்குடி அருகே வசிஷ்டபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செங்கான். இவர் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மனைவி கொளஞ்சி (வயது 42) கூலி வேலை பார்த்து வருகிறார்.

இவர்களது மகன் சிலம்பரசன் (26), மோனிஷா (24), வாய் பேசாத மகள் நிவேதா (21) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் கொளஞ்சி புகார் மனு அளித்து உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நான் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணவேணி என்பவரிடம் குடும்ப செலவுக்கு கொளஞ்சி ரூ. 50 ஆயிரம் 3 வட்டி வீதம் பணம் வாங்கினேன். இந்த பணத்துக்கு முதல் தவணையாக ரூ. 45 ஆயிரம், 2-வது தவணையாக மகளிர் சுய உதவி குழு மூலம் பெற்ற 30 ஆயிரம், 3-வது தவணையாக தனது மகன் வேலை செய்த ரூ.15ஆயிரம், 4-வது தவணையாக வேப்பூரில் வசிக்கும் தனது மகள் மோனிஷா கணவர் மூலம் 10 ஆயிரம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ. ஒரு லட்சம் கொடுத்துள்ளேன்.

இந்நிலையில் கிருஷ்ணவேணி மேலும் பணம் கேட்டு மிரட்டுகிறார். இதற்கு பயந்து எனது மகனை இங்கே விட்டுவிட்டு எனது வாய் பேசாத மகளை அழைத்துக் கொண்டு கேரளாவுக்கு பிழைப்பு தேடி சென்று விட்டேன். தொடர்ந்து எனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்து வருகிறார்.

இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.

இது குறித்து திட்டக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




No comments:

Post a Comment