FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, January 23, 2022

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிக்கு வாய் பேச முடியாத, காது கோளாத சிறுமி கட்டாய திருமணம் பெற்றோர் உட்பட 5 பேர் கைது

19.01.2022
ஈரோடு: ஈரோட்டில் மாற்றுத்திறனாளிக்கு சிறுமியை கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் வைராபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (28). டெய்லர். வாய் பேச முடியாத, காது கோளாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் ராதாகிருஷ்ணன், கலைவாணி ஆகியோர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் பணம், நகை ஆசை காட்டிசம்மதிக்க வைத்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கட்டாயத்தின்பேரில் சிறுமிக்கும், மாரிமுத்துக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, சிறு வயது திருமணம் குறித்து அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தி, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர். இதற்கு உறுதுணையாக இருந்ததாக அவரது பெற்றோர் ராதாகிருஷ்ணன், கலைவாணி மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.



No comments:

Post a Comment