FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, January 23, 2022

ஈரோட்டில் மாற்றுத்திறனாளிக்கு வாய் பேச முடியாத, காது கோளாத சிறுமி கட்டாய திருமணம் பெற்றோர் உட்பட 5 பேர் கைது

19.01.2022
ஈரோடு: ஈரோட்டில் மாற்றுத்திறனாளிக்கு சிறுமியை கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் வைராபாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (28). டெய்லர். வாய் பேச முடியாத, காது கோளாத மாற்றுத்திறனாளி. இவருக்கு திருமணம் செய்வதற்காக பெற்றோர் ராதாகிருஷ்ணன், கலைவாணி ஆகியோர், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் பணம், நகை ஆசை காட்டிசம்மதிக்க வைத்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கட்டாயத்தின்பேரில் சிறுமிக்கும், மாரிமுத்துக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது, சிறு வயது திருமணம் குறித்து அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர், குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரணை நடத்தி, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து மாரிமுத்துவை கைது செய்தனர். இதற்கு உறுதுணையாக இருந்ததாக அவரது பெற்றோர் ராதாகிருஷ்ணன், கலைவாணி மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். சிறுமியை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.



No comments:

Post a Comment