FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, January 23, 2022

வாய் பேச இயலாத வயதான தம்பதியின் நிலத்தை திமுக ஊ.ம.தலைவர் அபகரிக்க முயற்சி: முதியோர் கண்ணீர் கோரிக்கை

21.01.2022
சேலம் மாவட்டம் வீராணம் கோராத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் கனகராஜ், பாஸ்கரன் ஆகியோர் வெளியூரில் வேலை செய்து வருகின்றனர். கணவன், மனைவி இருவரும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளியான மற்றொரு மகன் நடராஜனுடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முனியம்மாள் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு அருகில் 12 சென்ட் நிலத்தை 2005ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியுள்ளார். இந்த நிலத்தை கோராத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் திமுக ஊராட்சி கழகச் செயலாளருமான சுப்பிரமணியம் மற்றும் நிலத்தில் அருகிலுள்ள சக்திவேல் உள்ளிட்டோர் அபகரிக்க முயற்சி செய்வதாக வீராணம் காவல் நிலையத்தில் முனியம்மாள் புகார் செய்தார். ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் முனியம்மாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது .

இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி மற்றும் சக்திவேல் ஆகியோர் மீண்டும் நிலத்தை ஆக்கிரமித்து நெருக்கடி கொடுத்து துன்புறுத்தி வருவதாகவும் இதனை கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட வயதான தம்பதியினர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் மனு ஒன்றை ஆதாரத்துடன் கொடுத்துள்ளனர்.

''தங்களை தினந்தோறும் மிரட்டுவதாகவும் இதனால் அங்கு வசிக்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் தங்க கஷ்டப்பட்டு வாங்கிய நிலத்தை விட்டு விட்டு செல்லுமாறு அவர்கள் மிரட்டி வருவதாகவும் இதனால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கோரி எங்களுக்கு சொந்தமான நிலத்தை அவர்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும்'' எனக் கோரி மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கடந்த திமுக ஆட்சியில் நில அபகரிப்பு புகாரால் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக நிர்வாகிகள் மீது நில அபகரிப்பு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பது கட்சி நிர்வாகிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



No comments:

Post a Comment