FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, January 9, 2022

வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அரசு; செஸ் வீராங்கனை குமுறல்


ஜலந்தர்,
பஞ்சாபின் ஜலந்தர் நகரை சேர்ந்த செஸ் வீராங்கனை மாலிகா ஹண்டா. காது கேளாத, வாய் பேச முடியாத இவர் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில், தனது டுவிட்டரில் ஹண்டா வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் மாநில அரசு தனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

பஞ்சாபின் முன்னாள் விளையாட்டு துறை மந்திரி பண பரிசு அறிவித்து எனக்கு அழைப்பு விடுத்த கடிதம் என்னிடம் உள்ளது. ஆனால், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு அது ரத்து செய்யப்பட்டது.

இதன்பின்பு, கடந்த டிசம்பர் 31ந்தேதி விளையாட்டு துறை மந்திரி பர்கத் சிங்கை சந்தித்தேன். அவர், காது கேளாதோர் விளையாட்டுக்கு, அரசு வேலை தரவோ அல்லது பரிசு எதுவும் அளிக்கவோ முடியாது. அதற்கான கொள்கை அரசிடம் எதுவும் இல்லை என கூறுகிறார்.

முன்னாள் விளையாட்டு துறை மந்திரி கூறியவற்றை பர்கத் சிங்கிடம் கூறினேன். ஆனால் அவர், நான் கூறவில்லை. முன்னாள் மந்திரி கூறியுள்ளார். அரசால் எதுவும் செய்ய முடியாது என கூறுகிறார்.

காங்கிரஸ் அரசில் என்னுடைய 5 ஆண்டு காலங்கள் வீணாகி விட்டன. என்னை அவர்கள் முட்டாளாக்கி விட்டனர். காது கேளாதோர் விளையாட்டை பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என குமுறலுடன் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment