FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, January 9, 2022

வாக்குறுதியை நிறைவேற்ற தவறிய அரசு; செஸ் வீராங்கனை குமுறல்


ஜலந்தர்,
பஞ்சாபின் ஜலந்தர் நகரை சேர்ந்த செஸ் வீராங்கனை மாலிகா ஹண்டா. காது கேளாத, வாய் பேச முடியாத இவர் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில், தனது டுவிட்டரில் ஹண்டா வெளியிட்டுள்ள பதிவில், பஞ்சாப் மாநில அரசு தனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

பஞ்சாபின் முன்னாள் விளையாட்டு துறை மந்திரி பண பரிசு அறிவித்து எனக்கு அழைப்பு விடுத்த கடிதம் என்னிடம் உள்ளது. ஆனால், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு அது ரத்து செய்யப்பட்டது.

இதன்பின்பு, கடந்த டிசம்பர் 31ந்தேதி விளையாட்டு துறை மந்திரி பர்கத் சிங்கை சந்தித்தேன். அவர், காது கேளாதோர் விளையாட்டுக்கு, அரசு வேலை தரவோ அல்லது பரிசு எதுவும் அளிக்கவோ முடியாது. அதற்கான கொள்கை அரசிடம் எதுவும் இல்லை என கூறுகிறார்.

முன்னாள் விளையாட்டு துறை மந்திரி கூறியவற்றை பர்கத் சிங்கிடம் கூறினேன். ஆனால் அவர், நான் கூறவில்லை. முன்னாள் மந்திரி கூறியுள்ளார். அரசால் எதுவும் செய்ய முடியாது என கூறுகிறார்.

காங்கிரஸ் அரசில் என்னுடைய 5 ஆண்டு காலங்கள் வீணாகி விட்டன. என்னை அவர்கள் முட்டாளாக்கி விட்டனர். காது கேளாதோர் விளையாட்டை பற்றி அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என குமுறலுடன் கூறியுள்ளார்.




No comments:

Post a Comment