FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 20, 2022

எங்களையும் கண்டு கொள்ளுங்கள்; முதல்-மந்திரிக்கு வேண்டுகோள் விடுத்த மாற்றுத்திறனாளி வீரர்

17.01.2022
புதுடெல்லி,
அரியானாவை சேர்ந்த வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மல்யுத்த வீரர் விரேந்தர் சிங். கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

இவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அரியானா முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் அவர்களே. நான் பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளேனா? அரியானாவில் தன்னை போன்று உள்ள காது கேளாத விளையாட்டு வீரர்களை அங்கீகாரம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.

எங்களுக்கான கமிட்டி எப்போது அமைக்கப்படும்? சம உரிமையை என்று நான் பெறுவேன்? பிரதமர் மோடி அவர்களே. உங்களை நான் சந்தித்தபோது, அநீதி நடக்க விடமாட்டோம் என கூறினீர்கள். ஆனால், தற்போது அது நடந்து வருகிறது என தெரிவித்து உள்ளார்.

இதுதவிர, தன்னை போன்ற வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளை முதல்-மந்திரி அங்கீககரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர், கடந்த ஆண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார்.



No comments:

Post a Comment