FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, January 28, 2022

சித்ரவதை செய்யும் மகன்கள்: காது கேட்காத மூதாட்டி கண்ணீர்

26.01.2022
கோவை:சொத்துக்களை அபகரித்ததோடு, தினமும் அடித்து துன்புறுத்தும் மகன்கள் குறித்து, காது கேட்காத மூதாட்டி, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.கோவை, சலீவன் வீதியை சேர்ந்தவர் ராஜம், 65. இவர், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:என் கணவர் மணி, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கணவரின் சுய சம்பாத்தியத்தில் கேரளா, பாலக்காட்டில் ஒன்னேகால் ஏக்கர் தோட்டம், 4 கடைகள் மற்றும் கோவை சலீவன் வீதியில் வீடு உள்ளது.கணவர் இறந்தபின், 3 மகன்களும் சேர்ந்து, எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை மிரட்டி காலி செய்ய வைத்து விட்டனர். போலி உயில் தயாரித்து எனக்கு சொத்தில் பங்கு தர முடியாது என மறுக்கின்றனர். இதுகுறித்து கேள்வி கேட்ட என்னை, மகன்கள் மற்றும் அவரது மனைவிகள் அடித்து கொடுமை செய்கின்றனர்.போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு சரியாக காது கேட்காது. பல்வேறு உடல்நல கோளாறு இருக்கிறது; கவனிக்க யாரும் இல்லை. கணவரின் சொத்துக்களை, 5 பாகங்களாக பிரித்து, எனக்குரிய பகுதியை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.


No comments:

Post a Comment