FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, January 28, 2022

சித்ரவதை செய்யும் மகன்கள்: காது கேட்காத மூதாட்டி கண்ணீர்

26.01.2022
கோவை:சொத்துக்களை அபகரித்ததோடு, தினமும் அடித்து துன்புறுத்தும் மகன்கள் குறித்து, காது கேட்காத மூதாட்டி, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.கோவை, சலீவன் வீதியை சேர்ந்தவர் ராஜம், 65. இவர், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:என் கணவர் மணி, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கணவரின் சுய சம்பாத்தியத்தில் கேரளா, பாலக்காட்டில் ஒன்னேகால் ஏக்கர் தோட்டம், 4 கடைகள் மற்றும் கோவை சலீவன் வீதியில் வீடு உள்ளது.கணவர் இறந்தபின், 3 மகன்களும் சேர்ந்து, எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை மிரட்டி காலி செய்ய வைத்து விட்டனர். போலி உயில் தயாரித்து எனக்கு சொத்தில் பங்கு தர முடியாது என மறுக்கின்றனர். இதுகுறித்து கேள்வி கேட்ட என்னை, மகன்கள் மற்றும் அவரது மனைவிகள் அடித்து கொடுமை செய்கின்றனர்.போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு சரியாக காது கேட்காது. பல்வேறு உடல்நல கோளாறு இருக்கிறது; கவனிக்க யாரும் இல்லை. கணவரின் சொத்துக்களை, 5 பாகங்களாக பிரித்து, எனக்குரிய பகுதியை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.


No comments:

Post a Comment