FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Friday, January 28, 2022

சித்ரவதை செய்யும் மகன்கள்: காது கேட்காத மூதாட்டி கண்ணீர்

26.01.2022
கோவை:சொத்துக்களை அபகரித்ததோடு, தினமும் அடித்து துன்புறுத்தும் மகன்கள் குறித்து, காது கேட்காத மூதாட்டி, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.கோவை, சலீவன் வீதியை சேர்ந்தவர் ராஜம், 65. இவர், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:என் கணவர் மணி, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கணவரின் சுய சம்பாத்தியத்தில் கேரளா, பாலக்காட்டில் ஒன்னேகால் ஏக்கர் தோட்டம், 4 கடைகள் மற்றும் கோவை சலீவன் வீதியில் வீடு உள்ளது.கணவர் இறந்தபின், 3 மகன்களும் சேர்ந்து, எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை மிரட்டி காலி செய்ய வைத்து விட்டனர். போலி உயில் தயாரித்து எனக்கு சொத்தில் பங்கு தர முடியாது என மறுக்கின்றனர். இதுகுறித்து கேள்வி கேட்ட என்னை, மகன்கள் மற்றும் அவரது மனைவிகள் அடித்து கொடுமை செய்கின்றனர்.போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு சரியாக காது கேட்காது. பல்வேறு உடல்நல கோளாறு இருக்கிறது; கவனிக்க யாரும் இல்லை. கணவரின் சொத்துக்களை, 5 பாகங்களாக பிரித்து, எனக்குரிய பகுதியை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.


No comments:

Post a Comment