FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, January 28, 2022

சித்ரவதை செய்யும் மகன்கள்: காது கேட்காத மூதாட்டி கண்ணீர்

26.01.2022
கோவை:சொத்துக்களை அபகரித்ததோடு, தினமும் அடித்து துன்புறுத்தும் மகன்கள் குறித்து, காது கேட்காத மூதாட்டி, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.கோவை, சலீவன் வீதியை சேர்ந்தவர் ராஜம், 65. இவர், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனு:என் கணவர் மணி, 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கணவரின் சுய சம்பாத்தியத்தில் கேரளா, பாலக்காட்டில் ஒன்னேகால் ஏக்கர் தோட்டம், 4 கடைகள் மற்றும் கோவை சலீவன் வீதியில் வீடு உள்ளது.கணவர் இறந்தபின், 3 மகன்களும் சேர்ந்து, எங்கள் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை மிரட்டி காலி செய்ய வைத்து விட்டனர். போலி உயில் தயாரித்து எனக்கு சொத்தில் பங்கு தர முடியாது என மறுக்கின்றனர். இதுகுறித்து கேள்வி கேட்ட என்னை, மகன்கள் மற்றும் அவரது மனைவிகள் அடித்து கொடுமை செய்கின்றனர்.போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு சரியாக காது கேட்காது. பல்வேறு உடல்நல கோளாறு இருக்கிறது; கவனிக்க யாரும் இல்லை. கணவரின் சொத்துக்களை, 5 பாகங்களாக பிரித்து, எனக்குரிய பகுதியை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.


No comments:

Post a Comment