FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Friday, January 28, 2022

இந்திய காதுகேளாத பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்ட வெளிநாட்டு தம்பதியர் - பாராட்டு மழையில் நனைத்த நெட்டிசன்கள்!

27.01.2022
‘ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்ற அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியான வீடியோ அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து தங்களுக்கான செல்ல மகளை வெளிநாட்டு தம்பதியர் தத்தெடுத்துக் கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

ஷான் மைக்கேல் மைலியஸ் மற்றும் ஜோஹனா ஜோ மைலியஸ் ஆகிய தம்பதியர்தான் இந்திய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டவர்கள் ஆவர். இதில், சுவாரஸ்யம் என்ன என்றால், இந்த தம்பதியருக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருப்பினும், இந்தியாவில் இருந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுக்க விரும்பினர்.

இந்தியாவில் உள்ள அமைப்புகள் மூலமாக 2 ஆண்டுகளுக்கும் மேல் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இறுதியாக, ‘நைனா’ என்ற பெண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்துள்ளனர். இதில், பாராட்டத்தகுந்த விஷயம் என்ன என்றால், நைனா செவித்திறன் பாதிப்பு உடையவர் என தெரிந்தும், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் மைக்கேல் - ஜோஹனா தம்பதியர் தத்தெடுத்துள்ளனர் என்பதே.

முன்னதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோவுக்கு “ஒரு குடும்பமாக இருக்க வேண்டும் என்றால் ஒரே மாதிரியான மரபணு கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை’’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இதில், குழந்தையை தத்தெடுப்பது குறித்த தங்களின் மகிழ்ச்சிக்குரிய அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, நைனாவின் மூத்த சகோதரி மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்.இந்திய குழந்தையை தத்தெடுத்த வெளிநாட்டு தம்பதியர்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுமார் 31,000 பேரின் இதயங்களை (லைக்குகள்) இந்த வீடியோ கொள்ளை அடித்தது. ”சோ ஸ்வீட்’ என்று கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், இதயம் மற்றும் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைப் போன்ற எமோஜிகளை பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு பதிவர் வெளியிட்ட கமென்டில், ”ஒரு குடும்பத்துக்கான பயணம் எத்தனை உணர்ச்சிகரமாக உள்ளது. கடவுள் இவர்களை ஆசிர்வதிப்பாராக’’ என்று கூறப்பட்டுள்ளது. ”அன்புக்கு எல்லை இல்லை’’ என்று மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, குழந்தை இல்லாத தம்பதிகள் கூட, மருத்துவ சிகிச்சை மூலமாக தங்களுக்கு என்று ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ள நீண்ட நெடிய முயற்சிகளை மேற்கொள்வர். எதுவுமே கை கூடாத நிலையில்தான் குழந்தையை தத்தெடுக்கும் முடிவுக்கு வருவார்கள். இத்தகைய காலகட்டத்தில் ஏற்கனவே தங்களுக்கு என ஒரு குழந்தை கொண்ட மைக்கேல் - ஜோஹனா தம்பதியர், மற்றொரு குழந்தையை தத்தெடுக்க முன்வந்தது அனைவராலும் பாராட்டத்தக்க விஷயமாக உள்ளது. குறிப்பாக, செவித்திறன் பாதிப்பு கொண்ட குழந்தையை தத்தெடுத்து, மனிதம் போற்றும் ஆயிரக்கணக்கானவர்களின் நெஞ்சங்களில் அவர்கள் இடம் பிடித்துள்ளனர்.இடம் பிடித்துள்ளனர்.


No comments:

Post a Comment