FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Friday, January 28, 2022

இந்திய காதுகேளாத பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்ட வெளிநாட்டு தம்பதியர் - பாராட்டு மழையில் நனைத்த நெட்டிசன்கள்!

27.01.2022
‘ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்ற அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியான வீடியோ அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து தங்களுக்கான செல்ல மகளை வெளிநாட்டு தம்பதியர் தத்தெடுத்துக் கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

ஷான் மைக்கேல் மைலியஸ் மற்றும் ஜோஹனா ஜோ மைலியஸ் ஆகிய தம்பதியர்தான் இந்திய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டவர்கள் ஆவர். இதில், சுவாரஸ்யம் என்ன என்றால், இந்த தம்பதியருக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருப்பினும், இந்தியாவில் இருந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுக்க விரும்பினர்.

இந்தியாவில் உள்ள அமைப்புகள் மூலமாக 2 ஆண்டுகளுக்கும் மேல் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இறுதியாக, ‘நைனா’ என்ற பெண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்துள்ளனர். இதில், பாராட்டத்தகுந்த விஷயம் என்ன என்றால், நைனா செவித்திறன் பாதிப்பு உடையவர் என தெரிந்தும், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் மைக்கேல் - ஜோஹனா தம்பதியர் தத்தெடுத்துள்ளனர் என்பதே.

முன்னதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோவுக்கு “ஒரு குடும்பமாக இருக்க வேண்டும் என்றால் ஒரே மாதிரியான மரபணு கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை’’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இதில், குழந்தையை தத்தெடுப்பது குறித்த தங்களின் மகிழ்ச்சிக்குரிய அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, நைனாவின் மூத்த சகோதரி மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்.இந்திய குழந்தையை தத்தெடுத்த வெளிநாட்டு தம்பதியர்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுமார் 31,000 பேரின் இதயங்களை (லைக்குகள்) இந்த வீடியோ கொள்ளை அடித்தது. ”சோ ஸ்வீட்’ என்று கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், இதயம் மற்றும் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைப் போன்ற எமோஜிகளை பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு பதிவர் வெளியிட்ட கமென்டில், ”ஒரு குடும்பத்துக்கான பயணம் எத்தனை உணர்ச்சிகரமாக உள்ளது. கடவுள் இவர்களை ஆசிர்வதிப்பாராக’’ என்று கூறப்பட்டுள்ளது. ”அன்புக்கு எல்லை இல்லை’’ என்று மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, குழந்தை இல்லாத தம்பதிகள் கூட, மருத்துவ சிகிச்சை மூலமாக தங்களுக்கு என்று ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ள நீண்ட நெடிய முயற்சிகளை மேற்கொள்வர். எதுவுமே கை கூடாத நிலையில்தான் குழந்தையை தத்தெடுக்கும் முடிவுக்கு வருவார்கள். இத்தகைய காலகட்டத்தில் ஏற்கனவே தங்களுக்கு என ஒரு குழந்தை கொண்ட மைக்கேல் - ஜோஹனா தம்பதியர், மற்றொரு குழந்தையை தத்தெடுக்க முன்வந்தது அனைவராலும் பாராட்டத்தக்க விஷயமாக உள்ளது. குறிப்பாக, செவித்திறன் பாதிப்பு கொண்ட குழந்தையை தத்தெடுத்து, மனிதம் போற்றும் ஆயிரக்கணக்கானவர்களின் நெஞ்சங்களில் அவர்கள் இடம் பிடித்துள்ளனர்.இடம் பிடித்துள்ளனர்.


No comments:

Post a Comment