FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Friday, January 28, 2022

இந்திய காதுகேளாத பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்ட வெளிநாட்டு தம்பதியர் - பாராட்டு மழையில் நனைத்த நெட்டிசன்கள்!

27.01.2022
‘ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்ற அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியான வீடியோ அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து தங்களுக்கான செல்ல மகளை வெளிநாட்டு தம்பதியர் தத்தெடுத்துக் கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

ஷான் மைக்கேல் மைலியஸ் மற்றும் ஜோஹனா ஜோ மைலியஸ் ஆகிய தம்பதியர்தான் இந்திய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டவர்கள் ஆவர். இதில், சுவாரஸ்யம் என்ன என்றால், இந்த தம்பதியருக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருப்பினும், இந்தியாவில் இருந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுக்க விரும்பினர்.

இந்தியாவில் உள்ள அமைப்புகள் மூலமாக 2 ஆண்டுகளுக்கும் மேல் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இறுதியாக, ‘நைனா’ என்ற பெண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்துள்ளனர். இதில், பாராட்டத்தகுந்த விஷயம் என்ன என்றால், நைனா செவித்திறன் பாதிப்பு உடையவர் என தெரிந்தும், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் மைக்கேல் - ஜோஹனா தம்பதியர் தத்தெடுத்துள்ளனர் என்பதே.

முன்னதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோவுக்கு “ஒரு குடும்பமாக இருக்க வேண்டும் என்றால் ஒரே மாதிரியான மரபணு கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை’’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இதில், குழந்தையை தத்தெடுப்பது குறித்த தங்களின் மகிழ்ச்சிக்குரிய அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, நைனாவின் மூத்த சகோதரி மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்.இந்திய குழந்தையை தத்தெடுத்த வெளிநாட்டு தம்பதியர்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுமார் 31,000 பேரின் இதயங்களை (லைக்குகள்) இந்த வீடியோ கொள்ளை அடித்தது. ”சோ ஸ்வீட்’ என்று கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், இதயம் மற்றும் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைப் போன்ற எமோஜிகளை பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு பதிவர் வெளியிட்ட கமென்டில், ”ஒரு குடும்பத்துக்கான பயணம் எத்தனை உணர்ச்சிகரமாக உள்ளது. கடவுள் இவர்களை ஆசிர்வதிப்பாராக’’ என்று கூறப்பட்டுள்ளது. ”அன்புக்கு எல்லை இல்லை’’ என்று மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, குழந்தை இல்லாத தம்பதிகள் கூட, மருத்துவ சிகிச்சை மூலமாக தங்களுக்கு என்று ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ள நீண்ட நெடிய முயற்சிகளை மேற்கொள்வர். எதுவுமே கை கூடாத நிலையில்தான் குழந்தையை தத்தெடுக்கும் முடிவுக்கு வருவார்கள். இத்தகைய காலகட்டத்தில் ஏற்கனவே தங்களுக்கு என ஒரு குழந்தை கொண்ட மைக்கேல் - ஜோஹனா தம்பதியர், மற்றொரு குழந்தையை தத்தெடுக்க முன்வந்தது அனைவராலும் பாராட்டத்தக்க விஷயமாக உள்ளது. குறிப்பாக, செவித்திறன் பாதிப்பு கொண்ட குழந்தையை தத்தெடுத்து, மனிதம் போற்றும் ஆயிரக்கணக்கானவர்களின் நெஞ்சங்களில் அவர்கள் இடம் பிடித்துள்ளனர்.இடம் பிடித்துள்ளனர்.


No comments:

Post a Comment