FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Friday, January 28, 2022

இந்திய காதுகேளாத பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்ட வெளிநாட்டு தம்பதியர் - பாராட்டு மழையில் நனைத்த நெட்டிசன்கள்!

27.01.2022
‘ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே’ என்ற அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்மையில் வெளியான வீடியோ அனைவரின் இதயங்களையும் கொள்ளை கொண்டுள்ளது. இந்தியாவில் இருந்து தங்களுக்கான செல்ல மகளை வெளிநாட்டு தம்பதியர் தத்தெடுத்துக் கொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

ஷான் மைக்கேல் மைலியஸ் மற்றும் ஜோஹனா ஜோ மைலியஸ் ஆகிய தம்பதியர்தான் இந்திய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டவர்கள் ஆவர். இதில், சுவாரஸ்யம் என்ன என்றால், இந்த தம்பதியருக்கு ஏற்கனவே பெண் குழந்தை ஒன்று உள்ளது. இருப்பினும், இந்தியாவில் இருந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுக்க விரும்பினர்.

இந்தியாவில் உள்ள அமைப்புகள் மூலமாக 2 ஆண்டுகளுக்கும் மேல் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இறுதியாக, ‘நைனா’ என்ற பெண் குழந்தையை அவர்கள் தத்தெடுத்துள்ளனர். இதில், பாராட்டத்தகுந்த விஷயம் என்ன என்றால், நைனா செவித்திறன் பாதிப்பு உடையவர் என தெரிந்தும், மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் மைக்கேல் - ஜோஹனா தம்பதியர் தத்தெடுத்துள்ளனர் என்பதே.

முன்னதாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோவுக்கு “ஒரு குடும்பமாக இருக்க வேண்டும் என்றால் ஒரே மாதிரியான மரபணு கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை’’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. இதில், குழந்தையை தத்தெடுப்பது குறித்த தங்களின் மகிழ்ச்சிக்குரிய அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, நைனாவின் மூத்த சகோதரி மிகுந்த மகிழ்ச்சியில் காணப்பட்டார்.இந்திய குழந்தையை தத்தெடுத்த வெளிநாட்டு தம்பதியர்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுமார் 31,000 பேரின் இதயங்களை (லைக்குகள்) இந்த வீடியோ கொள்ளை அடித்தது. ”சோ ஸ்வீட்’ என்று கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர், இதயம் மற்றும் ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைப் போன்ற எமோஜிகளை பகிர்ந்து கொண்டார்.

மற்றொரு பதிவர் வெளியிட்ட கமென்டில், ”ஒரு குடும்பத்துக்கான பயணம் எத்தனை உணர்ச்சிகரமாக உள்ளது. கடவுள் இவர்களை ஆசிர்வதிப்பாராக’’ என்று கூறப்பட்டுள்ளது. ”அன்புக்கு எல்லை இல்லை’’ என்று மற்றொரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, குழந்தை இல்லாத தம்பதிகள் கூட, மருத்துவ சிகிச்சை மூலமாக தங்களுக்கு என்று ஒரு குழந்தையை பெற்றெடுத்துக் கொள்ள நீண்ட நெடிய முயற்சிகளை மேற்கொள்வர். எதுவுமே கை கூடாத நிலையில்தான் குழந்தையை தத்தெடுக்கும் முடிவுக்கு வருவார்கள். இத்தகைய காலகட்டத்தில் ஏற்கனவே தங்களுக்கு என ஒரு குழந்தை கொண்ட மைக்கேல் - ஜோஹனா தம்பதியர், மற்றொரு குழந்தையை தத்தெடுக்க முன்வந்தது அனைவராலும் பாராட்டத்தக்க விஷயமாக உள்ளது. குறிப்பாக, செவித்திறன் பாதிப்பு கொண்ட குழந்தையை தத்தெடுத்து, மனிதம் போற்றும் ஆயிரக்கணக்கானவர்களின் நெஞ்சங்களில் அவர்கள் இடம் பிடித்துள்ளனர்.இடம் பிடித்துள்ளனர்.


No comments:

Post a Comment