FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, January 12, 2022

மக்களின் உதவியை நாடும் மாற்றுத்திறனாளி… வித்தியாச முயற்சியில் கோரிக்கை!



02.01.2022
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள மாலைக்கண்டான் கிராமத்தை சேர்ந்தவர் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி மணிகண்டன் (41). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சுவர் ஓவியம் வரைதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது புதிய காலகட்டத்தில் சுவரோவியங்கள் எந்திரங்கள் மூலம் வரையப்படுவதால் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வந்தார்.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று ஒரு வாரம் தங்கி அங்குள்ள பொது இடங்களில் ஓவியம் வரைவார். அதில் வரும் வருமானம் மூலம் தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே, இந்து கடவுளான சிவனின் ஓவியத்தை வரைந்தார். அதற்கு கீழ் அய்யா நான் ஊமை. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். உதவி செய்யுங்கள் என்ற வாசகத்தை எழுதி பொதுமக்களின் உதவியை நாடினார்.

நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள சாலையில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை அங்குள்ள அனைவரும் கண்டு சென்றனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மாவட்டம் மாவட்டமாக, மக்களின் உதவியை நாடிச் செல்லும் மாற்று திறனாளியை கடந்து செல்லும் பலரும் மனக் கவலையுடன் பார்த்து சென்றனர்.


No comments:

Post a Comment