FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Wednesday, January 12, 2022

மக்களின் உதவியை நாடும் மாற்றுத்திறனாளி… வித்தியாச முயற்சியில் கோரிக்கை!



02.01.2022
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள மாலைக்கண்டான் கிராமத்தை சேர்ந்தவர் வாய் பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி மணிகண்டன் (41). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சுவர் ஓவியம் வரைதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது புதிய காலகட்டத்தில் சுவரோவியங்கள் எந்திரங்கள் மூலம் வரையப்படுவதால் வேலை வாய்ப்பு இன்றி தவித்து வந்தார்.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று ஒரு வாரம் தங்கி அங்குள்ள பொது இடங்களில் ஓவியம் வரைவார். அதில் வரும் வருமானம் மூலம் தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

இன்று விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் எதிரே, இந்து கடவுளான சிவனின் ஓவியத்தை வரைந்தார். அதற்கு கீழ் அய்யா நான் ஊமை. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். உதவி செய்யுங்கள் என்ற வாசகத்தை எழுதி பொதுமக்களின் உதவியை நாடினார்.

நீதிமன்ற வளாகம் எதிரே உள்ள சாலையில் வரையப்பட்டிருந்த ஓவியத்தை அங்குள்ள அனைவரும் கண்டு சென்றனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மாவட்டம் மாவட்டமாக, மக்களின் உதவியை நாடிச் செல்லும் மாற்று திறனாளியை கடந்து செல்லும் பலரும் மனக் கவலையுடன் பார்த்து சென்றனர்.


No comments:

Post a Comment