FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, January 23, 2022

பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலனில்லாததால் வாய் பேச முடியாத 4 வயது மகன் தலையணையால் அமுக்கி கொலை

22.01.2022
சென்னை: பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாததால் வாய் பேச முடியாத 4 வயது மகனை பெற்ற தாயே தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் ஷோபா (31). இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டையை ேசர்ந்த மென்பொறியாளர் தினேஷ்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஹிர்த்திக் என பெயர் வைத்து மகனை ஆசையாக வளர்த்து வந்தனர். ஆனால் ஒன்றரை வயது கடந்தும் ஹிர்த்திக் பேசவில்லை. பிறகு தனது மகனுக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் அவன் வாய் பேசவில்லை. உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் மகன் ஏன் பேசவில்லை என்று கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையில் இருந்த ஷோபா, ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரது கணவர் தினேஷ்குமார் தனது மனைவியை பெங்களூருவுக்கு அழைத்து சென்று மனநலம் பாதிப்புக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 17ம் தேதி ஷோபா பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள கணவர் வீட்டில் இருந்து தனது வாய் பேச முடியாத மகனுடன் அண்ணா சாலையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். ஷோபாவின் தாய், அண்ணா சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்த ஷோபாவின் தாய், வெகு நேரம் கதவை தட்டியும் ஷோபா கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஷோபா அறையில் உள்ள மின்சிறியில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

அருகில் உள்ள கட்டிலில் வாய் பேச முடியாத மகன் தலையணையால் அழுத்திய நிலையில் உயிரிழந்து கிடந்தான். இதை பார்த்து ஷோபாவின் தாய் அலறி துடித்தார். தகவலறிந்த அண்ணா சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஷோபா மற்றும் தலையணையால் கொலை செய்யப்பட்ட 4 வயது மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் வாய் பேச முடியாதால் மனமுடைந்த தாய், மனநலம் பாதிக்கப்பட்டு தனது மகனை கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.




No comments:

Post a Comment