FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Sunday, January 23, 2022

பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலனில்லாததால் வாய் பேச முடியாத 4 வயது மகன் தலையணையால் அமுக்கி கொலை

22.01.2022
சென்னை: பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாததால் வாய் பேச முடியாத 4 வயது மகனை பெற்ற தாயே தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் ஷோபா (31). இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டையை ேசர்ந்த மென்பொறியாளர் தினேஷ்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஹிர்த்திக் என பெயர் வைத்து மகனை ஆசையாக வளர்த்து வந்தனர். ஆனால் ஒன்றரை வயது கடந்தும் ஹிர்த்திக் பேசவில்லை. பிறகு தனது மகனுக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் அவன் வாய் பேசவில்லை. உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் மகன் ஏன் பேசவில்லை என்று கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையில் இருந்த ஷோபா, ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரது கணவர் தினேஷ்குமார் தனது மனைவியை பெங்களூருவுக்கு அழைத்து சென்று மனநலம் பாதிப்புக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 17ம் தேதி ஷோபா பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள கணவர் வீட்டில் இருந்து தனது வாய் பேச முடியாத மகனுடன் அண்ணா சாலையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். ஷோபாவின் தாய், அண்ணா சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்த ஷோபாவின் தாய், வெகு நேரம் கதவை தட்டியும் ஷோபா கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஷோபா அறையில் உள்ள மின்சிறியில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

அருகில் உள்ள கட்டிலில் வாய் பேச முடியாத மகன் தலையணையால் அழுத்திய நிலையில் உயிரிழந்து கிடந்தான். இதை பார்த்து ஷோபாவின் தாய் அலறி துடித்தார். தகவலறிந்த அண்ணா சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஷோபா மற்றும் தலையணையால் கொலை செய்யப்பட்ட 4 வயது மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் வாய் பேச முடியாதால் மனமுடைந்த தாய், மனநலம் பாதிக்கப்பட்டு தனது மகனை கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.




No comments:

Post a Comment