FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, January 23, 2022

பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலனில்லாததால் வாய் பேச முடியாத 4 வயது மகன் தலையணையால் அமுக்கி கொலை

22.01.2022
சென்னை: பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாததால் வாய் பேச முடியாத 4 வயது மகனை பெற்ற தாயே தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, பின்னர் அவரும் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் ஷோபா (31). இவருக்கு கடந்த 2016ம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டையை ேசர்ந்த மென்பொறியாளர் தினேஷ்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. ஹிர்த்திக் என பெயர் வைத்து மகனை ஆசையாக வளர்த்து வந்தனர். ஆனால் ஒன்றரை வயது கடந்தும் ஹிர்த்திக் பேசவில்லை. பிறகு தனது மகனுக்கு பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் அவன் வாய் பேசவில்லை. உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்கள் மகன் ஏன் பேசவில்லை என்று கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையில் இருந்த ஷோபா, ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரது கணவர் தினேஷ்குமார் தனது மனைவியை பெங்களூருவுக்கு அழைத்து சென்று மனநலம் பாதிப்புக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 17ம் தேதி ஷோபா பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள கணவர் வீட்டில் இருந்து தனது வாய் பேச முடியாத மகனுடன் அண்ணா சாலையில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். ஷோபாவின் தாய், அண்ணா சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல், நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு வந்த ஷோபாவின் தாய், வெகு நேரம் கதவை தட்டியும் ஷோபா கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஷோபா அறையில் உள்ள மின்சிறியில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

அருகில் உள்ள கட்டிலில் வாய் பேச முடியாத மகன் தலையணையால் அழுத்திய நிலையில் உயிரிழந்து கிடந்தான். இதை பார்த்து ஷோபாவின் தாய் அலறி துடித்தார். தகவலறிந்த அண்ணா சாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஷோபா மற்றும் தலையணையால் கொலை செய்யப்பட்ட 4 வயது மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் வாய் பேச முடியாதால் மனமுடைந்த தாய், மனநலம் பாதிக்கப்பட்டு தனது மகனை கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.




No comments:

Post a Comment