FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 20, 2022

"பாகிஸ்தானில் இருந்து வந்தேனா?"- மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி

17.01.2022
காது கேளாத விளையாட்டு வீரர்கள், பாரா வீரர்களாக அங்கீகரிக்கப்படாததற்கு, மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த காதுகேளாத மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங்... காது கேளாதவர்கள் பாரா விளையாட்டு வீரர்கள் பிரிவில் சேர்க்கப்படாத நிலையில், தன்னைப் போன்றவர்களை அங்கீகரிக்க வேண்டும் என வீரேந்திர சிங் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், தனக்கு எப்போது சம உரிமை வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தான் பாகிஸ்தானில் இருந்து வந்தேனா என்றும், எப்போது தனது கோரிக்கை தொடர்பாக குழு அமைக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். தனக்கு அநீதி இழைக்கப்படாது எனக் கூறியதை பிரதமர் மோடி யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதனிடையே, வீரேந்திர சிங்கிற்கு உரிய மரியாதைகள் அளிக்கப்பட்டு வருவதாக ஹரியானா விளையாட்டுத்துறை தெரிவித்து உள்ளது.


No comments:

Post a Comment