FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, January 20, 2022

"பாகிஸ்தானில் இருந்து வந்தேனா?"- மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி

17.01.2022
காது கேளாத விளையாட்டு வீரர்கள், பாரா வீரர்களாக அங்கீகரிக்கப்படாததற்கு, மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த காதுகேளாத மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங்... காது கேளாதவர்கள் பாரா விளையாட்டு வீரர்கள் பிரிவில் சேர்க்கப்படாத நிலையில், தன்னைப் போன்றவர்களை அங்கீகரிக்க வேண்டும் என வீரேந்திர சிங் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், தனக்கு எப்போது சம உரிமை வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தான் பாகிஸ்தானில் இருந்து வந்தேனா என்றும், எப்போது தனது கோரிக்கை தொடர்பாக குழு அமைக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். தனக்கு அநீதி இழைக்கப்படாது எனக் கூறியதை பிரதமர் மோடி யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதனிடையே, வீரேந்திர சிங்கிற்கு உரிய மரியாதைகள் அளிக்கப்பட்டு வருவதாக ஹரியானா விளையாட்டுத்துறை தெரிவித்து உள்ளது.


No comments:

Post a Comment