FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Thursday, January 20, 2022

"பாகிஸ்தானில் இருந்து வந்தேனா?"- மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி

17.01.2022
காது கேளாத விளையாட்டு வீரர்கள், பாரா வீரர்களாக அங்கீகரிக்கப்படாததற்கு, மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்த காதுகேளாத மாற்றுத்திறனாளி மல்யுத்த வீரர் வீரேந்திர சிங்... காது கேளாதவர்கள் பாரா விளையாட்டு வீரர்கள் பிரிவில் சேர்க்கப்படாத நிலையில், தன்னைப் போன்றவர்களை அங்கீகரிக்க வேண்டும் என வீரேந்திர சிங் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், தனக்கு எப்போது சம உரிமை வழங்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தான் பாகிஸ்தானில் இருந்து வந்தேனா என்றும், எப்போது தனது கோரிக்கை தொடர்பாக குழு அமைக்கப்படும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். தனக்கு அநீதி இழைக்கப்படாது எனக் கூறியதை பிரதமர் மோடி யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் அதிருப்தி தெரிவித்து உள்ளார். இதனிடையே, வீரேந்திர சிங்கிற்கு உரிய மரியாதைகள் அளிக்கப்பட்டு வருவதாக ஹரியானா விளையாட்டுத்துறை தெரிவித்து உள்ளது.


No comments:

Post a Comment