FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, June 18, 2025

திருச்சி செவித் திறன் மாற்று திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் தனது பேனாவை வழங்கி பாராட்டு

கிளாட்’ தேர்வில் வெற்றி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவி ராகிணிக்கு சால்வை அணிவித்து, தனது பேனாவை பரிசாக வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.

17.06.2025
திருச்சி: ‘கிளாட்’ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்து, வாழ்த்து தெரிவித்தார். திருச்சி பெரிய மிளகுப்பாறை பண்டாரத்தெருவைச் சேர்ந்த தயாளன் மகள் ராகிணி. செவித் திறன் மாற்றுத்திறனாளியான ராகிணி, அங்குள்ள ஆதிதிராவிடர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து, ‘கிளாட்’ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ளார்.

ரூ.55 ஆயிரம் மதிப்புடைய பேனா: இந்நிலையில், தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, சென்னை செல்வதற்காக திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரிய மிளகுப்பாறை ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் அந்த மாணவி ராகிணியை சந்தித்து, பொன்னாடை போர்த்தி, ரூ.55 ஆயிரம் மதிப்புள்ள தனது பேனாவை பரிசளித்து பாராட்டி, வாழ்த்து கூறினார்.

இதுகுறித்து மாணவி ராகிணி கூறியதாவது: எனது தாய் சிறுவயதிலேயே என்னை விட்டு பிரிந்து சென்றார். எனது தந்தை, பாட்டி, அத்தை ஆகியோர்தான் என்னை வளர்த்தனர். ‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் ‘கிளாட்’ தேர்வு குறித்து அறிந்து, அந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றேன். இந்த வெற்றிக்கு எனது குடும்பத்தினர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்தான் காரணம்.தேசிய சட்டப்பல்கலையில் சேர்ந்த எனக்கு முதல்வர் ஸ்டாலின், தனது பேனாவை பரிசளித்து பாராட்டியது நெகிழ்ச்சியான தருணம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின், அதே பகுதியில் அண்மையில் மறைந்த முன்னாள் திமுக நகரச் செயலாளர் கே.கே.எம்.தங்கராசு இல்லத்துக்குச் சென்று, அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தி னருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்.பி. திருச்சி சிவா, மேயர் மு.அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் விமான நிலையம் சென்ற முதல்வர் ஸ்டாலின், பிற்பகலில் சென்னைக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றார்.


Deaf Bookwave: Connecting hearing impaired with relatable words and visuals



17.06.2025
Student Parmeet Singh created a safe space for the deaf community to express themselves in their language.

Parmeet Singh, a 21-year-old student of psychology and literature in Bengaluru, has established a book club that combines sign language and literature for the deaf community in India.

The club’s first Deaf Bookwave meetup was in Cubbon Park on 31 March. What began with nine members has now grown to over 27 readers. Information about the meetup was posted on Instagram, followed up by an invite to Bengaluru’s deaf community. The participants discussed books in Indian sign language, which helped them connect with the text and have a clearer perspective.

In a world of spaces designed for the hearing, Parmeet created a safe space for the deaf community to express themselves in their language. “Indian sign language is visual, emotional, and expressive. When we sign stories, we feel them deeply. Sign language brings stories to life in a way spoken or written words often cannot,” he said.

Parmeet opined that storytelling is a powerful tool because it touches the heart, and the community understands that they, too, count.

Reaching out

Many deaf people do not understand English properly, and Indian sign language is not widely used. Deaf Bookwave chooses books that highlight personal themes such as identity, healing, love, heartbreak, family, and self-growth.

“One powerful story was Warmth by Rithvik Singh. Many related themselves with the story as it matched the deaf experience of emotional depth, silence, and unspoken feelings. That moment made many participants cry,” Parmeet added.

Being a DODA (Deaf of Deaf Adults), Parmeet understands the community well. “This is not just about accessibility, but also a means to understand themselves better. At the end of the meetup, many participants said, ‘Wow, this touched me, my eyes are open now. ‘ Several people said that it helped to reflect themselves,” he stated.

Deaf Bookwave has an online presence. The platform on Instagram has gained a boost of over 3,700 followers in three months. The members make videos on Instagram in Indian sign language and post them with English captions, which helps those who can hear to understand the deaf closely and bridges the gap between both parties.

Thiruvananthapuram meet

Days before the club’s recent meetup in Thiruvananthapuram, Deaf Bookwave uploaded an Instagram video announcement and messaged a few friends from NISH (National Institute of Speech and Hearing), which brought together 18 people.

“At our Thiruvananthapuram meetup, a girl, Nihla, said she had never shared opinions in public before. But after the discussion, she said, ‘This changed me. I feel like I matter.’ That one sentence reminded me why Deaf Bookwave must exist,” Parmeet added.

With many people requesting meetups in their respective cities, he plans to expand the club to Delhi, Chennai, and Hyderabad. “I want Deaf Bookwave to be a pan-India deaf literary movement. One day, we may even have deaf authors, publishers, and storytelling festivals. I hope to
feature more deaf authors telling their own stories. It’s more than books—it’s about building identity, self-love, and representation,” Parmeet further said.

“I want spaces where everyone is safe, and each voice is heard. I dream of adding poetry, story dramatisations, and children’s storytelling too,” Parmeet said, adding that he is looking forward to a deaf creative movement.

The club’s next meeting is on 22 June in Delhi, its first in North India.



Broadway Theater awarded accessibility grant to support hearing-impaired patrons


A grant will allow the Broadway Theater to significantly improve accessibility for individuals with hearing impairments by installing a new Assistive Listening System—the Assistive Listening DSP Package (72 MHz) from Listen Technologies.

18.06.2025
ROCK SPRINGS -- The Broadway Theater in Downtown Rock Springs has announced it has been awarded a 2025 Accessibility Mini Grant from Creative West, made possible through generous support from the National Endowment for the Arts (NEA).

This grant will allow the Broadway Theater to significantly improve accessibility for individuals with hearing impairments by installing a new Assistive Listening System—the Assistive Listening DSP Package (72 MHz) from Listen Technologies.


Tuesday, June 17, 2025

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025 - 2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா!





வேலூர், ஜூன்.16-

தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் 2025-2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வா கிகள் பதவி ஏற்பு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு விழா வேலூர் பில்டர்பெட் ரோட்டில் உள்ள ஆசிரியர் இல்ல கலையரங்கில் நடைபெற்றது விழாவிற்கு வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார் பொதுச் செயலாளர் சுரேஷ் குமார் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.சரவணன் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் துணை சேர்மன் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மாநிலத் தலைவராக ஸி.பழனிசாமி துணைத் தலைவராக சிக்கந்தர் மற்றும் பொதுச் செயலாளராக நி ஜெய்சங்கர் பொருளாளராக டென்சிங் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒருவர் செயற்குழு உறுப்பினராகவும் பதவி ஏற்றுக் கொண்டனர் இக்கூட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 4% இட ஒதுக்கீடு இன் படி வேலை வழங்குவது உள்ளிட்ட 5 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நிகழ்ச்சியின் நிறைவாக . வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்க செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றியுரையாற்றினார்.



'ஹியரிங் எய்ட்' கேட்டு காத்திருப்போர் அதிகரிப்பு; இரண்டு ஆண்டாக தராததால் ஏராளமானோர் அவதி



17.06.2025
தமிழகத்தில் காது கேளாத குறைபாட்டுடன் இருப்போர், 'ஹியரிங் எய்ட்' கருவிக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் அனைவருக்கும் ஒரே விதமான கருவி கொடுப்பதால், பயன்படுத்துவோருக்கு பெரியளவில் பயன் தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பிறவிக் கோளாறு, அதிக இரைச்சல், முதுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நம்நாட்டில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் காது கேளாமை குறைபாட்டுடன் இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமின்றி, காது கேளாதோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்தும் வருகிறது. காதுகேளாமையால் பாதிக்கப்படுவோருக்கு, தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் சார்பில், இலவச ஹியரிங் எய்ட் வாங்கப்பட்டு, காது, மூக்கு, தொண்டை பிரிவு உள்ள அரசு மருத்துவமனைகள் வாயிலாக தரப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அரசு மருத்துவமனைகளுக்கு, இக்கருவியை மருத்துவ சேவை கழகம் கொள்முதல் செய்து தரவில்லை. அதனால், ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும், குறைந்தது 200 பேர், 'ஹியரிங் எய்ட்' கேட்டு பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

அதிகபட்சமாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 600 பேர் பதிவு செய்து, இரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

இது குறித்து, ராஜிவ் காந்தி மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திற்கும், கருவியை வழங்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால், இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளுக்கு, 'ஹியரிங் எய்ட்' வழங்கப்படவில்லை.

அதனால், இக்கருவி கேட்டு பதிவு செய்து காத்திருப்போருக்கு கொடுக்க முடியவில்லை. அவர்கள் கருவி எப்போது கிடைக்கும் என, மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று கேட்டு வருகின்றனர்.

நாங்கள் இரண்டு ஆண்டுகள் போராடிய பிறகு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு, 50 ஹியரிங் எய்ட் வழங்கப்பட்டது. இவற்றை யாருக்கு பொருத்துவது என்ற குழப்பமும் உள்ளது.

ஒரே விதமான கருவி

ஒரு கருவியின் விலை 4,500 ரூபாய். அத்துடன் அனைவருக்கும் ஒரே விதமான கருவியே வழங்கப்படுகிறது. உதாரணமாக, 60 டெசிபல் செவித்திறன் பாதிப்பு உடையோர், 80 டெசிபல் செவித்திறன் பாதிப்பு உடையோர் என அனைவருக்கும் ஒரே விதமான கருவி தான் வழங்கப்படுகிறது.

இவற்றால், பலருக்கு பயனில்லை. எனவே, நோயாளிகளின் பாதிப்புக்கு ஏற்ப, ஹியரிங் எய்ட் வழங்கினால், ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Friday, June 13, 2025

273 சேவை மையங்கள் திறக்கப்படும் மாற்றுத்திறனாளிகள் துறை செயலர் தகவல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் தகவல்


13.06.2025
சென்னை:''நடப்பாண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்காக 273 சேவை மையங்கள் திறக்கப்படும்,'' என, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக, 'டெக் பார் ஆல் - 2025' என்ற பெயரில், தொழில்நுட்ப உதவி உபகரண கண்காட்சி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் இரண்டு நாட்கள் நடக்கிறது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது.

கண்காட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன உபகரணங்களை தயாரிக்கும் 48 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி, இயக்குநர் லட்சுமி ஆகியோர் கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

கண்காட்சியில், நொய்டாவை சேர்ந்த, 'ஷாப் பார் ஸ்பெஷல்ஸ்' என்ற நிறுவனம், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக, செயற்கை நுண்ணறிவு வாயிலாக இயங்கக்கூடிய, 'ஹார்க் ஏ.ஐ., இன்ஸ்டன்ட் ரீடர்' என்ற கருவியை பார்வைக்கு வைத்துள்ளது.

இக்கருவி, பி.டி.எப்., நாளிதழ், லெட்டர் போன்றவற்றை ஸ்கேன் செய்து, அதில் உள்ள வாசகங்களை தெரிவிக்கிறது.

இக்கருவி, 250க்கும் மேற்பட்ட மொழிகளை படிக்கவும், மொழிபெயர்க்கவும் செய்யும். கண்காட்சியில், 5,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான நவீன உபகரணங்கள் உள்ளன.

கண்காட்சியை துவக்கி வைத்த பின், மதுமதி அளித்த பேட்டி:

தமிழகத்தில் முதல்முறையாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்ப உதவி உபகரண கண்காட்சி நடக்கிறது. தற்போது, மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது; அவர்களுக்கு, 'டி.என்., ரைட்ஸ்' திட்டம் வாயிலாக, மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இதன் வாயிலாக, பல மாற்றுத்திறனாளிகள் தாங்களாகவே எழுந்து நடக்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஏற்கனவே, சென்னையில் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு சென்று மறுவாழ்வு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு வழங்கப்படும், சிறப்பு கல்வி, பார்வை மதிப்பீடு, கேட்டல் மற்றும் பேச்சு சிகிச்சை, பிசியோதெரபி, தொழில் சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனை உள்ளிட்ட ஆறு சிறப்பு மறுவாழ்வு சேவைகளை ஒருங்கிணைத்து வழங்க, அனைத்து மாவட்டங்களிலும், 'ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற பெயரில் சேவை மையம் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tech4all 2025: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் புதிய நவீன உபகரணக் கண்காட்சி ஜூன் 12, 13 சென்னையில்!



இக்கண்காட்சிக்கு மறுவாழ்வு மருத்துவர்கள், மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கட்டணமில்லா அனுமதியுடன் நேரடியாக சென்று கண்காட்சியில் இடம்பெறும் புதிய தொழில்நுட்பங்களை மதிப்பாய்வு செய்து நேரடியாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

உபகரணங்கள் பற்றிய கண்காட்சி ஜூன் 12, 13 அதாவது, இன்றும் நாளையும் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான அனுமதி இலவசம். கட்டணமில்லை. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசுச் செயலாளர் எஸ்.மதுமதி, கண்காட்சியைத் திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கப்பட்டு வரும் பாரம்பரிய உதவி உபகரணங்களைத் தவிர, தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் கூடிய புதிய நவீன உதவி உபகரணங்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சியாகும் இது.


இந்தக் கண்காட்சி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12.06.2025 (வியாழக்கிழமை) மற்றும் 13.06.2025 (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும். இக்கண்காட்சிக்கு மறுவாழ்வு மருத்துவர்கள், மறுவாழ்வு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் கட்டணமில்லா அனுமதியுடன் நேரடியாக சென்று கண்காட்சியில் இடம்பெறும் புதிய தொழில்நுட்பங்களை மதிப்பாய்வு செய்து நேரடியாக தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் வாழ்வாதாரம் அன்றாடம் சகஜமாக நடைபெற, அவர்கள் அன்றாட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை உட்பட இயல்பாக நடைபெற உதவும் புதிய நவீன உபகரணங்கள் அவர்களுக்காக இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. எனவே, மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தக் கண்காட்சி உதவிகரமாக இருக்கும். கண்காட்சியில் பங்கேற்றுப் பார்வையிட http://www.medicall.in/medical-exibition-registration-online.php என்ற இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Kanhan's Suman becomes first deaf girl of Nagpur district to achieve D License in football coaching


12.06.2025
Nagpur: "Being deaf is not a limitation-it's my strength," says 22-year-old Suman Jaiswal from Kanhan, a small town near Nagpur. Suman's determination led her to become one of the first deaf individuals to complete the All India Football Federation (AIFF) D Licence coaching course, establishing a significant milestone in Indian football.

She is now the first deaf girl from Nagpur district to achieve the D License in coaching.

Suman said, "I live in a rural area with my parents and two brothers. My family once believed my future should be limited to marriage. But everything changed the day I first kicked a football during a Slum Soccer event. It gave me a sense of freedom. Since then, I have travelled over 20 km every day to train."

To become AIFF's D License holder coach, Suman joined other deaf coaches at the Mumbai campus of Reliance Corporate Park between June 2 and 7.

The course was organized jointly by the AIFF, Slum Soccer and Reliance Foundation.

Shailesh Karkera, the coach educator said, "This was a unique and enriching experience. Verbal communication is key in coaching, but these coaches overcame every barrier with exceptional dedication and work ethic."

Karkera added, "With tools from this course, they can follow the AIFF coaching pathway-from grassroots to professional football."

For Suman, this achievement is just the beginning. She said, "The course gave me confidence to lead, teach, and grow. Now I want to use these skills to train deaf players-especially girls who are told what they can't do. I want to lead by example and prove that football is for everyone."


Deaf sports championships starts tomorow


12.06.2025
Kanpur: Around 400 deaf and dumb players from 24 states will participate in the national deaf senior, junior and sub junior championship slated to be held here at VSSD college from June 13.

According to officials of the deaf sports association of UP, Karate and wrestling national championships will be held from June 13 to 16. Judo and Taekwondo championship will be held from June 20 to 23.

The gold winners of this championship will represent the country in deaf olympics slated to be held in Japan from Nov 15 to 26.


Monday, June 9, 2025

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான கைப்பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 ஆணிகள் பங்கேற்று விளையாடினர்..




09.06.2025
தமிழகத்தில் பொதுவாக அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் கைப்பந்து போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் 2025 எனும் போட்டி பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்றது.

தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் மற்றும் கோவை மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் ஜூனியர், சீனியர் என தனித்தனி அணிகளாக நடைபெற்றது.இந்த போட்டியில் சென்னை கோவை, திருப்பூர்.மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 12 அணிகள் பங்கேற்றனர்.

நாக் அவுட் முறையில் நடைபெற்ற கைப்பந்து இறுதி போட்டியில் சென்னை அணி முதல் இடத்தையும், கோவை அணி இரண்டாம் இடத்தையும், திருப்பூர் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தினர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இந்த மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வரும் ஜூலை 9ஆம் தேதி ஆந்திர பிரதேஷ் மாநிலத்தில் நடைபெற உள்ள காது மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான கைப்பந்து போட்டியில் பங்கேற்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


AIFF hosts first-ever D Certificate coaching course for deaf coaches



09.06.2025
The course was led by AIFF lead coach educator, Shailesh Karkera, and supported by two Indian Sign Language interpreters from Slum Soccer.

Hyderabad: The All India Football Federation (AIFF) successfully concluded the first-ever D Certificate Coaching Course for deaf candidates at the Reliance Foundation Young Champs facilities in Navi Mumbai on Sunday, June 7, 2025.

The six-day programme was conducted under the aegis of the Western India Football Association (WIFA). Around 23 active football coaches, who are affiliated with the Indian NGO Slum Soccer, participated in the programme.

The course was led by AIFF lead coach educator, Shailesh Karkera, and supported by two Indian Sign Language interpreters from Slum Soccer, ensuring that all participants had full accessibility, in the presence of AIFF’s head of coach education, Vivek Nagul.

The AIFF D Certificate was first introduced in 2012. The course is offered as an entry-level coaching qualification which is a part of the AIFF’s Coach Education Programme. Currently, it has nearly 16,000 registered coaches.

Designed for aspiring coaches, the course blends theory and practical sessions, focusing on children’s football, technical development and child safeguarding, along with the various aspects of the coaching process.


காதுகேளாதோர் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்



09.06.2025
விருதுநகர்:விருதுநகர் அருகே சூலக்கரையில் உள்ள அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. பலவீனமாக சுவர்கள் விழும் நிலையில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.

சூலக்கரையில் அரசு காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் சுற்றுச்சுவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமாகி மழைக்காலத்தில் சிறுபகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து பலவீனமாக இருந்த அடுத்தடுத்த சுற்றுச்சுவர்களும் சில நாட்களில் இடிந்தது.

தற்போது மற்ற சுவர்களும் பலவீனமாகவே உள்ளது. இதுவரை இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்கள் பகுதிகளில் புதிதாக சுவர் கட்டப்படவில்லை. இதனால் பள்ளி வளாகத்தில் விஷப்பூச்சிகள், பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஒரு மாதம் கோடை விடுமுறை விட்டு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் சுற்றுச்சுவர்கள் சீரமைக்கப்படவில்லை.

இதனால் மாணவர்கள் அச்சத்துடன் வளாகத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வலுவிழந்த சுவர்கள் மாணவர்கள் மீது விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பல முறை உயர்அதிகாரிகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


Saturday, June 7, 2025

Silent strength: Parents with hearing disabilities celebrate son's IIT dream with AIR 1785


07.06.2025
Kiran and Jyothi Kumar, both with hearing disabilities, provided unwavering support to their son Vivek, who secured AIR 1785 in JEE Advanced 2025, proving that perseverance and dedication lead to success.

Despite lifelong challenges due to hearing disabilities, Kiran R Kumar, a Chief Office Superintendent in South Western Railway, Bengaluru, and his wife, Jyothi K Kumar, a freelance artist who is deaf by birth, have raised their son with unwavering determination. Their dedication has paid off as Vivek K Kumar secured an impressive 1785 All India Rank in JEE Advanced 2025, earning eligibility for admission into a prestigious Indian Institute of Technology (IIT).

Reflecting on his achievement, Vivek shares, “I feel incredibly happy about my accomplishment. When I began my preparation, I lacked confidence partly because my family was often looked down upon, as both my parents are deaf. Achieving a decent rank despite these circumstances means a great deal to me."

"Growing up, I never felt any difficulty living or communicating with my parents and they raised me with love and care. However, I learned to speak much later than others and initially struggled to communicate with friends. Over time I slowly learned how to connect with people and also began helping my parents interact with society more comfortably. I’m deeply grateful to my parents for the extra effort and support they put into raising me," added Vivek

Raising a son in a silent world


Communication was never easy for Kiran and Jyothi, but when Vivek was born, they made sure their disability never hindered his growth. From as early as six months old, Vivek started learning baby sign language, which became his primary mode of communication at home. As he grew older, he mastered sign language fluently, allowing him to connect deeply with his parents.

His mother, Jyothi, shares a strong emotional bond with him, and his father, Kiran, constantly engages in discussions to keep him motivated, especially throughout his two-year journey of JEE preparation.



A mindset of innovation and discipline

Vivek’s brilliance shone early when, as a 9th grader, he won the Young Scientist Award from the Government of Karnataka for developing a prototype device that converts sign language into text and speech.

Determined to succeed, he disciplined himself to study late into the night, balancing his academics with self-learning through YouTube and online study materials. His mother ensured he was always taken care of, providing comfort, food, and encouragement whenever needed. His father played a crucial role in discussing exam strategies, pushing him toward excellence.

Overcoming financial and social challenges

Although Kiran earns ₹10 lakh annually working as a Chief Office Superintendent, financial stability was never guaranteed. Jyothi, being a freelance artist, earned occasionally, making their journey even more challenging.

Yet, despite the financial and societal hurdles, they never let their limitations hold their son back. They raised him with the conviction that deaf parents can provide just as much love, support, and guidance as other parents.

Aspirations and dreams

Vivek dreams of becoming an engineer and securing a respectable job in a reputed company. His passion for science and discovery has been the driving force behind his relentless pursuit of knowledge. In his free time, he enjoys solving speed cubes and has competed in several speed cubing competitions, showcasing his problem-solving skills and quick thinking.

Vivek believes that challenges and setbacks are an inevitable part of life, but those who embrace them with resilience and optimism can overcome anything and achieve success.

A powerful message to the world


As Vivek embarks on his new journey, his parents are overwhelmed with pride.

"Many people believe that deaf individuals cannot raise academically successful children. But our story proves otherwise. Deaf parents can support and nurture bright, ambitious children just like anyone else. We hope our journey inspires others and challenges misconceptions about the deaf community."

Their story is one of unwavering determination, deep love, and resilience, proving that disabilities do not define capability. Instead, strength, perseverance, and belief in one’s dreams make success possible.


Friday, June 6, 2025

Childhood hearing loss may be prevented through vaccination


05.06.2025
Vaccination can help in preventing hearing loss in children and adolescents, as shown by a new study. The study found 26 infectious agents that can cause hearing problems.

These include common viruses and bacteria that spread during childhood and teenage years. Many of these infections can be avoided with vaccines.

Hearing loss affects over 1.5 billion people across the world. It is often seen as a problem related to ageing, but infections in early life are also an important cause.

These infections can damage the ear or the nerves linked to hearing. The World Health Organization says nearly 60 percent of hearing loss in children could be avoided through public health steps like vaccination.

Researchers from Université de Montréal in Canada and other institutions looked at many scientific studies. They found that infections such as measles, rubella and mumps can lead to hearing loss.

Rubella is especially harmful if a pregnant woman gets it, as it can cause hearing loss in the baby before birth. Mumps can damage the inner ear or the nerve connected to it, leading to permanent hearing problems.

Some bacteria that cause meningitis were also included in the list. These are Haemophilus influenzae, Streptococcus pneumoniae and Neisseria meningitidis. Meningitis can cause long-term damage to hearing and other health problems.

The study was published in the journal Communications Medicine. The researchers say that the effect of vaccines on preventing hearing loss should be studied more closely. This should be done not only for new vaccines but also for those already in use.


A Ray of Hope: Hearing-Impaired Boy Receives Rs 8 Lakh Aid Through Compassionate Efforts of Dr. Sampath Kumar and ENT Specialist Dr. Pranaya Deepika


05.06.2025
Gadwal: In a touching instance of humanity and compassion, a young boy suffering from congenital hearing loss has received a lifeline thanks to the combined efforts of former MLA and AICC Secretary Dr. S.A. Sampath Kumar and his daughter, ENT specialist Dr. Pranaya Deepika.

The Case That Touched Hearts

Badrinath, the son of potter Kummari Ramudu from Dharmavaram village, Erravalli Mandal, Alampur constituency, was born with a severe hearing impairment. As a result, he has been unable to develop speech, making day-to-day communication a challenge for the young boy and his family.

When Badrinath’s condition was brought to the attention of Dr. S.A. Sampath Kumar, former Alampur MLA and AICC Secretary, he responded promptly and empathetically. Recognizing the seriousness of the issue, Dr. Sampath Kumar consulted his daughter, Dr. Pranaya Deepika, a qualified ENT specialist. A Doctor’s Compassion and a Father's Support Deeply moved by the child's condition, Dr. Pranaya Deepika recommended advanced medical treatment, including the installation of hearing aids, at the renowned ENT Hospital in Koti, Hyderabad. Understanding the financial burden such treatment could impose on the impoverished family, Dr. Sampath Kumar took proactive steps to ensure the child received timely assistance.

Using his influence and commitment to public welfare, he worked with government authorities to sanction a Letter of Credit (LOC) worth ₹8,00,000 to cover the medical expenses, particularly for the installation of specialized hearing devices. Presentation of the Sanction Letter In a small but meaningful event, the official LOC copy was formally handed over to Badrinath's family. The presentation was made by Dr. S.A. Sampath Kumar, Dr. Pranaya Deepika, Youth Congress State Vice-President Deepak Prajna (Dr. Sampath Kumar’s grandson), and senior Congress leader Madhu Naidu.

This gesture not only brought hope to Badrinath and his family but also stood as a testament to the enduring values of empathy and social responsibility. Public Reaction Locals and social activists have widely appreciated this humanitarian effort, lauding Dr. Pranaya Deepika for her medical initiative and Dr. Sampath Kumar for his unwavering commitment to the welfare of underprivileged communities.



Thursday, June 5, 2025

சேலம், செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை


05.06.2025
சேலம், செவித்திறன் குறையுடையோர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:

மாற்றுத்திறனாளி நலத்துறை கட்டுப்பாட்டில், அரசு செவித்திறன் குறையுடையோர் உயர்நிலை பள்ளி, ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் தங்கும் விடுதியுடன் செயல்படுகிறது. அங்கு, 1 முதல், 10ம் வகுப்பு வரை, நடப்பாண்டு சேர்க்கை நடக்கிறது. இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். கணினி திறனை மேம்படுத்த சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படும்.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியே விடுதி, உணவு, சீருடை, கல்வி உபகரணங்கள், செவித்துணைக்கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 2024 - 25ம் கல்வியாண்டில் இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

காது கேளாதோர், வாய் பேச இயலாதோர், செவித்திறன் குறைவுடைய குழந்தைகளின் பெற்றோர், குழந்தைகள் கல்வி நலனை மேம்படுத்த இந்த பள்ளியில் சேர்க்கலாம். குறிப்பிட்டு, 0427 - 2442067, 94999-33469 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


Wednesday, June 4, 2025

மாநில அரசு விருது பெற மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு



31.05.2025
சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு முதல்வர் மாநில விருது வழங்கி ஊக்குவித்து கவுரவிப்பார். கீழ்காணும் விருதுகள் வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தின விழா அன்று வழங்கப்பட உள்ளன.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டர், சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், சிறந்த சமூகப்பணியாளர், கடன் வழங்கிய சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றுக்கு விருதளிக்கப்படும். இந்த விருது பெற விண்ணப்பிக்கும் விருதாளர்கள், “https://awards.tn.gov.in” என்ற வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் 30.6.2025க்குள் விண்ணப்பிக்கலாம்.

வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 30.6.2025 அன்று பிற்பகல் 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விருதுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு குழுவினரால் தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, சுதந்திர தின விழா நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


“காது கேட்காத வாய் பேச தெரியாத 22 வயது பெண்ணை வீடு புகுந்து”… தோளில் சுமந்து கடத்தி சென்ற நபர்.. சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்… குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்…!!!


04.06.2025
டெல்லியின் கலிந்தி குஞ்ச் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 22 வயது மாற்றுத்திறனாளியான பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​ராஜ்பால் என்ற நபரால் கடத்தப்பட்டார்.

அந்த பெண்ணிடம் பேசவும், கேட்கவும் முடியாத நிலை இருந்ததாக போலீசார் பதிவு செய்தனர். அந்த பெண் கடத்தப்பட்ட அதே நாளில், அதே தெருவில் ஒரு காலியான சேரியில் அந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்குப் பின், போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ராஜ்பால் என்பவர் அந்த பெண்ணின் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில், தனது தோளில் தூக்கிச் செல்வது போல் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து, போலீசார் விசாரணை குழு அமைத்து, குற்றவாளியை வலைவீசி தேடினர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கலிந்தி குஞ்ச் பகுதியில் நடந்த என்கவுண்டரில், ராஜ்பால் தப்பிக்க முயன்ற போலீசாரை நோக்கி இரு சுற்றுப் பயணம் துப்பாக்கியால் சுட்டார். இதனால் தற்காப்புக்காக அவரை போலீசார் சுட்டதில் அவரது வலது கால் காயம் அடைந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. முதற்கட்ட தகவல்கள், கழுத்தை நெரித்ததால் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

போலீசார் கொலை மற்றும் கடத்தல் வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராஜ்பாலிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் குற்றம் நடந்தபோது அவர் அணிந்திருந்த உடைகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன செய்யப்பட்டன செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆகஸ்ட் இறுதி வரை மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுப்புப் பணி




03.06.2025
மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் இறுதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகள் கணக்கெடுப்புப் பணி, சமூக மறுவாழ்வு பணியாளா்கள் மற்றும் சமூக வழி நடத்துநா் மூலம் ஜூன் முதல் ஆகஸ்ட் இறுதி வரை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, மாற்றுத் திறனாளிகளின் சமூகத் தரவுகளை கணக்கெடுக்க வருபவா்களுக்கு மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ளோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை இல்லாதவா்கள் என அனைவரும் தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 0422-2380381 94999 33471, 86674 80186 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tuesday, June 3, 2025

ஹேப்பி நியூஸ்! மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்தை அதிகரிக்க அரசு முடிவு




31.05.2025
1. மூத்த குடிமக்கள்


மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தில் ரூ.500 உயர்த்த பாஜ அரசு முடிவு செய்துள்ளது. அதுகுறித்த விவரங்களை முழுமையாக பார்ப்போம்.

2. மூத்த குடிமக்களுக்கும் மாதம் ஓய்வூதியம்

டெல்லியில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளி அரசு சார்பில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அரசு தரவுகளின்படி, கிட்டத்தட்ட 4.6 லட்சம் மூத்த குடிமக்கள் இந்த மாதந்திர ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர். அதேபோல சுமார் 1.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்

3. ஓய்வூதியத் தொகையை உயர்த்துவோம் -பாஜ வாக்குறுதி

டெல்லியில் பிப்ரவரியில் நடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது, ​​'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியத்தை உயர்த்துவோம்' என பாஜ வாக்குறுதி அளித்தது. அதன்படி தற்போது, ​​மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்தில் ரூ.500 உயர்த்தப்பட்ட பாஜ அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது. உள்ளது.

4. ஓய்வூதியத் தொகை எப்பொழுது உயரும்?

இது குறித்து அதிகாரிகள் கூறியுள்ளனர், "டெல்லி அரசின் சமூக நலத்துறை ஏற்கனவே அதற்கான திட்டத்தை தயாரித்து நிதித்துறைக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது வைத்துள்ளது. ஒப்புதல் கிடைத்தது, இந்த திட்டம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்கப்படும். முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்த ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படும்."

5. ஓய்வூதிய பயனாளிகள் குறித்து ஆய்வுக்கு

முன்பாக, தகுதியற்றவர்கள் சலுகைகளைப் பெறுவதைத் தடுக்க, வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு மூலம் அனைத்து பயனாளிகளையும் சரிபார்க்கும் பணி விரைவில் தொடங்கும்.

6. பெண்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா?

குடும்ப தகராறு, நிதி மற்றும் சொத்து தகராறு உள்ளிட்ட பிரச்னைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலனை வருகிறது அதிகாரிகள்.

7. யார், யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கிறது?

தற்போது 60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களுக்கு மாதம் ரூ.2,000-ம், 70 வயதுக்கு மேல் முதியவர்களுக்கு மாதம் ரூ.2,500-ம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதே போல மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

8. ஓய்வூதியம் உயர்த்தப்பட்டால் யார், யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

டெல்லி அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, 60-69 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2,500 ஆகவும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காகவும் ஓய்வூதியம் ரூ.3,000 ஆகவும் அதிகரிக்கப்படும். அதே போல மாற்றுத்திறனாளிக்கான ஓய்வூதியம் ரூ.3,000 ஆக உயரும்.

9. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் என்ன?

முதியோர் ஓய்வூதியம் பெற, ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாக டெல்லியில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

10. குடும்ப வருமானம்

ஓய்வூதியம் பெற குடும்ப வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும்? பயனாளியின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

11. மாற்றுத்திறனாளி ஓய்வூதியம்

மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் என்ன? 40% மற்றும் அதற்கு மேற்பட்ட ஊனமுற்றோர், குறைந்தது 5 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருபவர்கள், ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ளவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள். இந்த பிரிவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வயது வரம்பு இல்லை.




திமுகவில் மாற்றுத்திறனாளிகள், கல்வியாளர்கள் அணி உருவாக்கம்!


03.06.2025
திமுக பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மதுரை உத்தங்குடியில் இன்று (ஜூன் 1) நடைபெற்று வருகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் 3,400 பேர் உள்ளிட்ட 6,000 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தேமுதிக தலைவர் விஜயகாந்த், என்.சங்கரையா உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது

இந்த பொதுக்குழுவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே உள்ள அணிகளுடன் புதிதாக மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர்கள் அணி உருவாக்க இருப்பதாக மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் நேற்று (மே 31) செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தநிலையில், இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுகவில் அமைப்பு ரீதியாக ஏற்கனவே 23 அணிகள் உள்ள நிலையில், புதிதாக மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர்கள் அணி என இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது.


மாற்றுத் திறனாளி, நலிவடைந்த பிரிவினர் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு


03.06.2025
மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றும் வண்ணம் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அதிரடி தீர்ப்புகள் குறித்து ஓர் ஆய்வு.

1995-ஆம் ஆண்டு நம் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் நலத்தைப் பேணிப் பாதுகாக்கும் வண்ணம் மத்திய அளவில் நாடாளுமன்றத்தால் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. 1990-களின் முற்பகுதியில் பி.வி. நரசிம்மராவ் பிரதமராக பணியாற்றினார். அது உலகமயமாக்கலின் பொற்காலம். மனித உரிமைகளுக்கும் அது பொற்காலம் என்றே கருதப்பட வேண்டும்.

காரணம், இன்றைக்கு மனித உரிமைகள் என்று நாம் சொல்லக் கூடிய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை (என்எச்ஆர்சி) நிறுவுவதற்கான மனித உரிமைகள் சட்டம், 1993-லும், அதேபோல், மகளிர் ஆணையச் சட்டம் (1990), சிறுபான்மையினர் உரிமையை பாதுகாக்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம்(1992), துப்புரவு தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கையால் துப்புரவு செய்பவர்களை பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் (தடை) சட்டம் (1993) இயற்றப்பட்டன.

அந்த வகையில்தான் கடைசியாக 1995-ல் மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் இயற்றப்பட்டு பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது மிகவும் வருத்தத்துக்குரிய ஒரு விஷயமாகும். உபாதயா என்கிற ஒரு மாற்றுத்திறனாளி தொடுத்த வழக்கில் மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, ஒரு உத்தரவை 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கியது. இது மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

மேற்சொன்ன இந்த சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும் மத்திய, மாநில அரசுகள் அதனை செயல்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், குறிப்பாக இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தாமல் இருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

மேலும், ‘‘பின்தேதியிட்டு, கணக்கிட்டு அந்த இட ஒதுக்கீட்டினை அனைத்து மத்திய, மாநில அரசுகள், அரசு சார் அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் என்று பல நிறுவனங்கள் இதனை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும், செயல்படுத்த தவறும்போது அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும், செயல்படுத்துவதற்கு தடையாக இருக்கின்ற துறை தலைவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.

அதன் பிறகே பல ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள், வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டனர் என்பது இங்கே பாராட்டுதலுக்கு உரிய அம்சமாகும். அதனை தொடர்ந்து தேசிய பார்வையற்றோர் சமேளனம் தொடுத்த ஒரு வழக்கில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட ஒரு அரசியலமைப்பு தீர்ப்பாயம்/ அமர்வானது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது.

அது மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு என்பது அடிப்படை நியமனத்துக்கு மட்டும் பொருந்தாது, அது பதவி உயர்வுக்கும் பொருந்தும் என தீர்ப்பினை அளித்தது. அந்த வரிசையில் விக்காஷ் குமார், ராசுவ் ராத்திரி மாற்றுத்திறனாளிகள் நலக் குழு போன்ற வழக்குகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த வரிசையில் சமீபத்தில் 2 அதிமுக்கிய தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பினை வழங்கியது ஒரே அமர்வாகும். நமது தமிழ்நாட்டை சார்ந்த நீதிபதி மகாதேவன், ஜே.டி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வுதான் இந்த தீர்ப்பினை வழங்கியது.

ஒன்று இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்றால் இவர்கள் மூன்று துறைகளிலும் பங்கு பெற வேண்டும், அதாவது, சட்டம் இயற்றுதல். செயல்படுத்துதல், நீதித் துறை ஆகிய‌ அரசின் மூன்று முக்கியமான உறுப்புகளில் பங்கு பெற வேண்டும். அதில் நீதித்துறை நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கும் தடையினை அறவே தகர்த்தெறிந்தது இந்த அமர்வினுடைய தீர்ப்பாகும். அதாவது மத்திய பிரதேசத்தினுடைய நீதிமன்ற நியமன விதிகளில் 6எ என்ற விதி, அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பாக இருக்கிறது என்றும், அதனை செல்லாது என்றும் அறிவித்து, அதனை நீக்கவும் செய்தது.

அது மாத்திரமல்ல, அனைத்து மாநில அரசுகளும் தங்களுடைய நீதித்துறை நியமன விதிகளில் தக்க மாற்றத்தினை ஏற்படுத்த விரைவில் அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகளுக்கும், நீதித்துறையில் பணியாற்றுகின்ற வாய்ப்பினை வழங்க வேண்டும். குறிப்பாக பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று அந்த அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அந்த வரிசையில் சமீபத்திய ஒரு தீர்ப்பு அதாவது ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வழங்கப்பட்டது. இதே அமர்வுதான் அந்த தீர்ப்பையும் வழங்கியது. இந்த தீர்ப்பு என்ன சொல்கிறது என்றால், அமில வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், முழுமையாக பார்வை இழந்தவர்கள், அது மாத்திரமல்ல, நலிவடைந்த பிரிவினர், கிராமத்தில் வசிப்பவர்கள், மூத்த குடிமக்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்று இந்த தீர்ப்பினால் பயன் பெறும் பயனாளிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இன்றைய நாட்களில் எதற்கெடுத்தாலும் கே.ஒய்.சி (KYC) என்பது மிக சாதாரணமாகிவிட்டது. கே.ஒய்.சி என்றால் என்ன? உங்கள் வாடிக்கையாளரை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும், Know Your Customer என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். ஒரு புதிய சிம் கார்டு வாங்க வேண்டும் என்றாலும், இந்த செயலினை எல்லோரும் செய்யும்படியாக கட்டாயப்படுத்தப் படுகின்றனர். இதில் இவர்களுக்கு எந்த விதிவிலக்கும் அளிக்கப்படுவது இல்லை. குறிப்பாக அமில வீச்சு தாக்குதலுக்கு உட்பட்டவர்களுக்கும், முழுமையாக பார்வை இழந்தவர்களுக்கும், இந்த KYC-யில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்களும், சிரமங்களும் இருந்து வருகின்றன.

அவற்றை களையும் வண்ணமாக இந்த தீர்ப்பானது அமைகின்றது. அதாவது, Life Photograph என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். அதாவது, உயிருடன் இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு புகைப்படத்தை, எடுக்க வேண்டும். அதாவது, விழி அசைவுகள், முகத்தினை ஒரு குறிப்பிட்ட பாவனையில் வைத்திருத்தல், திரையில் கையெழுத்து இடுதல், திரையில் தோன்றும் குறுஞ்செய்திக்கு 30 வினாடிகளுக்குள் பதில் அளித்தல் போன்றவை ஆகும்.

இவற்றை எல்லாம் பார்வையற்றவர்களாலும் அல்லது அமில வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களாலும் செயல்படுத்துவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதை உணர்ந்த உச்ச நீதிமன்றம், இதற்கு தக்க மாற்றங்களைச் செய்து அவர்களுக்குத் தேவையான வகையில் இந்த விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்று, ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது மாற்றுத்திறனாளிகளுக்குகான நலச்சட்டம் என்பது ஒரு சாதாரண சட்டமல்ல.

அது அரசியலமைப்புக்கு ஒப்பான ஒரு சட்டமாகும் என்கிற அதிமுக்கிய தீர்ப்பினை நீதிபதி வழங்கியிருக்கிறார். ஆகையினால், மாற்றுத் திறனாளிகளின் உரிமைக்கு சொல்லப்பட்டுள்ள எல்லாமே இனி அடிப்படை உரிமைக்கு சமமாக கருதப்படும் என்கிற ஒரு முக்கியமான அம்சத்தையும் நீதிபதி இந்த தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இப்பொழுது நாம் வாழும் காலமும், வரும் காலமும் செயற்கை அறிவு தொழில்நுட்பம் என்று கருதப்படும் AI-ஆல் நிர்மாணிக்கப்பட்ட இருக்கிறது. இதில் எல்லாமே தானியங்கி அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும். ஆகையால் பல தவறுகள் நிகழக்கூடும் என்பதை அறிந்த இந்த நீதிமன்ற அமர்வானது மிக முக்கியமான ஒரு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

அதாவது Human Reviewers, மனிதனை கொண்டு சீர் ஆய்வு செய்கின்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு நபரினுடைய வழக்கினை அடிப்படையாகக் கொண்டு அவர் அவருக்கு என்று பிரத்தியேகமாக இந்த சீராய்வு அமைய வேண்டும். தானியங்கி அடிப்படையில் செயல்பட கூடிய தவறுகளை களையும் வண்ணம் அந்த மனித அலுவலர் செயல்பட வேண்டும். பிரத்தியேகமாக ஒரு சேவை அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்‌. ஒரு சேவை அமைப்பு (Help Line) உருவாக்கப்பட வேண்டும். அது மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த வண்ணம் பணியாற்றுகின்ற வகையிலே இருக்க வேண்டும். இந்த தீர்ப்பு குறித்து அனைவருக்கும் எடுத்து இயம்புதல் வேண்டும். அதாவது, விளம்பரம் செய்தல் வேண்டும்.

அவர்கள் உரிமையினை பாதுகாக்கும் வண்ணம் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும் போன்ற பல்வேறு உத்தரவுகளை இந்த தீர்ப்பில் நீதிபதி வழங்கி இருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக Digital Divide என்று சொல்கிறார்கள், அதாவது, இணைய வழி சேவையினை பெறுபவர்கள், பெறாதவர்கள் என்கிற ஏற்றத்தாழ்வு இனிமேல் கொள்கை முழக்கமாக மட்டுமே இருக்கக்கூடாது, அவற்றினை சரி செய்யக்கூடிய அரசியலமைப்பு சாசனக் கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. இந்த சேவையினை தடையின்றி பெறக்கூடிய உரிமை அனைத்து குடிமக்களுக்கும் இருக்கிறது.

இந்த உரிமை அனைவரையும் உள்ளடக்கிய உரிமையாக இருக்க வேண்டும். Inclusive Digital Eco system என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ஷரத்து 21-ல் உயிர் வாழ்வதற்கான ஓர் இன்றியமையாத அங்கமாகும் என்கிற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நீதிபதி வழங்கி இருந்தார். இந்த தீர்ப்பானது மிக சாதகமான தாக்கத்தினை மாற்றுத்திறனாளிகள், அமில வீச்சு தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் வாழ்க்கையிலும் ஏற்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள்! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்


03.06.2025
சென்னை: நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டதிருத்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.சட்டசபையில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி தமிழக நகர்ப்புறம் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில் மாற்றுத்திறனாளிகள் நலனில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த 2 சட்ட முன்வடிவுகளை அறிமுகப்படுத்த போகிறோம். இந்த துறைக்கென நிதி ஒதுக்கீடு ரூ 667 கோடியாக இருந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் ரூ 1,432 கோடியாக உயருகிறது. நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கும் மாநிலம் தமிழகம்தான். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 1,493 மாற்றுத்திறனாளிகள் அரசுப் பணியைப் பெற்றுள்ளனர். இதேபோல, மாற்றுத் திறனாளிகளைப் பணியமர்த்துவதை தனியார்த் துறைகளில் ஊக்குவிக்க, குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தி இருந்தால், அந்த நிறுவனங்களுக்கு மாதம் ஒருவருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஊதிய மானியத்தை ஒரு ஆண்டுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளோம்.

இவற்றுக்கெல்லாம் மணிமகுடம் சூட்டும் வகையில் சட்டமசோதா நிறைவேற்றப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் இருக்கும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுகிறார்கள். இதனை நடைமுறைப்படுத்த, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்கள் முன்மொழிகிறேன். இந்த மசோதாக்கள் மூலம், மாற்றுத்திறனாளிகள் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்துகிற வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள் என ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து இரு சட்ட மசோதாக்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துவிட்டார்.

தற்போது உள்ளாட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். இந்த நிலையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு 650 மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத்திறனாளிகள் கிராம பஞ்சாயத்துகளிலும், 388 மாற்றுத்திறனாளிகள் ஊராட்சி ஒன்றியங்களிலும் மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் நியமிக்கப்படுவார்கள்.


Sunday, June 1, 2025

காது கேளாதோருக்கான விளையாட்டு போட்டி பரிசளிப்பு




28.05.2025 
புதுச்சேரி:தென் மாவட்ட அளவிலான காது கேளாதோர் கைப்பந்து, கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சார்பில், 5வது தென் மாவட்ட அளவிலான காது கேளாதோர் ஆண்கள் கைப்பந்து மற்றும் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள், லாஸ்பேட்டை பல்நோக்கு விளையாட்டு அரங்கில் நடந்தது.

இதில், புதுச்சேரி, விழுப்புரம், கடலுார், நெய்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த காது கேளாதோர் அணிகள் பங்கேற்றன.கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் விழுப்புரம் அணி முதலிடம், கடலூர் அணி இரண்டாமிடம் பெற்றன.

கூடைப்பந்து போட்டியில் நெய்வேலி அணி முதலிடம், விழுப்புரம் அணி இரண்டாமிடம், புதுச்சேரி அணி மூன்றாம் இடம் பிடித்தன.

வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, புதுச்சேரி காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் செயலாளர் பாசித், தலைவர் அய்யப்பன், அமைப்பு செயலாளர் சத்தியபுவனம் ஆகியோர் தலைமை தாங்கினார். விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை செயலாளர் சுந்தரேசன், விளையாட்டுத்துறை துணை இயக்குநர் வைத்தியநாதன் ஆகியோர் வெற்றி பெற்றனர் அணிகளுக்கு சாம்பியன்ஷிப் கோப்பைகளை வழங்கினர்.

விழாவில், ஆனந்தன், ராதாகிருஷ்ணன், ரோட்டரி கிளப் அகரம் தலைவர் சதீஷ்பாபு, ஜிஞ்சர் ஹோட்டலின் மேலாளர் ராஜேஷ், சட்ட ஆலோசகர் சரவணன், பொருளாளர் அஜித்குமார், கோபு, ஹபிலா சைகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வென்றவர்கள், வரும் ஜூலை மாதம் திருப்பதியில் நடக்கும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கின