FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, December 11, 2025

ஆபீசில் அமர்ந்துகொண்டே வெளியூரில் கணக்கெடுப்பு; மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கையை அறிய முடியுமா?



11.12.2025
சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக செல்லாமல், மாவட்ட அலுவலகங்களில் அமர்ந்து, மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக் கெடுப்பு நடத்தும் ஊழியர்களால், இதன் செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை அறிய கணக்கெடுக்கும் பணி, கடந்த ஆண்டு ஆக., மாதம் துவங்கியது. உலக வங்கி நிதி உதவியுடன், இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

இதன் வாயிலாக, புதிய மாற்றுத்திறனாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை, கல்வி, மருத்துவ சிகிச்சை மற்றும் அரசின் சேவைகள் கிடைக்கச் செய்வது தான் நோக்கம்.

அதன்படி, கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள, தலா ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு, 14 ஊழியர்கள் என, மாவட்டம்தோறும் 300 முதல் 400 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை, சேலம் உட்பட பல மாவட்டங்களில், கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், நேரடியாக வீடுகளுக்கு செல்லாமல், மாவட்ட அலுவலகத்தில் அமர்ந்து, மொபைல் போன் வழியாக மாற்றுத்திறனாளிகளை தொடர்பு கொள்கின்றனர். ஆவணங்களை, 'வாட்ஸாப்' செயலியில் அனுப்புமாறும் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து, பார்வையற்றோருக்கான சுய தொழில் மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்லமுத்து கூறியதாவது:

தமிழ்நாடு உரிமைகள் திட்டம் துவங்கி, ஓராண்டாகியும் பணிகள் முடியவில்லை. இப்பணியை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஊழியர்களும், முழு ஈடுபாட்டுடன் பணியாற்றவில்லை.

மாறாக, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து, மாற்றுத்திறனாளிகள் தரவுகளை பெறுகின்றனர். பின்னர், அவர்களை மொபைல் போனில் அழைத்து, கணக்கெடுப்பு நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.



No comments:

Post a Comment