FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Wednesday, December 3, 2025

பார் கவுன்சில் தேர்தலில் மாற்றுத்திறனாளி வேட்பாளர்களுக்கு கட்டண சலுகை கோரி வழக்கு; உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு



03.12.2025
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த தேர்தல் கண்காணிப்பு குழுவை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் மொத்தமுள்ள 25 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி 40 சதவிகிதத்திற்கும் குறைவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஓரிடத்தை ஒதுக்கவும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தேர்தல் கட்டணமாக 1,25,000 ரூபாய் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அல்லது சலுகை அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எஸ்.எம். வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.கௌதமன், வழக்கறிஞர் எஸ்.தீபிகா ஆகியோர், தேர்தலை தாமதப்படுத்துவதோ அல்லது தடுப்பதோ தங்கள் நோக்கம் இல்லை என்றும், இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். மேலும், நாட்கள் குறைவாக உள்ளதால் வருகிற தேர்தலில் தங்கள் கோரிக்கைகள் தேர்தல் குழுவால் கருத்தில் கொள்ள முடியாமல் போனாலும் எதிர்கால தேர்தல்களிலாவது இடஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அப்போது பார் கவுன்சில் தரப்பில், தேர்தல் நடைமுறைகளை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென காலக்கெடு நிர்ணயித்துள்ள உச்ச நீதிமன்றம், அதை கன்காணிக்க இமாச்சலப் பிரதேசம் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்தேர் தலைமையில் மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், பார் கவுன்சில் தேர்தலை நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதால் வேறு எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.

மேலும், மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த தேர்தல் கண்காணிப்பு குழுவை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.



No comments:

Post a Comment