03.12.2025
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் நியமித்த தேர்தல் கண்காணிப்பு குழுவை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் மொத்தமுள்ள 25 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி 40 சதவிகிதத்திற்கும் குறைவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஓரிடத்தை ஒதுக்கவும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தேர்தல் கட்டணமாக 1,25,000 ரூபாய் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அல்லது சலுகை அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எஸ்.எம். வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.கௌதமன், வழக்கறிஞர் எஸ்.தீபிகா ஆகியோர், தேர்தலை தாமதப்படுத்துவதோ அல்லது தடுப்பதோ தங்கள் நோக்கம் இல்லை என்றும், இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். மேலும், நாட்கள் குறைவாக உள்ளதால் வருகிற தேர்தலில் தங்கள் கோரிக்கைகள் தேர்தல் குழுவால் கருத்தில் கொள்ள முடியாமல் போனாலும் எதிர்கால தேர்தல்களிலாவது இடஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது பார் கவுன்சில் தரப்பில், தேர்தல் நடைமுறைகளை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென காலக்கெடு நிர்ணயித்துள்ள உச்ச நீதிமன்றம், அதை கன்காணிக்க இமாச்சலப் பிரதேசம் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்தேர் தலைமையில் மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், பார் கவுன்சில் தேர்தலை நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதால் வேறு எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த தேர்தல் கண்காணிப்பு குழுவை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் மொத்தமுள்ள 25 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி 40 சதவிகிதத்திற்கும் குறைவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஓரிடத்தை ஒதுக்கவும், தேர்தலில் போட்டியிடுவதற்கான தேர்தல் கட்டணமாக 1,25,000 ரூபாய் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அல்லது சலுகை அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் எஸ்.எம். வெற்றிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.கௌதமன், வழக்கறிஞர் எஸ்.தீபிகா ஆகியோர், தேர்தலை தாமதப்படுத்துவதோ அல்லது தடுப்பதோ தங்கள் நோக்கம் இல்லை என்றும், இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றும் வாதிட்டனர். மேலும், நாட்கள் குறைவாக உள்ளதால் வருகிற தேர்தலில் தங்கள் கோரிக்கைகள் தேர்தல் குழுவால் கருத்தில் கொள்ள முடியாமல் போனாலும் எதிர்கால தேர்தல்களிலாவது இடஒதுக்கீடு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது பார் கவுன்சில் தரப்பில், தேர்தல் நடைமுறைகளை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென காலக்கெடு நிர்ணயித்துள்ள உச்ச நீதிமன்றம், அதை கன்காணிக்க இமாச்சலப் பிரதேசம் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ராஜீவ் ஷக்தேர் தலைமையில் மூவர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், பார் கவுன்சில் தேர்தலை நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதால் வேறு எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த தேர்தல் கண்காணிப்பு குழுவை அணுகலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
.png)
No comments:
Post a Comment