FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, December 3, 2025

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்: உதயநிதி பெருமிதம்




சென்னை: மாற்றுத் திறனாளி விளை​யாட்டு வீரர்​களை ஊக்​கு​விப்​ப​தில் இந்​தி​யா​விலேயே தமிழகம் ‘நம்​பர் ஒன்’ மாநில​மாக திகழ்​வ​தாக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டாலின் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார்.

சிஎஸ்ஐ மெட்​ராஸ் டையோசீஸ் சார்​பில் நடை​பெற்ற தடைகளைத் தாண்​டிய சாம்​பியன்​கள் (சாம்​பியன்ஸ் பியாண்ட் பேரியர்​ஸ்) விளை​யாட்டு போட்​டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி விளை​யாட்டு வீரர்​களுக்கு பதக்​கம் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. துணை முதல்​வர் உதயநிதி வீரர்​களுக்கு பதக்​கம் அணி​வித்​து, சான்​றிதழ்​களை வழங்​கி​னார்.

பின்​னர் அவர் பேசி​ய​தாவது: மாற்​றுத்​திறன் குழந்​தைகளும், சிறப்பு குழந்​தைகளும் தடைகளை உடைத்து உண்​மை​யான சாம்​பியன்​களாக உரு​வாகி கொண்​டிருக்​கிறார்​கள். தமிழகத்​தில் இருந்து ஏராள​மான பாரா தடகள விளை​யாட்டு வீரர்​கள் தொடர்ந்து பல்​வேறு சாதனை​களைப் படைத்து வரு​கின்​றனர்.

அதற்​கேற்ப மாற்றுத் திறனாளி விளை​யாட்டு வீரர்​களை ஊக்​கு​விப்​ப​தில் இன்​றைக்கு தமிழகம் தான் இந்​தி​யா​விலேயே ‘நம்​பர் ஒன்’ மாநில​மாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் 250 மாற்​றுத்​திறன் வீரர், வீராங்​க​னை​களுக்கு ரூ.30 கோடிக்கு உயரிய ஊக்​கத்​தொகை, 500 பேருக்கு விளை​யாட்டு உபகரணங்​கள் வாங்க, பல்​வேறு சர்​வ​தேச, தேசிய போட்​டிகளில் கலந்​து​கொள்ள தமிழ்​நாடு சாம்​பியன்ஸ் பவுண்​டேஷன் மூலம் ரூ.8 கோடி, தேசிய மற்​றும் சர்​வ​தேசப் போட்​டிகள், பாராலிம்​பிக் போட்​டிகளில் பங்​கேற்று சாதனை படைத்த 5 மாற்​றுத்​திறன் வீரர், வீராங்​க​னை​களுக்கு 3 சதவீத இட ஒதுக்​கீட்​டின்படி அரசு வேலை உள்​ளிட்​டவை வழங்​கப்​பட்​டுள்​ளன.

இந்த ஆண்டு 25 மாற்​றுத்​திறன் வீரர்​களுக்கு அரசு வேலை வாய்ப்பை உரு​வாக்​கித் தர இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. மாற்​றுத்​திறன் வீரர், வீராங்​க​னை​கள் பயிற்சி பெறு​வதற்​காக, தலா ரூ.1.50 கோடி​யில் 5 மாவட்​டங்​களில் சிறப்பு பாரா விளை​யாட்டு மைதானங்கள் அமைக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மேலும் புதி​தாக 6 மாவட்​டங்​களில் பாரா விளை​யாட்டு மைதானங்​கள் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

அதே​போல் சென்​னை​யிலும், நவீன வசதி​களு​டன் கூடிய பாரா பேட்​மிண்​டன் அகாடமி முதன்​முறை​யாக உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. இவ்​வாறு அவர் பேசினார்.

இந்​நிகழ்​வில் அமைச்​சர்​கள் பி.கே.சேகர்​பாபு, மனோ தங்​க​ராஜ், மாநக​ராட்சி மேயர் பிரி​யா, மாநில சிறு​பான்​மை​யினர் ஆணை​யத் தலை​வர் ஜோ.அருண், விளை​யாட்​டுத் துறை செயலர் அதுல்யா மிஸ்​ரா, மெட்​ராஸ் டயோசீஸ் பிஷப் பால் ஃபி​ரான்​சிஸ் ரவிச்​சந்​திரன், சிஎஸ்ஐ மெட்​ராஸ்​ டையோசீஸ்​ நிர்​வாகி​கள்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.


No comments:

Post a Comment