FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, December 3, 2025

உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினர் விவகாரம்: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்னா




02.12.2025
சேலம்: நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாமன்ற உறுப்பினர் பதவி வழங்கியதைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தில் தர்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஓமலூர் அருகேயுள்ள கருப்பூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். பின்னர், திடீரென அவர்கள் முன்பகுதியில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் நகர போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் அளித்த கோரிக்கை மனு:

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். அதன்படி, தற்போது உள்ளாட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் இந்த மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்களை தேர்வுசெய்ய 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் குழுவினர் நியமன உறுப்பினர்களை முறையாக தேர்வு செய்யவில்லை.

எனவே, இந்த நியமனத்தை தமிழகம் முழுவதும் ரத்துசெய்து முறையாக தேர்வுசெய்து, தகுதிவாய்ந்த மாற்றத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்தக் கோரிக்கை மனுவை மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்கள் பெற்றுக் கொண்டதையடுத்து, தர்னாவில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.



No comments:

Post a Comment