FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, December 3, 2025

நியமன உறுப்பினர் முறைகேடு மாற்றுத்திறனாளிகள் தர்ணா


02.12.2025 
சேலம், ஒபூர் பேரூராட்சி, 13வது வார்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி அலெக்சாண்டர், 37. இவர், சக மாற்றுத்திறனாளிகளுடன், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தவர், பின், வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் தர்ணாவை கைவிடவில்லை.

கருப்பூர் பேரூராட்சியில், மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் பதவியில் முறைகேடு நடந்துள்ளது. கலெக்டர் தலைமையிலான குழுவினர், நேர்முக தேர்வு நடத்தாமல், முறைகேடாக 7 வது வார்டை சேர்ந்த தங்கமணி என்பவரை, மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினராக தேர்வு செய்துள்ளனர். சமூக சேவையில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளுக்கு, நியமன உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. இதேநிலை, சேலம் மாவட்டம் முழுவதும் உள்ளதால் தேர்வு செய்துள்ள அனைத்து நியமன உறுப்பினர்களையும் ரத்து செய்துவிட்டு, சமூக சேவையில் ஈடுபடும் தகுதி வாய்ந்த மாற்றுத்தினாளிகளுக்கு, நியமன உறுப்பினர் பதவியை வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

வாழப்பாடியை சேர்ந்த மாற்றுத்திறனாளி அசோக்குமார் கூறுகையில், ''வாழப்பாடி பேரூராட்சியில், தி.மு.க., ஆதரவாளர் என்ற ஒரே காரணத்துக்காக, பிலவேந்திரன் நியமன உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார்,'' என்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவல்லி, தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக கலெக்டர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என கூறியதையடுத்து, தர்ணா கைவிடப்பட்டது.



No comments:

Post a Comment