FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, December 25, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிதியுதவி உயர்வு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


23.12.2025
புதுச்சேரி: புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை, அரிசி தொகை, பண்டிகை இலவச துணி தொகை, பெட்ரோல் ஆகியவற்றை உயர்த்தி மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளர்கள் தின விழா ஆண்டுதோறும் டிசம்பர் 3ல் நடக்கும். நடப்பாண்டு தொடர் மழையால் இந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "மாற்றுத் திறனாளிகள் என சொல்லும்போது எத்தனை சதவீதம் இருந்தால் உதவிகள் கிடைக்கும் என்ற நிலையில் 40 சதவீதம் இருந்தாலே போதும் என்று உறுதி செய்துள்ளோம். மாற்றுத்திறனாளிகள் வண்டிக்கான பெட்ரோல் 25 லிட்டரில் இருந்து 5 லிட்டர் உயர்த்தி 30 லிட்டராக தரப்படும்.

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த செலவுகளை சமாளிக்க மாதாந்திர உதவித்தொகையை உயர்த்துகிறோம். ரூ.3,000 உதவித்தொகை வாங்குவோருக்கு ரூ.3,500 ஆகவும் ரூ.4,800 வாங்குவோருக்கு ரூ.5,500 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது 15 கிலோ அரிசிக்கு பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் அரசு செலுத்துகிறது. அது 20 கிலோ அரிசிக்கான பணமாக தரப்படும்.

தற்போது 15 கிலோ அரிசிக்கு கிலோவுக்கு ரூ.30 தருவதை ரூ.40 ஆக உயர்த்தி மாதம் ரூ.800 அரிசி பணம் தரப்படும். இலவச துணிக்கு பண்டிகை காலத்தில் ரூ.500 தருவதை ரூ.750 ஆக உயர்த்தி தரப்படும். உயர்த்தப்பட்ட தொகை விரைவில் தரப்படும் என்றார்.

புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழாவில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆளுநர்- முதல்வர் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதம்: முன்னதாக விழாவில் மாற்றுத்திறனாளி சங்கங்கள் நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டனர். வேலாயுதம் என்பவர் பேசும்போது, "நீண்ட காலம் முதல்வராக ரங்கசாமி இருக்கிறார். நமது கருத்துகள் கேட்பார்.

அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதும் செய்யவில்லை. பல நலத்திட்டங்களை பலருக்கு செய்தாலும் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யவில்லை. நம் பிரச்சினைகள் குறித்து அரசு கவலைப்படவில்லை." என்றார்.

அப்போது கீழே இருந்த மாற்றுத்திறனாளிகள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலாயுதம் தனது கருத்தை சொல்வதாக கூறினார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மோதல் ஏற்பட்டதையடுத்து போலீஸார் சமானதப்படுத்தினர். தொடர்ந்து வேலாயுதம் பேசினார்.


No comments:

Post a Comment