FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, December 3, 2025

மாற்றுத்திறனாளிகள் நம்மை விட பலசாலியாக உள்ளனர் – ஆளுநர் ஆர்.என்.ரவி


03.12.2025
சென்னை கிண்டியில் உள்ள லோக்பவனில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றி வரும் அறக்கட்டளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கிக் கவுரவித்தார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாற்றுத்திறனாளிகள் தம்மை விடப் பலசாலியாக உள்ளதாகவும், அவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் தம்மை போல் சக மனிதர்கள்தான் என்றும், அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், ராஜ் பவன் என்ற பெயரை மாற்றி லோக் பவன் என்று அறிவித்த முதல் நிகழ்ச்சியாக இது இருப்பதாகவும் ஆளுநர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment