FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Wednesday, May 18, 2016

காதுகேளாத மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்ற விவசாயி மகள்: மேற்படிப்புக்கு உதவ வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காதுகேளாதோர் மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சென்னை சிறுமலர் செவித் திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவி பி.காயத்ரி, பள்ளி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.
18.05.2016, காதுகேளாத மாணவர்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் பி.காயத்ரி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமலர் செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவி பி.காயத்திரி மொத்தமுள்ள 1,000 மதிப்பெண்களுக்கு 923 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் விவரம்: தமிழ் 156, பொருளாதாரம் 199, வணிகவியல் 196, கணக்குப்பதிவியல் 199, வணிக கணிதம் 173.

மாணவி காயத்ரியின் வெற்றி குறித்து அவரது தந்தை எம்.பழனிச் சாமி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

செவித்திறன் குறைபாடுடைய குழந்தையை ஏன் படிக்க வைக்கிறாய் என்று உறவினர்கள் என்னிடம் கூறினர். அதையெல்லாம், பொருட்படுத்தாமல் கல்விதான் என் மகளின் வாழ்க்கைக்கு உதவும் என எண்ணி விவசாயத்தில் வரும் வருமானத்தை வைத்து படிக்க வைத்தேன்.

படிப்பை மட்டுமே முழுமூச்சாக கொண்டு எனது மகளும் படித் தாள். அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு பி.காம் படிப்பு படித்துவிட்டு, வங்கி அதிகாரியாவதே காயத்ரியின் விருப்பம். விவசாய வருவாயை மட்டுமே நம்பியிருப்பதால் எனது மகளின் மேற்படிப்புக்கு யாரேனும் உதவினால் ஏற்றுக்கொள்வேன் என் றார்
தொடர்புக்கு பழனிச்சாமி: 9443991975.

No comments:

Post a Comment