FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, May 18, 2016

காதுகேளாத மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்ற விவசாயி மகள்: மேற்படிப்புக்கு உதவ வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காதுகேளாதோர் மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சென்னை சிறுமலர் செவித் திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவி பி.காயத்ரி, பள்ளி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.
18.05.2016, காதுகேளாத மாணவர்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் பி.காயத்ரி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமலர் செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவி பி.காயத்திரி மொத்தமுள்ள 1,000 மதிப்பெண்களுக்கு 923 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் விவரம்: தமிழ் 156, பொருளாதாரம் 199, வணிகவியல் 196, கணக்குப்பதிவியல் 199, வணிக கணிதம் 173.

மாணவி காயத்ரியின் வெற்றி குறித்து அவரது தந்தை எம்.பழனிச் சாமி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

செவித்திறன் குறைபாடுடைய குழந்தையை ஏன் படிக்க வைக்கிறாய் என்று உறவினர்கள் என்னிடம் கூறினர். அதையெல்லாம், பொருட்படுத்தாமல் கல்விதான் என் மகளின் வாழ்க்கைக்கு உதவும் என எண்ணி விவசாயத்தில் வரும் வருமானத்தை வைத்து படிக்க வைத்தேன்.

படிப்பை மட்டுமே முழுமூச்சாக கொண்டு எனது மகளும் படித் தாள். அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு பி.காம் படிப்பு படித்துவிட்டு, வங்கி அதிகாரியாவதே காயத்ரியின் விருப்பம். விவசாய வருவாயை மட்டுமே நம்பியிருப்பதால் எனது மகளின் மேற்படிப்புக்கு யாரேனும் உதவினால் ஏற்றுக்கொள்வேன் என் றார்
தொடர்புக்கு பழனிச்சாமி: 9443991975.

No comments:

Post a Comment