FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, May 18, 2016

காதுகேளாத மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்ற விவசாயி மகள்: மேற்படிப்புக்கு உதவ வேண்டுகோள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் காதுகேளாதோர் மாணவர்களில் மாநில அளவில் முதலிடம் பெற்ற சென்னை சிறுமலர் செவித் திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவி பி.காயத்ரி, பள்ளி நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.
18.05.2016, காதுகேளாத மாணவர்களில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் பி.காயத்ரி பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்.

சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமலர் செவித்திறன் குறைபாடுடையோர் பள்ளி மாணவி பி.காயத்திரி மொத்தமுள்ள 1,000 மதிப்பெண்களுக்கு 923 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் விவரம்: தமிழ் 156, பொருளாதாரம் 199, வணிகவியல் 196, கணக்குப்பதிவியல் 199, வணிக கணிதம் 173.

மாணவி காயத்ரியின் வெற்றி குறித்து அவரது தந்தை எம்.பழனிச் சாமி ‘தி இந்து’விடம் கூறிய தாவது:

செவித்திறன் குறைபாடுடைய குழந்தையை ஏன் படிக்க வைக்கிறாய் என்று உறவினர்கள் என்னிடம் கூறினர். அதையெல்லாம், பொருட்படுத்தாமல் கல்விதான் என் மகளின் வாழ்க்கைக்கு உதவும் என எண்ணி விவசாயத்தில் வரும் வருமானத்தை வைத்து படிக்க வைத்தேன்.

படிப்பை மட்டுமே முழுமூச்சாக கொண்டு எனது மகளும் படித் தாள். அதற்கான பலன் இப்போது கிடைத்துள்ளது. மேற்கொண்டு பி.காம் படிப்பு படித்துவிட்டு, வங்கி அதிகாரியாவதே காயத்ரியின் விருப்பம். விவசாய வருவாயை மட்டுமே நம்பியிருப்பதால் எனது மகளின் மேற்படிப்புக்கு யாரேனும் உதவினால் ஏற்றுக்கொள்வேன் என் றார்
தொடர்புக்கு பழனிச்சாமி: 9443991975.

No comments:

Post a Comment