FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Thursday, January 2, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும். விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.






02.01.2025
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி
தெரிவித்திருப்பது:

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட கை, கால் பாதிக்கப்பட்ட காது கேளாத, குறைந்த அளவிலான மனவளர்ச்சிக் குன்றியவர், 75 சதவீதம் மேல் மனநலன் குன்றிய தாய்மார்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கும் திட்டம் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களின்அடையாள அட்டை, ஆதார் அட்டை, தையல் தொழில் பயிற்சி சான்றிதழுடன் இணைய வழியிலோ அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வந்தோ விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் 8438736944 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே தேர்வில் பங்கேற்றவர்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, தேர்வு பெற்றுள்ள விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்பவர்களுக்கு விரைவில் தேர்வு நடத்தி, தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படவுள்ளதால், தகுதியான மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை (ஜன. 3) மாலை 5 மணிக்குள் இணைய வழியிலோ அல்லது மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் நேரிலோ பிண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment