FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Thursday, January 2, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும். விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.






02.01.2025
விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் க.சுப்பிரமணி
தெரிவித்திருப்பது:

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட கை, கால் பாதிக்கப்பட்ட காது கேளாத, குறைந்த அளவிலான மனவளர்ச்சிக் குன்றியவர், 75 சதவீதம் மேல் மனநலன் குன்றிய தாய்மார்கள் சுயதொழில் செய்து வருமானம் ஈட்டும் வகையில், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கும் திட்டம் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங்களின்அடையாள அட்டை, ஆதார் அட்டை, தையல் தொழில் பயிற்சி சான்றிதழுடன் இணைய வழியிலோ அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வந்தோ விண்ணப்பிக்கலாம்.

ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் 8438736944 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே தேர்வில் பங்கேற்றவர்கள் இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு, தேர்வு பெற்றுள்ள விவரம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்பவர்களுக்கு விரைவில் தேர்வு நடத்தி, தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படவுள்ளதால், தகுதியான மாற்றுத் திறனாளிகள் வெள்ளிக்கிழமை (ஜன. 3) மாலை 5 மணிக்குள் இணைய வழியிலோ அல்லது மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் நேரிலோ பிண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment