FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, February 13, 2016

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

12.02.2016, கடலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஜனவரி முதல் அடுத்த மாதம்(மார்ச்) வரை முடிவடையும் காலாண்டுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட உள்ளது.

மனுதாரர் உடல் உறுப்பு நலம் குன்றியவராக அல்லது செவிபுலன் இழந்தவராக இருந்து தமது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் உயிர் பதிவேட்டில் காத்திருப்பவராக இருத்தல் அவசியம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான வயது வரம்பு 45. மற்றவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருக்க கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது சேர்ந்து படித்துக்கொண்டிருக்க கூடாது. ஆனால் தொலைதூர கல்வியின் மூலம் படிப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தனது கல்வியை தமிழ்நாட்டிலேயே படித்து இருக்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை

இந்த விவரங்களின் அடிப்படையில் தகுதி உள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் அவர்களது கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை முதலியவற்றுடன் நேரில் அலுவலகம் வந்து அதற்கான விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு செய்தவர்கள் மட்டும் புதிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசால் வழங்கப்படும்.

விண்ணப்ப படிவம்

எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும். விண்ணப்ப படிவம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வினியோகம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment