FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, February 13, 2016

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

12.02.2016, கடலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஜனவரி முதல் அடுத்த மாதம்(மார்ச்) வரை முடிவடையும் காலாண்டுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட உள்ளது.

மனுதாரர் உடல் உறுப்பு நலம் குன்றியவராக அல்லது செவிபுலன் இழந்தவராக இருந்து தமது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் உயிர் பதிவேட்டில் காத்திருப்பவராக இருத்தல் அவசியம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான வயது வரம்பு 45. மற்றவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருக்க கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது சேர்ந்து படித்துக்கொண்டிருக்க கூடாது. ஆனால் தொலைதூர கல்வியின் மூலம் படிப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தனது கல்வியை தமிழ்நாட்டிலேயே படித்து இருக்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை

இந்த விவரங்களின் அடிப்படையில் தகுதி உள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் அவர்களது கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை முதலியவற்றுடன் நேரில் அலுவலகம் வந்து அதற்கான விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு செய்தவர்கள் மட்டும் புதிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசால் வழங்கப்படும்.

விண்ணப்ப படிவம்

எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும். விண்ணப்ப படிவம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வினியோகம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment