FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, February 13, 2016

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

12.02.2016, கடலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஜனவரி முதல் அடுத்த மாதம்(மார்ச்) வரை முடிவடையும் காலாண்டுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட உள்ளது.

மனுதாரர் உடல் உறுப்பு நலம் குன்றியவராக அல்லது செவிபுலன் இழந்தவராக இருந்து தமது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் உயிர் பதிவேட்டில் காத்திருப்பவராக இருத்தல் அவசியம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான வயது வரம்பு 45. மற்றவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருக்க கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது சேர்ந்து படித்துக்கொண்டிருக்க கூடாது. ஆனால் தொலைதூர கல்வியின் மூலம் படிப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தனது கல்வியை தமிழ்நாட்டிலேயே படித்து இருக்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை

இந்த விவரங்களின் அடிப்படையில் தகுதி உள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் அவர்களது கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை முதலியவற்றுடன் நேரில் அலுவலகம் வந்து அதற்கான விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு செய்தவர்கள் மட்டும் புதிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசால் வழங்கப்படும்.

விண்ணப்ப படிவம்

எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும். விண்ணப்ப படிவம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வினியோகம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment