FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Tuesday, July 12, 2016

தொழில் தொடங்க 25% மானியத்துடன் கடனுதவி

 12.07.2016
புதிதாகத் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதுநிலை ஆட்சியர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

படித்த வேலை வாய்ப்பற்றவர்களை, முதலாம் தலைமுறை தொழில் முனைவோராக்கும் வகையில் தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. 25 சதவீத அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. பட்டம், பட்டயம், தொழிற்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் கடன் திட்டப்படி உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சத்திற்கும் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை நிதியுதவி தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

கடன் பெறத் தகுதிகள்: இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு (பட்டியல் இனத்தவர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு 45-வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் இதர திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் கடன் பெற இயலாது.

பொருளாதார ரீதியாக சாத்தியக் கூறுள்ள அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும். மேலும் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து வியாபார நடவடிக்கைகள், விவசாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சிறப்பு வகை தொழில்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள தொழில் வகைகள் தகுதியற்றதாகிறது.

பயனாளிகள் பங்களிப்பு: இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொதுப்பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவு பயனாளிகள் அதாவது பட்டியல் இனத்தோர், பட்டியல் இனத்தை சார்ந்த மலைவாழ் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 5 சதவிகிதம் தங்களது பங்கீடாக செலுத்த வேண்டும்.

மானியம்: இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது 25 லட்சம் இதில் எது குறைவாக உள்ளதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ. 1 கோடியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மானியம் ரூ. 25 லட்சம் என வரையறுக்கப்படும்.

மேலும் 2015-16-ம் ஆண்டுக்கு கரூர் மாவட்டத்திற்கு மானியத் தொகைக்கான இலக்கு ரூ. 1.90 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 50 சதவீதத்திற்கு பெண்களுக்கான குறியீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் (w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌ g‌o‌v.‌i‌n‌n‌e‌e‌d‌s) என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இதுதொடர்பாக மாவட்டத் தொழில் மையம், சத்தியமூர்த்திநகர், தாந்தோணிமலை, கரூர் என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment