FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, July 12, 2016

தொழில் தொடங்க 25% மானியத்துடன் கடனுதவி

 12.07.2016
புதிதாகத் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதுநிலை ஆட்சியர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

படித்த வேலை வாய்ப்பற்றவர்களை, முதலாம் தலைமுறை தொழில் முனைவோராக்கும் வகையில் தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. 25 சதவீத அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. பட்டம், பட்டயம், தொழிற்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் கடன் திட்டப்படி உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சத்திற்கும் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை நிதியுதவி தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

கடன் பெறத் தகுதிகள்: இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு (பட்டியல் இனத்தவர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு 45-வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் இதர திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் கடன் பெற இயலாது.

பொருளாதார ரீதியாக சாத்தியக் கூறுள்ள அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும். மேலும் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து வியாபார நடவடிக்கைகள், விவசாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சிறப்பு வகை தொழில்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள தொழில் வகைகள் தகுதியற்றதாகிறது.

பயனாளிகள் பங்களிப்பு: இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொதுப்பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவு பயனாளிகள் அதாவது பட்டியல் இனத்தோர், பட்டியல் இனத்தை சார்ந்த மலைவாழ் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 5 சதவிகிதம் தங்களது பங்கீடாக செலுத்த வேண்டும்.

மானியம்: இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது 25 லட்சம் இதில் எது குறைவாக உள்ளதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ. 1 கோடியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மானியம் ரூ. 25 லட்சம் என வரையறுக்கப்படும்.

மேலும் 2015-16-ம் ஆண்டுக்கு கரூர் மாவட்டத்திற்கு மானியத் தொகைக்கான இலக்கு ரூ. 1.90 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 50 சதவீதத்திற்கு பெண்களுக்கான குறியீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் (w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌ g‌o‌v.‌i‌n‌n‌e‌e‌d‌s) என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இதுதொடர்பாக மாவட்டத் தொழில் மையம், சத்தியமூர்த்திநகர், தாந்தோணிமலை, கரூர் என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment