FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Tuesday, July 12, 2016

தொழில் தொடங்க 25% மானியத்துடன் கடனுதவி

 12.07.2016
புதிதாகத் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதுநிலை ஆட்சியர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

படித்த வேலை வாய்ப்பற்றவர்களை, முதலாம் தலைமுறை தொழில் முனைவோராக்கும் வகையில் தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. 25 சதவீத அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. பட்டம், பட்டயம், தொழிற்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் கடன் திட்டப்படி உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சத்திற்கும் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை நிதியுதவி தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

கடன் பெறத் தகுதிகள்: இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு (பட்டியல் இனத்தவர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு 45-வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் இதர திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் கடன் பெற இயலாது.

பொருளாதார ரீதியாக சாத்தியக் கூறுள்ள அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும். மேலும் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து வியாபார நடவடிக்கைகள், விவசாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சிறப்பு வகை தொழில்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள தொழில் வகைகள் தகுதியற்றதாகிறது.

பயனாளிகள் பங்களிப்பு: இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொதுப்பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவு பயனாளிகள் அதாவது பட்டியல் இனத்தோர், பட்டியல் இனத்தை சார்ந்த மலைவாழ் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 5 சதவிகிதம் தங்களது பங்கீடாக செலுத்த வேண்டும்.

மானியம்: இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது 25 லட்சம் இதில் எது குறைவாக உள்ளதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ. 1 கோடியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மானியம் ரூ. 25 லட்சம் என வரையறுக்கப்படும்.

மேலும் 2015-16-ம் ஆண்டுக்கு கரூர் மாவட்டத்திற்கு மானியத் தொகைக்கான இலக்கு ரூ. 1.90 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 50 சதவீதத்திற்கு பெண்களுக்கான குறியீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் (w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌ g‌o‌v.‌i‌n‌n‌e‌e‌d‌s) என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இதுதொடர்பாக மாவட்டத் தொழில் மையம், சத்தியமூர்த்திநகர், தாந்தோணிமலை, கரூர் என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment