FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, July 12, 2016

தொழில் தொடங்க 25% மானியத்துடன் கடனுதவி

 12.07.2016
புதிதாகத் தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு 25 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட முதுநிலை ஆட்சியர் காகர்லாஉஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

படித்த வேலை வாய்ப்பற்றவர்களை, முதலாம் தலைமுறை தொழில் முனைவோராக்கும் வகையில் தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. 25 சதவீத அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. பட்டம், பட்டயம், தொழிற்கல்வி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் கடன் திட்டப்படி உற்பத்தி மற்றும் சேவை தொழில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 லட்சத்திற்கும் அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை நிதியுதவி தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

கடன் பெறத் தகுதிகள்: இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். சிறப்புப் பிரிவினருக்கு (பட்டியல் இனத்தவர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு 45-வயதுக்குள் இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் இதர திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் கடன் பெற இயலாது.

பொருளாதார ரீதியாக சாத்தியக் கூறுள்ள அனைத்து உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு கடனுதவி வழங்கப்படும். மேலும் சுற்றுச்சூழலை பாதிக்காத தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து வியாபார நடவடிக்கைகள், விவசாயம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் சிறப்பு வகை தொழில்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள தொழில் வகைகள் தகுதியற்றதாகிறது.

பயனாளிகள் பங்களிப்பு: இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் பொதுப்பிரிவு பயனாளிகள் தங்களுடைய பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் செலுத்த வேண்டும். சிறப்புப் பிரிவு பயனாளிகள் அதாவது பட்டியல் இனத்தோர், பட்டியல் இனத்தை சார்ந்த மலைவாழ் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 5 சதவிகிதம் தங்களது பங்கீடாக செலுத்த வேண்டும்.

மானியம்: இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது 25 லட்சம் இதில் எது குறைவாக உள்ளதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். திட்ட மதிப்பீடு ரூ. 1 கோடியை விட அதிகமாக இருக்கும் பட்சத்தில் மானியம் ரூ. 25 லட்சம் என வரையறுக்கப்படும்.

மேலும் 2015-16-ம் ஆண்டுக்கு கரூர் மாவட்டத்திற்கு மானியத் தொகைக்கான இலக்கு ரூ. 1.90 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 50 சதவீதத்திற்கு பெண்களுக்கான குறியீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் (w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌ g‌o‌v.‌i‌n‌n‌e‌e‌d‌s) என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் இதுதொடர்பாக மாவட்டத் தொழில் மையம், சத்தியமூர்த்திநகர், தாந்தோணிமலை, கரூர் என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment