FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, January 9, 2016

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், 09 January 2016
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெகதீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு, 5ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பில் தவறியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித் தொகையினை பெறலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 5 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் உதவித்தொகை பெற முடியும். மாற்றுத் திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதுமானது. உதவித்தொகை பெறுவதற்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் கல்வி பயின்றவராகவும், வேறு எந்தப் பணியிலும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். பள்ளி அல்லது கல்லூரியில் படிப்பை தொடர்பவர்கள் உதவித்தொகை பெற இயலாது.

தகுதியுடைய பயனாளிகள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ்களுடன், திண்டுக்கல் அலுவலகத்துக்கு வரவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

வழங்கப்படும் தொகை விவரம்:

பிரதி மாதம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு ரூ.100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ. 200, பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்களுக்கு ரூ. 300, மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டம் முடித்தவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்களுக்கு, மீண்டும் உதவித்தொகை வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment