FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, January 9, 2016

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், 09 January 2016
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெகதீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு, 5ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பில் தவறியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித் தொகையினை பெறலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 5 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் உதவித்தொகை பெற முடியும். மாற்றுத் திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதுமானது. உதவித்தொகை பெறுவதற்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் கல்வி பயின்றவராகவும், வேறு எந்தப் பணியிலும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். பள்ளி அல்லது கல்லூரியில் படிப்பை தொடர்பவர்கள் உதவித்தொகை பெற இயலாது.

தகுதியுடைய பயனாளிகள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ்களுடன், திண்டுக்கல் அலுவலகத்துக்கு வரவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

வழங்கப்படும் தொகை விவரம்:

பிரதி மாதம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு ரூ.100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ. 200, பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்களுக்கு ரூ. 300, மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டம் முடித்தவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்களுக்கு, மீண்டும் உதவித்தொகை வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment