FLASH NEWS: போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு! ***** அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ***** வரும் 2030ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் மொராக்கோ அரசு, 30 லட்சம் நாய்களை கொல்ல திட்டமிட்டுள்ளது. இது, விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மறுக்கப்படும் சட்டத்திற்கு தலிபான் இணையமைச்சரான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ***** விண்வெளியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஆய்வு- சென்னை ஐ.ஐ.டி.க்கு பிரதமர் மோடி பாராட்டு ***** உத்தரபிரதேசம் மாநிலம் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ***** கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகுமென சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையானதை அடுத்து கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ***** கோமியத்தின் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிறந்த அறிவியல் பத்திரிகைகள் சான்றுகளுடன் இதனை வெளியிட்டுள்ளன” என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி விளக்கம் அளித்துள்ளார். ***** சென்னை: துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்களில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2 கிலோ தங்கம், ஐபோன்கள் கடத்திய 13 பயணிகளை (கடத்தல் குருவிகளை) சுங்கத்துறை லஞ்ச ஒழிப்பு பிரிவு தனிப்படையினர் பிடித்தனர். இவர்களுக்கு சாதகமாக செயல்பட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***** ஜனவரி 16, 2025 அதிகாலை நாம் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சத்தமில்லாமல் இஸ்ரோ பெரும் சாதனையைப் படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக ‘எஸ்டிஎக்ஸ்01’ (SDX01) என்கிற துரத்தும் விண்கலத்தையும் ‘எஸ்டிஎக்ஸ்02’ (SDX02) என்கிற இலக்கு விண்கலத்தையும் விண்வெளியில் இணைத்து சாதனை படைத்துள்ளது. *****

Saturday, January 9, 2016

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், 09 January 2016
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெகதீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு, 5ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பில் தவறியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித் தொகையினை பெறலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 5 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் உதவித்தொகை பெற முடியும். மாற்றுத் திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதுமானது. உதவித்தொகை பெறுவதற்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் கல்வி பயின்றவராகவும், வேறு எந்தப் பணியிலும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். பள்ளி அல்லது கல்லூரியில் படிப்பை தொடர்பவர்கள் உதவித்தொகை பெற இயலாது.

தகுதியுடைய பயனாளிகள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ்களுடன், திண்டுக்கல் அலுவலகத்துக்கு வரவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

வழங்கப்படும் தொகை விவரம்:

பிரதி மாதம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு ரூ.100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ. 200, பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்களுக்கு ரூ. 300, மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டம் முடித்தவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்களுக்கு, மீண்டும் உதவித்தொகை வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment