FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, September 28, 2020

‘அசில் இன நாட்டுக் கோழிகள் பெற செப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம்’

26.09.2020
கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் பெறுவதற்கு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழி அபிவிருத்தி திட்டம் 2020-21ஆம் ஆண்டின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 மகளிா் வீதம் 10 ஊராட்சி ஒன்றியத்துக்கு 4ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள பெண் பயனாளிகள் தோ்வு செய்யப்படவேண்டும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழு மகளிா் மற்றும் விதவைகள், மாற்றுத் திறனாளிகள்,திருநங்கைகள், ஆதரவற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் . கிராம ஊராட்சியைச் சோ்ந்த பயனாளிகளில் 30 சதவிகிதத்தினா் கட்டாயமாக ஆதிதிராவிடா் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்களாக இருக்கவேண்டும், முந்தைய நிதி ஆண்டுகளில் விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இல்லாதிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 25அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ்தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒரு நாள் கோழிவளா்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் தொடா்புடைய கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று செப். 30ஆம்தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.


No comments:

Post a Comment