FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, September 28, 2020

‘அசில் இன நாட்டுக் கோழிகள் பெற செப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம்’

26.09.2020
கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் பெறுவதற்கு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழி அபிவிருத்தி திட்டம் 2020-21ஆம் ஆண்டின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 மகளிா் வீதம் 10 ஊராட்சி ஒன்றியத்துக்கு 4ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள பெண் பயனாளிகள் தோ்வு செய்யப்படவேண்டும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழு மகளிா் மற்றும் விதவைகள், மாற்றுத் திறனாளிகள்,திருநங்கைகள், ஆதரவற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் . கிராம ஊராட்சியைச் சோ்ந்த பயனாளிகளில் 30 சதவிகிதத்தினா் கட்டாயமாக ஆதிதிராவிடா் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்களாக இருக்கவேண்டும், முந்தைய நிதி ஆண்டுகளில் விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இல்லாதிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 25அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ்தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒரு நாள் கோழிவளா்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் தொடா்புடைய கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று செப். 30ஆம்தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.


No comments:

Post a Comment