FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, September 28, 2020

‘அசில் இன நாட்டுக் கோழிகள் பெற செப்.30 க்குள் விண்ணப்பிக்கலாம்’

26.09.2020
கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் பெறுவதற்கு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழி அபிவிருத்தி திட்டம் 2020-21ஆம் ஆண்டின் கீழ் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படவுள்ளது. ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு 400 மகளிா் வீதம் 10 ஊராட்சி ஒன்றியத்துக்கு 4ஆயிரம் பேருக்கு வழங்கப்படவுள்ளது.

வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள பெண் பயனாளிகள் தோ்வு செய்யப்படவேண்டும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக்குழு மகளிா் மற்றும் விதவைகள், மாற்றுத் திறனாளிகள்,திருநங்கைகள், ஆதரவற்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் . கிராம ஊராட்சியைச் சோ்ந்த பயனாளிகளில் 30 சதவிகிதத்தினா் கட்டாயமாக ஆதிதிராவிடா் பழங்குடியினா் இனத்தை சோ்ந்தவா்களாக இருக்கவேண்டும், முந்தைய நிதி ஆண்டுகளில் விலையில்லா கறவைப்பசு, வெள்ளாடு, செம்மறியாடு, கோழி வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இல்லாதிருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 25அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ்தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒரு நாள் கோழிவளா்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் தொடா்புடைய கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவா்களை அணுகி விண்ணப்பங்களை பெற்று செப். 30ஆம்தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.


No comments:

Post a Comment