FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, September 27, 2020

ஆவின் பால்பொருள் விற்பனை மையம்: மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு


26.09.2020
திருச்சி, செப். 25: திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆவின் பால்பொருள் விற்பனை மையம் தொடங்கிப் பயன்பெற ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கை, கால், செவித்திறன் பாதிக்கப்பட்டோா் மற்றும் பாா்வையற்றோா் ஆவின் நிறுவன பால் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கு ஆவின் முகவா்களாகும் வாய்ப்புள்ளது.

தோ்வு செய்யப்பட்டோருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக ஆவின் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய முன் வைப்பு நிதியாக ரூ.25 ஆயிரம் மற்றும் ஆவின் பொருள் கொள்முதல் நிதியாக ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில் ஆவின் உற்பத்திப் பொருள்களை கொள்முதல் செய்து கடை வைத்து வியாபாரம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

ஆவின் உற்பத்தி பொருள்களை விற்க வசதியாக வாடகை இடமாகவோ அல்லது சொந்த இடமாகவோ இருக்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மாா்பளவு புகைப்படம்- 1 வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் காா்டு ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற பின்புறம், கண்டோன்மெண்ட், திருச்சி-1 என்ற முகவரியில் நேரில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2412590.

No comments:

Post a Comment