FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, January 14, 2016

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம், 14 January 2016
வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளி இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 750-ம், பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ. 1,000-மும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் ஓராண்டுக்கும் மேற்பட்டவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது வரம்பு- 45. இதர வகுப்பினருக்கான வயது வரம்பு- 40.

தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், உரிய சான்றிதழ்கள், வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றை இணைத்து வருகிற 29-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குக் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment