FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, December 3, 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்- அரசாணை பிறப்பித்து 10 மாதமாகியும் முடிக்கப்படாத பணிகள்

03.12.2013, 
அரசு மற்றும் தனியார் பொதுக் கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தளப் பாதை உள்ளிட்ட சிறப்பு வசதிகளை 6 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவு, 10 மாதங்களாகியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

பொதுக் கட்டிங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதி கள் செய்து தரப்படும் என்று 2011-12-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி மாநகராட்சி, நகராட்சி களில் உள்ள மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், நூலகம், மருத்துவமனை, தங்கும் விடுதி, திருமண மண்டபம், தியேட்டர், கேளிக்கை பூங்கா, நீச்சல் குளம், பொழுதுபோக்கு மையம், கலையரங்கம், கண்காட்சிக் கூடம், அருங்காட்சியகம், விளையாட்டுத் திடல், வங்கி ஏ.டி.எம்., காப்பீட்டு நிறுவனம், நகைக்கடை, ஓட்டல், ஷாப்பிங் மால், பஸ் நிலையம், பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் பொதுக்கட்டிடங்களில் லிப்ட் மற்றும் படிக்கட்டு வரை மாற்றுத் திறனாளிகள் போவதற்கு வசதியாக சாய்தள பாதை, வீல் சேர் உள்ளே போய் திரும்பும் வகையில் பெரிய லிப்ட், வளர்ச்சி குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்காக மாடி படிக்கட்டில் 90 சென்டிமீட்டர், 75 சென்டி மீட்டர் உயர கைப்பிடிகள், சிறப்புக் கழிப்பிடம், கார் பார்க்கிங் ஆகிய வசதிகளை 6 மாதங்களில் செய்து முடிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அரசு உத்தரவிட்டது. ஆனால், 10 மாதங்க ளாகியும் இத்திட்டம் முழுமையாக முடிக்கப்படவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.எம்.என்.தீபக் கூறுகையில், “மிகக்குறைவான அரசு கட்டிடங்க ளில்தான் எங்களுக்கான வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், தனியார் கட்டிடங்களில் அந்தளவு கூட வசதி செய்து தரப்படவில்லை” என்றார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசுக்கு சொந்தமாக 8 ஆயிரத்து 274 கட்டிடங்கள் உள்ளன.

இதில் 7 ஆயிரத்து 639 கட்டிடங்க ளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்கள் லட்சக்கணக்கில் உள்ளன.

ஆனால், தனியார் கட்டிடங்களில் இந்தத் திட்டத்தின் செயலாக்கம், ஆமை வேகத்தில்தான் நடக்கி றது. இருப்பினும், தனியார் கட்டிடங்களில் இந்த வசதிகளை செய்து கொடுக்க கெடு எதுவும் விதிக்கவில்லை.

இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளும் சமூக த்தில் ஓர் அங்கம் என்பதை ஒவ்வொ ருவரும் உணர வேண்டும். மக்கள் பங்களிப்புடன்தான் இந்தத் திட்டத்தை முழுமையாக நிறை வேற்ற முடியும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Thanks to 

No comments:

Post a Comment