FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, December 3, 2013

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள்- அரசாணை பிறப்பித்து 10 மாதமாகியும் முடிக்கப்படாத பணிகள்

03.12.2013, 
அரசு மற்றும் தனியார் பொதுக் கட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தளப் பாதை உள்ளிட்ட சிறப்பு வசதிகளை 6 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவு, 10 மாதங்களாகியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

பொதுக் கட்டிங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதி கள் செய்து தரப்படும் என்று 2011-12-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி மாநகராட்சி, நகராட்சி களில் உள்ள மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், நூலகம், மருத்துவமனை, தங்கும் விடுதி, திருமண மண்டபம், தியேட்டர், கேளிக்கை பூங்கா, நீச்சல் குளம், பொழுதுபோக்கு மையம், கலையரங்கம், கண்காட்சிக் கூடம், அருங்காட்சியகம், விளையாட்டுத் திடல், வங்கி ஏ.டி.எம்., காப்பீட்டு நிறுவனம், நகைக்கடை, ஓட்டல், ஷாப்பிங் மால், பஸ் நிலையம், பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் பொதுக்கட்டிடங்களில் லிப்ட் மற்றும் படிக்கட்டு வரை மாற்றுத் திறனாளிகள் போவதற்கு வசதியாக சாய்தள பாதை, வீல் சேர் உள்ளே போய் திரும்பும் வகையில் பெரிய லிப்ட், வளர்ச்சி குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்காக மாடி படிக்கட்டில் 90 சென்டிமீட்டர், 75 சென்டி மீட்டர் உயர கைப்பிடிகள், சிறப்புக் கழிப்பிடம், கார் பார்க்கிங் ஆகிய வசதிகளை 6 மாதங்களில் செய்து முடிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 1-ம் தேதி அரசு உத்தரவிட்டது. ஆனால், 10 மாதங்க ளாகியும் இத்திட்டம் முழுமையாக முடிக்கப்படவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு துணைத் தலைவர் டி.எம்.என்.தீபக் கூறுகையில், “மிகக்குறைவான அரசு கட்டிடங்க ளில்தான் எங்களுக்கான வசதிகள் செய்து கொடுத்துள்ளனர். ஆனால், தனியார் கட்டிடங்களில் அந்தளவு கூட வசதி செய்து தரப்படவில்லை” என்றார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக அரசுக்கு சொந்தமாக 8 ஆயிரத்து 274 கட்டிடங்கள் உள்ளன.

இதில் 7 ஆயிரத்து 639 கட்டிடங்க ளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்கள் லட்சக்கணக்கில் உள்ளன.

ஆனால், தனியார் கட்டிடங்களில் இந்தத் திட்டத்தின் செயலாக்கம், ஆமை வேகத்தில்தான் நடக்கி றது. இருப்பினும், தனியார் கட்டிடங்களில் இந்த வசதிகளை செய்து கொடுக்க கெடு எதுவும் விதிக்கவில்லை.

இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளும் சமூக த்தில் ஓர் அங்கம் என்பதை ஒவ்வொ ருவரும் உணர வேண்டும். மக்கள் பங்களிப்புடன்தான் இந்தத் திட்டத்தை முழுமையாக நிறை வேற்ற முடியும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
Thanks to 

No comments:

Post a Comment