FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, December 23, 2013

மாற்றுத்திறனாளிகளின் சனநாயக உரிமைகள்...!

தமிழகத்தில் உள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை சுமார் 18 இலட்சத்திலிருந்து 22 இலட்சம் (18 இலட்சம் 2001 ஆண்டு கணக்கெடுப்பு. அரசு புள்ளி விபரம்) ஐக்கியநாடுகளின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சாசனத்தில் இந்தியா கைச்சாத்திட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. (Ratification in UNCRPD). எவ்விதத்திலும் எவ்வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்குதலோ, வேறுபாடு காட்டுதலோ கூடாது; சம உரிமை, சம வாய்ப்பு, சமமான பங்கேற்பு என்பது அனைத்து மட்டத்திலும் இருக்க வேண்டும் என்பதை இந்த உரிமை சாசனம் தெளிவாக, ஆணித்தரமாக உணர்த்துகிறது. இதனையே மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டுச் சட்டமும் கூறுகிறது. (Persons with Disabilities Act 1995).
ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில்(2011) தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர்களுக்கான விதிமுறையில் "செவிட்டு ஊமைகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது' என்ற விதியை முக்கியமான விதிகளில் மூன்றாவது விதியாக வைத்திருக்கின்றது. இந்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டு சட்டம் தமிழக அரசிற்கு பொருந்தாதா? இப்பிரச்னையை ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை? மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் இருந்தும் ஏன் இவ்விடயத்தில் மெளனமாக இருக்கின்றன? அரசியல் கட்சிகள் ஏன் இவ்விடயத்தில் மெளனமாக இருக்கின்றன?
1. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கென கிட்டத்தட்ட 13 பக்கங்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு போட்டியிட ஒரு மாற்றுத்திறனாளிக்குக் கூட வாய்ப்பளித்ததாகத் தெரியவில்லை.
2) கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக முதல்வராய் இருந்த திரு.கருணாநிதி அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும். (3/3/2010 திருச்சி பொதுக் கூட்டம்) சட்டமன்ற பாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு பெற்றுத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலிலோ, தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலோ எந்த மாற்றுத்திறனாளிக்கும் வாய்ப்பளித்தாகத் தெரியவில்லை.
3) மாற்றுத்திறனாளிகளில் 70லிருந்து 80 சதவிகிதத்தினர் தலித்களாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் கட்சிகளாக தங்களை அடையாளப்படுத்துபவர்கள் உணர்வார்களா? மாற்றுத்திறனாளிகள் பற்றிய அக்கறை உண்டா?
4) அன்னிய நாடுகளில் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களின் விடுதலை பற்றிப் பேசும் அரசியல் கட்சிகள், சொந்த நாட்டில் அடிமைகளைவிட மிகவும் கீழாக நடத்தப்பட்டு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பற்றி என்ன கருத்து கொண்டுள்ளன?
freedomஉள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான விதியை அகற்ற, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை ஏற்று அவர்களுக்கு அரசியல் உரிமைகள் அளிக்க, சமூக அக்கறையுள்ள அமைப்புகள், சமூக அக்கறையுள்ள அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். அனைத்து மக்களின் பங்கேற்பும், பிரதிநிதித்துவமுமே ஜனநாயகம். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் அவர்களுக்கான சட்டங்களை இயற்றுவது எவ்வளவு பாரதூரமானது? அனைவரும் சமம், அனைவருக்கும் சமமான உரிமை, அனைவரின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்தல் என்பதே சனநாயகத்திற்கு ஏற்புடையது.
- சூர்ய.நாகப்பன்

No comments:

Post a Comment