FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, December 23, 2013

மாற்றுத்திறனாளிகளின் சனநாயக உரிமைகள்...!

தமிழகத்தில் உள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை சுமார் 18 இலட்சத்திலிருந்து 22 இலட்சம் (18 இலட்சம் 2001 ஆண்டு கணக்கெடுப்பு. அரசு புள்ளி விபரம்) ஐக்கியநாடுகளின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சாசனத்தில் இந்தியா கைச்சாத்திட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. (Ratification in UNCRPD). எவ்விதத்திலும் எவ்வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்குதலோ, வேறுபாடு காட்டுதலோ கூடாது; சம உரிமை, சம வாய்ப்பு, சமமான பங்கேற்பு என்பது அனைத்து மட்டத்திலும் இருக்க வேண்டும் என்பதை இந்த உரிமை சாசனம் தெளிவாக, ஆணித்தரமாக உணர்த்துகிறது. இதனையே மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டுச் சட்டமும் கூறுகிறது. (Persons with Disabilities Act 1995).
ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில்(2011) தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர்களுக்கான விதிமுறையில் "செவிட்டு ஊமைகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது' என்ற விதியை முக்கியமான விதிகளில் மூன்றாவது விதியாக வைத்திருக்கின்றது. இந்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டு சட்டம் தமிழக அரசிற்கு பொருந்தாதா? இப்பிரச்னையை ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை? மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் இருந்தும் ஏன் இவ்விடயத்தில் மெளனமாக இருக்கின்றன? அரசியல் கட்சிகள் ஏன் இவ்விடயத்தில் மெளனமாக இருக்கின்றன?
1. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கென கிட்டத்தட்ட 13 பக்கங்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு போட்டியிட ஒரு மாற்றுத்திறனாளிக்குக் கூட வாய்ப்பளித்ததாகத் தெரியவில்லை.
2) கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக முதல்வராய் இருந்த திரு.கருணாநிதி அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும். (3/3/2010 திருச்சி பொதுக் கூட்டம்) சட்டமன்ற பாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு பெற்றுத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலிலோ, தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலோ எந்த மாற்றுத்திறனாளிக்கும் வாய்ப்பளித்தாகத் தெரியவில்லை.
3) மாற்றுத்திறனாளிகளில் 70லிருந்து 80 சதவிகிதத்தினர் தலித்களாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் கட்சிகளாக தங்களை அடையாளப்படுத்துபவர்கள் உணர்வார்களா? மாற்றுத்திறனாளிகள் பற்றிய அக்கறை உண்டா?
4) அன்னிய நாடுகளில் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களின் விடுதலை பற்றிப் பேசும் அரசியல் கட்சிகள், சொந்த நாட்டில் அடிமைகளைவிட மிகவும் கீழாக நடத்தப்பட்டு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பற்றி என்ன கருத்து கொண்டுள்ளன?
freedomஉள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான விதியை அகற்ற, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை ஏற்று அவர்களுக்கு அரசியல் உரிமைகள் அளிக்க, சமூக அக்கறையுள்ள அமைப்புகள், சமூக அக்கறையுள்ள அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். அனைத்து மக்களின் பங்கேற்பும், பிரதிநிதித்துவமுமே ஜனநாயகம். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் அவர்களுக்கான சட்டங்களை இயற்றுவது எவ்வளவு பாரதூரமானது? அனைவரும் சமம், அனைவருக்கும் சமமான உரிமை, அனைவரின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்தல் என்பதே சனநாயகத்திற்கு ஏற்புடையது.
- சூர்ய.நாகப்பன்

No comments:

Post a Comment