FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Monday, December 23, 2013

மாற்றுத்திறனாளிகளின் சனநாயக உரிமைகள்...!

தமிழகத்தில் உள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை சுமார் 18 இலட்சத்திலிருந்து 22 இலட்சம் (18 இலட்சம் 2001 ஆண்டு கணக்கெடுப்பு. அரசு புள்ளி விபரம்) ஐக்கியநாடுகளின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சாசனத்தில் இந்தியா கைச்சாத்திட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. (Ratification in UNCRPD). எவ்விதத்திலும் எவ்வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்குதலோ, வேறுபாடு காட்டுதலோ கூடாது; சம உரிமை, சம வாய்ப்பு, சமமான பங்கேற்பு என்பது அனைத்து மட்டத்திலும் இருக்க வேண்டும் என்பதை இந்த உரிமை சாசனம் தெளிவாக, ஆணித்தரமாக உணர்த்துகிறது. இதனையே மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டுச் சட்டமும் கூறுகிறது. (Persons with Disabilities Act 1995).
ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில்(2011) தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர்களுக்கான விதிமுறையில் "செவிட்டு ஊமைகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது' என்ற விதியை முக்கியமான விதிகளில் மூன்றாவது விதியாக வைத்திருக்கின்றது. இந்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டு சட்டம் தமிழக அரசிற்கு பொருந்தாதா? இப்பிரச்னையை ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை? மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் இருந்தும் ஏன் இவ்விடயத்தில் மெளனமாக இருக்கின்றன? அரசியல் கட்சிகள் ஏன் இவ்விடயத்தில் மெளனமாக இருக்கின்றன?
1. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கென கிட்டத்தட்ட 13 பக்கங்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு போட்டியிட ஒரு மாற்றுத்திறனாளிக்குக் கூட வாய்ப்பளித்ததாகத் தெரியவில்லை.
2) கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக முதல்வராய் இருந்த திரு.கருணாநிதி அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும். (3/3/2010 திருச்சி பொதுக் கூட்டம்) சட்டமன்ற பாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு பெற்றுத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலிலோ, தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலோ எந்த மாற்றுத்திறனாளிக்கும் வாய்ப்பளித்தாகத் தெரியவில்லை.
3) மாற்றுத்திறனாளிகளில் 70லிருந்து 80 சதவிகிதத்தினர் தலித்களாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் கட்சிகளாக தங்களை அடையாளப்படுத்துபவர்கள் உணர்வார்களா? மாற்றுத்திறனாளிகள் பற்றிய அக்கறை உண்டா?
4) அன்னிய நாடுகளில் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களின் விடுதலை பற்றிப் பேசும் அரசியல் கட்சிகள், சொந்த நாட்டில் அடிமைகளைவிட மிகவும் கீழாக நடத்தப்பட்டு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பற்றி என்ன கருத்து கொண்டுள்ளன?
freedomஉள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான விதியை அகற்ற, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை ஏற்று அவர்களுக்கு அரசியல் உரிமைகள் அளிக்க, சமூக அக்கறையுள்ள அமைப்புகள், சமூக அக்கறையுள்ள அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். அனைத்து மக்களின் பங்கேற்பும், பிரதிநிதித்துவமுமே ஜனநாயகம். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் அவர்களுக்கான சட்டங்களை இயற்றுவது எவ்வளவு பாரதூரமானது? அனைவரும் சமம், அனைவருக்கும் சமமான உரிமை, அனைவரின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்தல் என்பதே சனநாயகத்திற்கு ஏற்புடையது.
- சூர்ய.நாகப்பன்

No comments:

Post a Comment