FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Monday, December 23, 2013

மாற்றுத்திறனாளிகளின் சனநாயக உரிமைகள்...!

தமிழகத்தில் உள்ள மொத்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை சுமார் 18 இலட்சத்திலிருந்து 22 இலட்சம் (18 இலட்சம் 2001 ஆண்டு கணக்கெடுப்பு. அரசு புள்ளி விபரம்) ஐக்கியநாடுகளின் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சாசனத்தில் இந்தியா கைச்சாத்திட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. (Ratification in UNCRPD). எவ்விதத்திலும் எவ்வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்குதலோ, வேறுபாடு காட்டுதலோ கூடாது; சம உரிமை, சம வாய்ப்பு, சமமான பங்கேற்பு என்பது அனைத்து மட்டத்திலும் இருக்க வேண்டும் என்பதை இந்த உரிமை சாசனம் தெளிவாக, ஆணித்தரமாக உணர்த்துகிறது. இதனையே மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டுச் சட்டமும் கூறுகிறது. (Persons with Disabilities Act 1995).
ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில்(2011) தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர்களுக்கான விதிமுறையில் "செவிட்டு ஊமைகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது' என்ற விதியை முக்கியமான விதிகளில் மூன்றாவது விதியாக வைத்திருக்கின்றது. இந்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான 1995ஆம் ஆண்டு சட்டம் தமிழக அரசிற்கு பொருந்தாதா? இப்பிரச்னையை ஏன் யாருமே கண்டு கொள்வதில்லை? மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொண்டு நிறுவனங்கள் இருந்தும் ஏன் இவ்விடயத்தில் மெளனமாக இருக்கின்றன? அரசியல் கட்சிகள் ஏன் இவ்விடயத்தில் மெளனமாக இருக்கின்றன?
1. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கென கிட்டத்தட்ட 13 பக்கங்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு போட்டியிட ஒரு மாற்றுத்திறனாளிக்குக் கூட வாய்ப்பளித்ததாகத் தெரியவில்லை.
2) கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக முதல்வராய் இருந்த திரு.கருணாநிதி அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும். (3/3/2010 திருச்சி பொதுக் கூட்டம்) சட்டமன்ற பாராளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய இடஒதுக்கீடு பெற்றுத் தரப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலிலோ, தற்போதைய உள்ளாட்சித் தேர்தலிலோ எந்த மாற்றுத்திறனாளிக்கும் வாய்ப்பளித்தாகத் தெரியவில்லை.
3) மாற்றுத்திறனாளிகளில் 70லிருந்து 80 சதவிகிதத்தினர் தலித்களாகவும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் கட்சிகளாக தங்களை அடையாளப்படுத்துபவர்கள் உணர்வார்களா? மாற்றுத்திறனாளிகள் பற்றிய அக்கறை உண்டா?
4) அன்னிய நாடுகளில் அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழர்களின் விடுதலை பற்றிப் பேசும் அரசியல் கட்சிகள், சொந்த நாட்டில் அடிமைகளைவிட மிகவும் கீழாக நடத்தப்பட்டு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பற்றி என்ன கருத்து கொண்டுள்ளன?
freedomஉள்ளாட்சித் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான விதியை அகற்ற, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளை ஏற்று அவர்களுக்கு அரசியல் உரிமைகள் அளிக்க, சமூக அக்கறையுள்ள அமைப்புகள், சமூக அக்கறையுள்ள அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். அனைத்து மக்களின் பங்கேற்பும், பிரதிநிதித்துவமுமே ஜனநாயகம். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் இல்லாமல் அவர்களுக்கான சட்டங்களை இயற்றுவது எவ்வளவு பாரதூரமானது? அனைவரும் சமம், அனைவருக்கும் சமமான உரிமை, அனைவரின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்தல் என்பதே சனநாயகத்திற்கு ஏற்புடையது.
- சூர்ய.நாகப்பன்

No comments:

Post a Comment