FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Saturday, December 28, 2013

மாற்றுதிறனாளி புதிய சட்டத்தை உடன் நிறைவேற்ற கோரி டிச 31 நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் - சென்னையிலும் நடக்கிறது - வாரீர்

ஊனமுற்றோர் உரிமைக்கான புதிய சட்டமுன்வடிவு
டிசம்பர் 31 மாலை முதல் நள்ளிரவு 12 மணி வரை மெழுகுவர்த்தி ஏந்தி நாடு முழுவதும் போராட்டம்


(இடமிருந்து வலமாக) மூளைவளர்ச்சி சிதைந்தோருக்காக செயல்பட்டுக்கொண்டிருக்கும் மேரி பரூவா, ஊனமுற்றோரின் திறமைகளை வளர்த்தெடுப்பதற்கான குழுவின் செயலாளர்  ஷ்யாமளா/ ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாவேத் அபிதி/ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் தேசிய செயலாளர் முரளீதரன், காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ். நாராயணன் மற்றும் பார்வையற்றோருக்கான தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் தீபேந்திரா மோனோசா ஆகியோர் உள்ளனர். அனைவரும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உரையாற்றினார்கள். நாராயணன் உரையை கைவிரல்கள் மூலம் அடையாளம் காட்டும் மொழிபெயர்ப்பாளர் மொழியாக்கம் செய்தார். அதேபோன்று அனைவரது உரையையும் நாராயணனும் மொழிபெயர்ப்பாளரின் உதவிகொண்டு கேட்டார்.

புதுதில்லி, டிச.27-ஊனமுற்றோர் உரிமைகளுக்கான புதிய சட்டமுன்வடிவை பிப்ரவரியில் கூடும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது நிறைவேற்ற வலியுறுத்தி, டிசம்பர் 31 மாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை புதுதில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் இல்லம் முன்பும் மற்றும் அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திட ஊனமுற்றோர்களுக்கான அமைப்புகள் தீர்மானித்துள்ளன.இது தொடர்பாக ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் தேசிய செயலாளர் முரளீதரன் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாவேத் அபிதி ஆகியோர் தலைமையில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வெள்ளியன்று மதியம் தில்லி, பெண்கள் பத்திரிகையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது அவர்கள் கூறியதாவது:ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 2007 ஆம் ஆண்டு ஊனமுற்றோருக்கான கன்வென்ஷன் அளித்துள்ள விதிகளை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதலும் அளித்துள்ளது. ஊனமுற்றோருக்கு உரிமைகள் வழங்கும் மிக முக்கியமான இந்தச் சட்டமுன்வடிவிற்கு நான்கு ஆண்டுகள் கழித்து டிசம்பர் 13 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

குளிர்காலக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அரசுத்தரப்பில் கூறப்பட்டது. ஆயினும் என்ன காரணத்தாலோ குளிர்காலக் கூட்டத்தொடர் லோக்பால் சட்டமுன்வடிவை நிறைவேற்றியவுடனேயே காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. ஊனமுற்றோருக்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்படவே இல்லை. எனவே 2014 பொதுத்தேர்தலுக்கு முன் பிப்ரவரியில் குறுகிய காலமே நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இச்சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இச்சட்டமுன்வடிவின்மீது விவாதம் நடைபெற்று அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம். ஒருவேளை கால அவகாசம் இல்லையெனில், விவாதமின்றியாவது இது நிறைவேற்றப்பட்டாக வேண்டும் என்று கோருகிறோம். இதனை வலியுறுத்தி, வரவிருக்கும் டிசம்பர் 31 மாலை 5 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை புதுதில்லியில் குடியரசுத் துணைத் தலைவர் இல்லத்தின் முன்பும், மற்றும் பல்வேறு மாநிலத் தலைநகர்களின்முன்பும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தவுள்ளோம். அரசு செவிசாய்த்து பிப்ரவரியில் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இச்சட்ட முன்வடிவு கொண்டுவந்து நிறைவேற்றப்படாவிட்டால் எங்கள் போராட்டத்தை ஜனநாயக ரீதியில் மேலும் வலுவாக எடுத்துச்செல்லத் திட்டமிட்டுள்ளோம். எங்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தோம். எங்கள் வேண்டுகோளுக்கு செவிமடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் மட்டும்தான் நாளை சனிக்கிழமையன்று மதியம் 12 மணிக்கு எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கித்தந்திருக்கிறார். அவரை நாங்கள் சந்திக்க இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.தமிழகத்தில் சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் தர்மாபுரம் பகுதியில் டிசம்பர் 31 மாலை 5 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணிவரை மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் செயலாளர் நம்புராஜன் தெரிவித்துள்ளார்.
Click here for
மாற்றுதிறனாளி புதிய சட்டத்தை உடன் நிறைவேற்ற கோரி டிச 31  நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

No comments:

Post a Comment